மேலும் அறிய

Nashik Explosion: நாசிக்கில் பலத்த சத்தத்துடன் வெடி விபத்து.. 2 பேர் பலி, பலர் காயம்

நாசிக்கில் ரசாயன தொழிற்சாலையில் நேர்ந்த வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள,  முண்டேகான் பகுதியின் இகத்புரியில் ஜிண்டால் குழுமத்தின் ரசாயான தொழிற்சாலை அமைந்துள்ளது. அங்கு, வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர்.

பாய்லர் வெடித்து விபத்து:

காலை 11 மணியளவில் ஒரு பாய்லர் எதிர்பாராத விதமாக பலத்த சத்தத்துடன், வெடித்து சிதற ஆலையில்  தீப்பற்றியது. உடனடியாக  தீ மளமளவென ஆலையின் மற்ற பகுதிக்கும் வேகமாக பரவியது. தீ கொளுந்துவிட்டு எரிந்து, பல அடி உயரத்திற்கு கரும்புகை சூழ அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.  இதனிடையே, ஆலையில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டிருந்து அங்கிருந்து  வெளியேறினர்.

தீயையணைக்கும் பணிகள் தீவிரம்:

அதேநேரம், தீ வேகமாக பரவியதில் சிலர் ஆலையில் இருந்து உடனடியாக வெளியேற முடியாமல் தீப்பற்றிய பகுதிக்குள் சிக்கிக்கொண்டனர்.  இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அதோடு, மஹிந்திரா & மஹிந்திரா, கோட்டி டோலனாகாவில் உள்ள தீயணைப்புப் பிரிவினரும், ஜிண்டால் நிறுவனத்தின் தீயணைப்புத் துறையினரும் இணைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து, ஆலையில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

 

ராணுவம் உதவி:

எளிதில் தீப்பற்றும் ரசாயானம் உள்ளே இருந்ததால் தீ தொடர்ந்து கட்டுக்கடங்காமல் எரிய, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து,  நீண்ட போராட்டத்திற்குப் பின் தீ கட்டுக்கொள் கொண்டு வரப்பட்டது. விபத்தில் பெண் உட்பட இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் 10-க்கும் அதிகமானோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரூ.5 லட்சம் நிவாரணம்:

விபத்துக்கான சரியான காரணம் இதுவரை தெரியாத நிலையில், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே சம்பவ இடத்திற்கு சென்று நேரில் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததோடு,  அவர்களது குடும்பத்தினருக்கு  5 லட்ச ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்? என்ன பிரச்னை? இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்? என்ன பிரச்னை? இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Chennai Peripheral Ring Road: சென்னை எல்லைச்சாலை திட்டம்! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! விரைவில் திறக்கப்படும் முக்கிய பகுதி!
சென்னை எல்லைச்சாலை திட்டம்! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! விரைவில் திறக்கப்படும் முக்கிய பகுதி!
WPL 2026: ஆர்சிபி-யின் அதிரடி ஆட்டம்! குஜராத்தை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது!
WPL 2026: ஆர்சிபி-யின் அதிரடி ஆட்டம்! குஜராத்தை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது!
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்? என்ன பிரச்னை? இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்? என்ன பிரச்னை? இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Chennai Peripheral Ring Road: சென்னை எல்லைச்சாலை திட்டம்! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! விரைவில் திறக்கப்படும் முக்கிய பகுதி!
சென்னை எல்லைச்சாலை திட்டம்! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! விரைவில் திறக்கப்படும் முக்கிய பகுதி!
WPL 2026: ஆர்சிபி-யின் அதிரடி ஆட்டம்! குஜராத்தை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது!
WPL 2026: ஆர்சிபி-யின் அதிரடி ஆட்டம்! குஜராத்தை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது!
Car Mileage: மைலேஜ் விவரங்களை அடித்து விடும் கார் நிறுவனங்கள்.. ஆப்படித்த மத்திய அரசு - இனி ஏசி கட்டாயம்
Car Mileage: மைலேஜ் விவரங்களை அடித்து விடும் கார் நிறுவனங்கள்.. ஆப்படித்த மத்திய அரசு - இனி ஏசி கட்டாயம்
Bengaluru Power Shutdown: பெங்களூருவில் நாளை(21-01-2026) 8 மணி நேர மின் தடை! உங்கள் பகுதியில் மின்சாரம் இருக்குமா? BESCOM அறிவிப்பு
Bengaluru Power Shutdown: பெங்களூருவில் நாளை(21-01-2026) 8 மணி நேர மின் தடை! உங்கள் பகுதியில் மின்சாரம் இருக்குமா? BESCOM அறிவிப்பு
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Embed widget