மேலும் அறிய

பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் திருட்டுப்போன 141 பழங்கால பொருட்கள்..

வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் பெரிய திருட்டு நடைபெற்றுள்ளது. அதன்படி கிட்டதட்ட 141 பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா பகுதியில் வேளாண் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இதில் பல்வேறு வகையான பழங்கால பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் பெரிய திருட்டு நடைபெற்றுள்ளது. அதன்படி கிட்டதட்ட 141 பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள  முதல் அறையில் 52 பொருட்களும், இரண்டாவது அறையில் 47 பொருட்களும், புல்காரி ஆடை அறையிலிருந்தும் 12 பொருட்கள் திருடப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. 


பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் திருட்டுப்போன 141 பழங்கால பொருட்கள்..

இதுதொடர்பாக காவல்துறையினர், “இந்த அருங்காட்சியகத்தில் சனி,ஞாயிறு இரவில் திருட்டு நடைபெற்று இருக்கலாம். எனினும் அருங்காட்சியக அதிகாரிகள் கடந்த புதன்கிழமை திருட்டு தொடர்பாக எங்களிடம் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து நாங்கள் விசாரணை நடத்தினோம். மேலும் அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்து பார்த்தோம்.

சிசிடிவியில் யாரும் வருவது போன்ற காட்சிகள் பதிவாகவில்லை. எனவே கொள்ளையர்கள் அருங்காட்சியகத்திற்கு பின்னால் இருந்த ஜன்னல் வழியாக வந்திருக்கக்கூடும். இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர். 


பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் திருட்டுப்போன 141 பழங்கால பொருட்கள்..

தொல்லியல் துறை அதிகாரிகளின் தகவல்படி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த பித்தளை பாத்திரங்கள், பித்தளை மணிகள், பழங்கால நகைகள் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இவை திருடப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 14 மாதங்களில் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற இரண்டாவது திருட்டு இதுவாகும். ஏற்கெனவே கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி மகாராஜா ரஞ்சித் சிங் போர் அருங்காட்சியகத்தில் ஒரு திருட்டு நடைபெற்றது. அந்தச் சம்பவத்தின் போது ஒருவர் சிசிடிவி காட்சிகளில் பதிவாகிருந்தார். எனினும் அவரை இதுவரை காவல் துறையினரால் கைது செய்ய முடியவில்லை. 

 

இந்தச் சூழலில் தற்போது மீண்டும் அருங்காட்சியகம் ஒன்றில் மீண்டும் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் விரைவாக செயல்பட்டு கொள்ளையர்களை கைது செய்யவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எண்ணமாக உள்ளது. 

தலைப்பு செய்திகள்

இந்திய EV சந்தை: டாடா வால்யூம், மஹிந்திரா பிரீமியம் - ஆதிக்கம் தொடருமா?
இந்திய EV சந்தை: டாடா வால்யூம், மஹிந்திரா பிரீமியம் - ஆதிக்கம் தொடருமா?
கேரள ஸ்திரீ சக்தி SS-527 லாட்டரி முடிவுகள் வெளியீடு: ஒரு கோடி வென்றது யார்?
கேரள ஸ்திரீ சக்தி SS-527 லாட்டரி முடிவுகள் வெளியீடு: ஒரு கோடி வென்றது யார்?
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget