மேலும் அறிய

பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் திருட்டுப்போன 141 பழங்கால பொருட்கள்..

வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் பெரிய திருட்டு நடைபெற்றுள்ளது. அதன்படி கிட்டதட்ட 141 பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா பகுதியில் வேளாண் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இதில் பல்வேறு வகையான பழங்கால பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் பெரிய திருட்டு நடைபெற்றுள்ளது. அதன்படி கிட்டதட்ட 141 பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள  முதல் அறையில் 52 பொருட்களும், இரண்டாவது அறையில் 47 பொருட்களும், புல்காரி ஆடை அறையிலிருந்தும் 12 பொருட்கள் திருடப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. 


பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் திருட்டுப்போன 141 பழங்கால பொருட்கள்..

இதுதொடர்பாக காவல்துறையினர், “இந்த அருங்காட்சியகத்தில் சனி,ஞாயிறு இரவில் திருட்டு நடைபெற்று இருக்கலாம். எனினும் அருங்காட்சியக அதிகாரிகள் கடந்த புதன்கிழமை திருட்டு தொடர்பாக எங்களிடம் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து நாங்கள் விசாரணை நடத்தினோம். மேலும் அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்து பார்த்தோம்.

சிசிடிவியில் யாரும் வருவது போன்ற காட்சிகள் பதிவாகவில்லை. எனவே கொள்ளையர்கள் அருங்காட்சியகத்திற்கு பின்னால் இருந்த ஜன்னல் வழியாக வந்திருக்கக்கூடும். இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர். 


பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் திருட்டுப்போன 141 பழங்கால பொருட்கள்..

தொல்லியல் துறை அதிகாரிகளின் தகவல்படி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த பித்தளை பாத்திரங்கள், பித்தளை மணிகள், பழங்கால நகைகள் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இவை திருடப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 14 மாதங்களில் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற இரண்டாவது திருட்டு இதுவாகும். ஏற்கெனவே கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி மகாராஜா ரஞ்சித் சிங் போர் அருங்காட்சியகத்தில் ஒரு திருட்டு நடைபெற்றது. அந்தச் சம்பவத்தின் போது ஒருவர் சிசிடிவி காட்சிகளில் பதிவாகிருந்தார். எனினும் அவரை இதுவரை காவல் துறையினரால் கைது செய்ய முடியவில்லை. 

 

இந்தச் சூழலில் தற்போது மீண்டும் அருங்காட்சியகம் ஒன்றில் மீண்டும் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் விரைவாக செயல்பட்டு கொள்ளையர்களை கைது செய்யவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எண்ணமாக உள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget