மேலும் அறிய

Independence Day: 1,800 சிறப்பு விருந்தினர்கள்..செல்பி எடுக்க ஸ்பெஷல் ஸ்பாட்..சுதந்திர தினத்திற்காக மத்திய அரசின் மெகா பிளான்

இந்தாண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு 1,800 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

உலக வரலாற்றில் பல சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும், அதில் சிலதுதான் பிற்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி, வரலாற்று நிகழ்வாக பதிவாகியிருக்கிறது. அந்த வகையில், இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த வரலாறு உலகின் மகத்தான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. வரும் 15ஆம் தேதி, இந்தியா சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகளை நிறைவு செய்து, 77ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 

77ஆவது சுதந்திர தினம்:

இதை வெகு விமரிசையாக கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. வழக்கமாக, சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து, பிரதமர் உரையாற்றுவார். அந்த வகையில், இந்தாண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு 1,800 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

அரசு நிர்வாகத்தில் பொது மக்களின் பங்கேற்பை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிறப்பாக நிர்வகிக்கப்படும் கிராமங்களின் தலைவர்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் மற்றும் பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா ஆகியவற்றின் கீழ் பயன் பெறும் பயனாளிகள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, மத்திய விஸ்டா திட்டத்தின் ஷ்ரம் யோகிகள் (கட்டுமானத் தொழிலாளர்கள்), காதி தொழிலாளர்கள், நாட்டின் எல்லையில் சாலைகளை அமைப்பதில் ஈடுபட்டவர்கள், அம்ரித் சரோவர் மற்றும் ஹர் கர் ஜல் யோஜனா மற்றும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் மீனவர்கள் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின் மெகா பிளான்:

நாட்டின் தலைநகரான டெல்லியில் செல்ஃபி எடுப்பதற்கு என 12 சிறப்பு இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் பயன்பெற்றவர்கள், இங்கு செல்ஃபி எடுத்து பதிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், "சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 15-20 வரை MyGov போர்ட்டலில் பாதுகாப்பு அமைச்சகத்தால் ஆன்லைன் செல்ஃபி போட்டி நடத்தப்படும். 

போட்டியில் பங்கேற்க விரும்புவோர், செல்ஃபி எடுப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு ஸ்பாட்டுகளில் ஏதனும் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்பாட்டுகளுக்கு சென்று செல்ஃபி எடுக்கவும், அவற்றை MyGov தளத்தில் பதிவேற்றவும் மக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். பன்னிரண்டு வெற்றியாளர்கள், ஒவ்வொரு ஸ்பாட்டிலும் இருந்தும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். வெற்றி பெறுபவர்களுக்கு தலா 10,000 ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும்.

பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் மேஜர் நிகிதா நாயர் மற்றும் மேஜர் ஜாஸ்மின் கவுர் ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றுவதில் பிரதமருக்கு உதவுவார்கள். பிரதமர் தேசியக் கொடியை ஏற்றியவுடன், இந்திய விமானப்படையின் மார்க்-III துருவ் என்ற இரண்டு மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் அந்த இடத்தில் மலர் இதழ்களை தூவும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பிரதமர் மோடி தனது டிவிட்டர் கணக்கின்  முகப்பு படத்தில் (DP) தேசிய கொடியை வைத்து, நாட்டு மக்கள் அனைவரும் அதையே பின்பற்ற வலியுறுத்தியுள்ளார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

2026 ITR தாக்கல்: ஜூலை 31 & ஆகஸ்ட் 31 முக்கிய தேதிகள். ரீஃபண்ட் விரைவாக பெற என்ன செய்ய வேண்டும்?
2026 ITR தாக்கல்: ஜூலை 31 & ஆகஸ்ட் 31 முக்கிய தேதிகள். ரீஃபண்ட் விரைவாக பெற என்ன செய்ய வேண்டும்?
TN Bypolls: இடைத்தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்.! தமிழ்நாட்டிற்கு எப்போது.?
இடைத்தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்.! தமிழ்நாட்டிற்கு எப்போது.?
இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு!.. கடைசி நேர டிக்கெட் புக்கிங்கிற்கு அனுமதி!.விபரம் இதோ..
இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு!.. கடைசி நேர டிக்கெட் புக்கிங்கிற்கு அனுமதி!.விபரம் இதோ..
வணிக சிலிண்டர் விலை குறைந்தது... ஆனால் வீட்டு LPG விலையில் மாற்றமா? இதோ பதில்!!!
வணிக சிலிண்டர் விலை குறைந்தது... ஆனால் வீட்டு LPG விலையில் மாற்றமா? இதோ பதில்!!!

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs TVK Govt.: “கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது“: பொளந்து கட்டிய உதயநிதி
“கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது“: பொளந்து கட்டிய உதயநிதி
Exclusive : ‘அரசு வழக்கறிஞர்களின் பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
‘பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
Gold Silver Rate July 2nd: ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
‘Edappadi Palanisamy : போறவங்க போங்க’ மதிமுக மாதிரி அதிமுக நடத்திக்குறேன் – தில் எடப்பாடி..!
‘மதிமுக மாதிரி அதிமுகவை நடத்திகிறேன்’ தில் எடப்பாடி..!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Samsung Galaxy S25 Ultra Discount: சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா உங்க கனவு போனா.? ரூ.45,000 கம்மியா கிடைக்கப்போகுது.. அள்ளிடுங்க.!
சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா உங்க கனவு போனா.? ரூ.45,000 கம்மியா கிடைக்கப்போகுது.. அள்ளிடுங்க.!
Skoda Kodiaq RS Sold Out: தரமான சம்பவம்.! ரூ.67 லட்சம் ஸ்கோடா கோடியாக் RS சில நிமிடங்கள்ல விற்றுத் தீர்ந்தது எப்படி.? அதுல என்ன இருக்கு.?
தரமான சம்பவம்.! ரூ.67 லட்சம் ஸ்கோடா கோடியாக் RS சில நிமிடங்கள்ல விற்றுத் தீர்ந்தது எப்படி.? அதுல என்ன இருக்கு.?
Embed widget