மேலும் அறிய

மான் வேட்டை வழக்கு: சல்மான்கான் மனு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம்!

இதுதொடர்பான மனுக்கள் இனி ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படும்

1998ம் ஆண்டு அரியவகை மானை வேட்டையாடிய வழக்கில் சல்மான்கான் மனுவை இடமாற்றம் செய்ய ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது. இதுதொடர்பான மனுக்கள் இனி உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படும்.

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் சல்மான் கான்.1998ம் ஆண்டு கங்கனி காடுகளில் இவர் ப்ளாக்பக் என்னும் அரியவகை மானை வேட்டையாடினார். இது தண்டனைக்குரிய குற்றம் என்பதால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. விசாரணை நீதி மன்றத்தால் இவருக்கு இந்த குற்றத்தில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதில் தொடர்புடைய சைஃப் அலி கான் மற்றும் தபு இருவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். வழக்கின் மேல்கட்ட விசாரணை ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தற்போது இதில் சல்மான்கானின் மனு ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து அந்த நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

முன்னதக,

தனது பிறந்தநாளுக்கு முன்பு, சல்மான் கான் தனது பன்வெல் பண்ணை வீட்டிற்குச் சென்றிருந்தார். அங்கு அவரை விஷமற்ற பாம்பு கடித்துள்ளது. இச்சம்பவம் நேற்று அதிகாலை நடந்தது.  உடனே, சல்மான் கான் காமோத்தேவில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு,  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருக்கு விஷ எதிர்ப்பு மருந்து செலுத்தப்பட்டு, சில மணிநேர கண்காணிப்புக்குப் பிறகு  வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். 

சல்மான்கானை பாம்பு கடித்த தகவல் அறிந்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் அது விஷமற்ற பாம்பு என்று தெரியவந்ததை தொடர்ந்து, ரசிகர்கள் நார்மல் மோடிற்கு வந்தனர். இந்நிலையில் பாம்பு கடித்த சம்பவம் குறித்தும் என்ன நடந்தது எனவும் சல்மான்கான் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அதில், பாம்பு கடித்த சம்பவம் என் அப்பாவுக்கு தெரிந்ததும் அவர் எனக்கு போன் செய்தார். பாம்பு உயிரோடு இருக்கிறதா என்று கேட்டார். நான் டைகரும் புலியும் உயிரோடு இருக்கிறோம் என்றேன். (சல்மான்கானை செல்லமாக டைகர் என்று ரசிகர்கள் அழைப்பார்கள்). பாம்பை அடித்தீர்களா என்று என் தந்தை கேட்டார்.  நாங்கள் எதுவும் காயப்படுத்தவில்லை. அந்த பாம்பை காட்டுக்குள் விட்டுவிட்டோம் என்றேன்.

பாம்பு அறைக்குள் வந்ததும் நான் ஒரு நீண்ட குச்சியை எடுத்து தூக்கி வெளியே விட்டுவிடலாம் என்று நினைத்தேன். என்னிடம் சிறிய குச்சிதான் இருந்தது. அதை வைத்து தூக்கினேன். அந்த பாம்பு அந்த குச்சி வழியாக சரசரவென மேலேறி என் கையருகே வந்துவிட்டது. பண்ணையில் வேலை பார்ப்பவர்கள் பாம்பு.. பாம்பு என கூச்சலிட்டார்கள். 

அந்த பாம்பு என்னை ஒருமுறை கடித்தது. மறுபடி அங்கிருந்தவர்கள் ஹாஸ்பிட்டல்.. ஹாஸ்பிட்டல் என கூச்சலிட்டனர். பாம்பு மீண்டு கடித்துவிட்டது. உடனடியாக மருத்துவமனை விரைந்தோம். அது விஷப்பாம்பு இல்லை என்பதால் சிக்கல் இல்லாமல் போய்விட்டது. அந்த பாம்பும் பயந்து இருந்தது. அதனால் தான் என்னைக் கடித்தது என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget