மேலும் அறிய

Nashik Explosion: நாசிக்கில் பலத்த சத்தத்துடன் வெடி விபத்து.. 2 பேர் பலி, பலர் காயம்

நாசிக்கில் ரசாயன தொழிற்சாலையில் நேர்ந்த வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள,  முண்டேகான் பகுதியின் இகத்புரியில் ஜிண்டால் குழுமத்தின் ரசாயான தொழிற்சாலை அமைந்துள்ளது. அங்கு, வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர்.

பாய்லர் வெடித்து விபத்து:

காலை 11 மணியளவில் ஒரு பாய்லர் எதிர்பாராத விதமாக பலத்த சத்தத்துடன், வெடித்து சிதற ஆலையில்  தீப்பற்றியது. உடனடியாக  தீ மளமளவென ஆலையின் மற்ற பகுதிக்கும் வேகமாக பரவியது. தீ கொளுந்துவிட்டு எரிந்து, பல அடி உயரத்திற்கு கரும்புகை சூழ அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.  இதனிடையே, ஆலையில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டிருந்து அங்கிருந்து  வெளியேறினர்.

தீயையணைக்கும் பணிகள் தீவிரம்:

அதேநேரம், தீ வேகமாக பரவியதில் சிலர் ஆலையில் இருந்து உடனடியாக வெளியேற முடியாமல் தீப்பற்றிய பகுதிக்குள் சிக்கிக்கொண்டனர்.  இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அதோடு, மஹிந்திரா & மஹிந்திரா, கோட்டி டோலனாகாவில் உள்ள தீயணைப்புப் பிரிவினரும், ஜிண்டால் நிறுவனத்தின் தீயணைப்புத் துறையினரும் இணைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து, ஆலையில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

 

ராணுவம் உதவி:

எளிதில் தீப்பற்றும் ரசாயானம் உள்ளே இருந்ததால் தீ தொடர்ந்து கட்டுக்கடங்காமல் எரிய, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து,  நீண்ட போராட்டத்திற்குப் பின் தீ கட்டுக்கொள் கொண்டு வரப்பட்டது. விபத்தில் பெண் உட்பட இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் 10-க்கும் அதிகமானோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரூ.5 லட்சம் நிவாரணம்:

விபத்துக்கான சரியான காரணம் இதுவரை தெரியாத நிலையில், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே சம்பவ இடத்திற்கு சென்று நேரில் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததோடு,  அவர்களது குடும்பத்தினருக்கு  5 லட்ச ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Bofors Case: நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?
நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?
Social Media: 2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?
2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?
எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget