மேலும் அறிய

லஞ்சம் வாங்கியதால் இளைஞர் தற்கொலை: தலைமறைவாக இருந்த அதிகாரி கைது..!

3 நாட்களாக தேடி வந்த நிலையில்  மகேஸ்வரன் நீதிமன்றத்தில் சரண் அடைவதற்காக வந்த பொழுது பேரளம் காவல்துறையினர் மகேஸ்வரனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

லஞ்சம் வாங்கியதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தலைமறைவான ஓவர்சியரை காவல்துறையினர் இரண்டு தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில் மகேஸ்வரன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். 

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே வேலங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கமுகக்குடி கிராமத்தை சேர்ந்த லதா என்பவருக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இதற்கான தவணைப் பணத்தை வங்கி கணக்கில் வரவு வைப்பதற்கு நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் ஓவர்சியர் மகேஸ்வரன் லதாவின் மகன் மணிகண்டனிடம் ரூபாய் 18 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து வீட்டிற்கான மூன்றாவது தவணை பணத்தை வங்கி கணக்கில் வரவு வைக்காமல் மகேஸ்வரன் இழுத்தடிப்பு செய்து வந்ததாக கூறி சமூகவலைத்தளங்களில் இதுகுறித்து வீடியோ பதிவிட்டு மணிகண்டன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 


லஞ்சம் வாங்கியதால் இளைஞர் தற்கொலை: தலைமறைவாக இருந்த அதிகாரி கைது..!

இதனையடுத்து லஞ்சம் வாங்கிய ஓவர்சியர் மகேஸ்வரனை  தற்காலிக பணி நீக்கம் செய்தும் அவர் மீது வழக்கு பதிவு செய்யவும் மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து பேரளம் காவல்துறையினர் அவர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஓவர்சியர் மகேஸ்வரனை 2 தனிப்படைகள் அமைத்து கடந்த 3 நாட்களாக தேடி வந்த நிலையில்  மகேஸ்வரன் திருவாரூர் நீதிமன்றத்தில் சரண் அடைவதற்காக வந்த பொழுது பேரளம் காவல்துறையினர் மகேஸ்வரனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


லஞ்சம் வாங்கியதால் இளைஞர் தற்கொலை: தலைமறைவாக இருந்த அதிகாரி கைது..!

இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மகேஸ்வரன் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை மேற்கொள்வார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் அரசின் திட்டங்களுக்கு எந்த அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டாலும் உடனடியாக ஆதாரத்துடன் பொதுமக்கள் புகார் அளித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மகேஸ்வரனிடம் பேரளம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அனைத்து அரசு அலுவலர்களிடம் பொதுமக்கள் கொடுக்கும் விண்ணப்பங்களை உடனுக்குடன் சரிபார்த்து நேரடியாகச் சென்று ஆய்வு செய்து அரசு திட்டத்திற்கு தகுதியானவரா என உறுதி செய்யப்பட்ட பின்னர் உடனடியாக அரசு அதிகாரிகள் அவர்களின் விண்ணப்பத்திற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மேலும் புகார்கள் வரும் பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

 

தலைப்பு செய்திகள்

Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget