மேலும் அறிய

அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை

எந்திரம் ஆக்கப்பட்ட இன்றைய வாழ்க்கை சூழலில் பதற்றமும், பரபரப்பும் மனிதர்களை தொட்டு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு கட்டத்தில் மன அழுத்தமாகவும் மாறிவிடுகிறது.

இந்த மன அழுத்தம் என்பது வேலைப்பளு, கவலைகள், உறவு சிக்கல்கள் மற்றும் உடல் நல பிரச்சனைகளால் ஏற்படுகிறது. மன அழுத்தம் என்பது வெளிப்புறம் அல்லது உட்புறம் தேவைக்கான உடலில் எதிர்வினையாகும்.

மன அழுத்தம்:

இந்த மன அழுத்தம் என்பது சமீப காலமாக தொழில் சார்ந்த வேலைப்பலுவாள் அதிக அளவில் நிகழ்வதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது. தொழில் சார்ந்த மன அழுத்தம் என்பது உலகம் முழுவதும் உள்ளது. சர்வதேச அளவில் 65 சதவீத தொழிலாளர்கள் மன அழுத்த பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். சில நாடுகளில் இது போன்ற பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.

தொழில்சார் மன அழுத்தம்:

இந்தியர்களை பொறுத்தவரை 49 சதவீதம் பேர் மன அழுத்த பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். இதில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார்ந்த மன அழுத்த பாதிப்புகள் உள்ளது. இதனால் தொழிலாளர்கள் அவர்களது செயல் திறனில் எதிர்மறையான விளைவுகளை சந்திக்கின்றனர். என்றும் அதில் தெரிவித்துள்ளது மன அழுத்தம் என்பது மனிதர்களுக்கு இயல்பாக நிகழும் ஒன்றுதான். மனிதர்களுக்கு உணர்ச்சிகள் அதிகமாகும் சில நேரங்களில்  உணர்ச்சியற்று இருப்பதும் ஏதாவது ஒரு சூழலில் நிகழ்கிறது.

 இதற்கு சுற்றுப்புறமும், உடல் நிலையும் வேலைப்பளு என்ற பல்வேறு காரணங்கள் உள்ளது.  இதில் தொழில் சார்ந்த மன அழுத்தம் என்பது ஒருவரின் வேலை தொடர்பான உளவியல் அழுத்தமாகும்.  இது ஒரு நாள்பட்ட நிலையை குறிக்கிறது. வேலையில் உள்ள மன அழுத்தம் சூழல்கள் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

உழைக்கும் மக்கள் வாழும் நாடு இந்தியா:

அந்த நிலையை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதன் மூலம் தொழில் சார்ந்த மன அழுத்தத்தை போக்க முடியும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இது குறித்து மனநலம் சார்ந்த உளவியல் நிபுணர்கள் கூறியதாவது:-

 இந்தியாவை பொறுத்தவரை உழைக்கும் மக்கள் அதிகம் வாழும் நாடாக உள்ளது. இந்தியா மக்கள் தொகையில் 65 கோடி பேர் 20 முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்கள் அனைவரும் தங்களின் கல்வி வயது உடல் தகுதிக்கு ஏற்ற ஏதேனும் ஒரு தொழில் ஈடுபடுவர்களாக உள்ளனர்.

 வேலையில்லா திண்டாட்டம் ஒருபுறம் இருந்தாலும் கிடைக்கும் வேலைகளை செய்து உழைப்பவர்  இங்கு கணிசமாக உள்ளனர்.  இது போன்றவர்களுக்கு பணியிடத்தில் ஏற்படும் ஒரு பிரச்சனை தான் தொழில் சார்ந்த மன அழுத்தம். இது பல்வேறு வழிகளில் வெளிப்பட்டு மனிதர்களை வெகுவாக பாதிக்கிறது.

 உதாரணமாக ஒரு குறிப்பிட்ட கால கெடுவிற்குள் அதிகப்படியான வேலைகளை சுமக்க வேண்டிய சூழல் அல்லது நிர்பந்தம் என்பது இதில் பிரதானமாக உள்ளது. இது தொழிலாளி தொடங்கி உயர் அதிகாரி வரை உள்ளது.

காரணங்கள்:

 இது போன்ற சூழலில் தான் அதிக அளவில் மன அழுத்தம் தற்போது மனிதர்களை பாதிக்கிறது. அதிக எடையை தூக்குவது, நீண்ட தூரம் நின்று கொண்டே இருப்பது, கடுமையான சுற்றுச்சூழல், உழைப்பிற்கேற்ற ஊதியம் இன்மை போன்றவற்றையும் அதிக அளவில் தொழில் சார்ந்த மன அழுத்தங்களை ஏற்படுத்துகிறது.

 இவை அனைத்திற்கும் மேலாக அதிகளவிலான அறிவாற்றல் ஈடுபாடு நிலையான முடிவெடுத்தல் சிக்கலை தீர்ப்பது போன்ற பணிகளும் பெரும் அளவில் மன அழுத்தத்தை ஏற்படுத்தி வருவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

மன ரீதியான பாதிப்பு:

 மொத்தத்தில் எந்த வேலையும் இருந்தாலும் உயர்ந்த பொறுப்பில் இருந்தாலும் தொழில் சார்ந்த உழைப்பையும், அர்ப்பணிப்பும் அனைவருக்கும் அவசியமாக உள்ளது. இதில் உழைப்பு என்பது உடலும் மனமும் இணைந்து செய்யும்  ஒன்றாகும்.

 இந்த இரண்டில் ஒன்று வேறுபட்டாலும் ஒருவரின் செயல் திறன் மாறிவிடும். தொழில் சார்ந்த மன அழுத்தம் என்பது அலுவலக கடமைகள் பணிச்சூழல் மற்றும் பலதரப்பட்ட வேலைகள் காரணமாக ஏற்படுகிறது.இது உளவியல் ரீதியாக உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்து பாதிப்பவர்களுக்கு வழி வகுத்து விடும். எனவே வேலையில் உள்ள மன அழுத்த சூழல்கள் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

 அந்த நிலையை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதன் மூலம் தொழிற்சார்ந்த மன அழுத்தத்தை போக்க முடியும் இவ்வாறு உளவியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நீங்க அடிச்ச கமிஷன் எவ்வளவு? அண்ணாமலையிடம் திருப்பி கேட்ட தங்கம் தென்னரசு
நீங்க அடிச்ச கமிஷன் எவ்வளவு? அண்ணாமலையிடம் திருப்பி கேட்ட தங்கம் தென்னரசு
TN TRB: ஆசிரியர் தேர்வு வாரியம் அசத்தல் அறிவிப்பு; உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
TN TRB: ஆசிரியர் தேர்வு வாரியம் அசத்தல் அறிவிப்பு; உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
Azhagiri Politics: மீண்டும் அழகிரி.. மகனால் கிடைத்த ரீ என்ட்ரி.. அதிரும் அரசியல் களம்...
மீண்டும் அழகிரி.. மகனால் கிடைத்த ரீ என்ட்ரி.. அதிரும் அரசியல் களம்...
ஆசை ஆசையாய் வளர்த்த செல்லப்பிராணி உயிரிழப்பு! மீண்டும் உயிர் பெறாததால் பெண் எடுத்த விபரீத முடிவு
ஆசை ஆசையாய் வளர்த்த செல்லப்பிராணி உயிரிழப்பு! மீண்டும் உயிர் பெறாததால் பெண் எடுத்த விபரீத முடிவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran in TVK: TVK - வில் நயினார் - குஷ்பூ?தட்டித்தூக்கிய தவெக விஜய்! அப்செட்டில் பாஜக!Dad Son Ear Piercing Ceremony : ’’அப்பாவுக்கும் காது குத்தனும்’’அடம்பிடித்த சிறுவன்ஆசையை நிறைவேற்றிய தந்தைUdhayanidhi vs DMK Seniors| சீனியர்களுக்கு கல்தா!ஆட்டத்தை தொடங்கும் உதயநிதி! ஸ்டாலின் க்ரீன் சிக்னல்?Rajinikanth | ”தலைவர் அரசியலுக்கு வருவார்? 2026ல்  நிச்சயம் நடக்கும்” ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீங்க அடிச்ச கமிஷன் எவ்வளவு? அண்ணாமலையிடம் திருப்பி கேட்ட தங்கம் தென்னரசு
நீங்க அடிச்ச கமிஷன் எவ்வளவு? அண்ணாமலையிடம் திருப்பி கேட்ட தங்கம் தென்னரசு
TN TRB: ஆசிரியர் தேர்வு வாரியம் அசத்தல் அறிவிப்பு; உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
TN TRB: ஆசிரியர் தேர்வு வாரியம் அசத்தல் அறிவிப்பு; உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
Azhagiri Politics: மீண்டும் அழகிரி.. மகனால் கிடைத்த ரீ என்ட்ரி.. அதிரும் அரசியல் களம்...
மீண்டும் அழகிரி.. மகனால் கிடைத்த ரீ என்ட்ரி.. அதிரும் அரசியல் களம்...
ஆசை ஆசையாய் வளர்த்த செல்லப்பிராணி உயிரிழப்பு! மீண்டும் உயிர் பெறாததால் பெண் எடுத்த விபரீத முடிவு
ஆசை ஆசையாய் வளர்த்த செல்லப்பிராணி உயிரிழப்பு! மீண்டும் உயிர் பெறாததால் பெண் எடுத்த விபரீத முடிவு
RuPay Debit Select Card: ரூபே கார்டு வச்சிருக்கீங்களா ? இலவச ஓ.டி.டி சந்தா முதல் இன்சூரன்ஸ் வரை.. மாஸ் காட்டும் ரூபே..!
ரூபே கார்டு வச்சிருக்கீங்களா ? இலவச ஓ.டி.டி சந்தா முதல் இன்சூரன்ஸ் வரை.. மாஸ் காட்டும் ரூபே..!
IND vs AUS: மிரட்டி விடுமா இந்தியா? ஆப்பு அடிக்குமா ஆஸ்திரேலியா? ஐசிசி தொடர்களில் இதுவரை எப்படி?
IND vs AUS: மிரட்டி விடுமா இந்தியா? ஆப்பு அடிக்குமா ஆஸ்திரேலியா? ஐசிசி தொடர்களில் இதுவரை எப்படி?
SP Velumani : ”திருமணத்தில் கைக்கோர்த்த அண்ணாமலை – வேலுமணி” அப்செட்டில் எடப்பாடி பழனிசாமி..?
SP Velumani : ”திருமணத்தில் கைக்கோர்த்த அண்ணாமலை – வேலுமணி” அப்செட்டில் எடப்பாடி பழனிசாமி..?
EPS Statement: ஒண்ணு பொய்-ங்கற உண்மைய ஒத்துக்கோங்க.. இல்ல ரகசியத்த சொல்லுங்க #Daddy_Son...
ஒண்ணு பொய்-ங்கற உண்மைய ஒத்துக்கோங்க.. இல்ல ரகசியத்த சொல்லுங்க #Daddy_Son...
Embed widget