மேலும் அறிய

கடன் தொல்லை; குடும்பத் தகராறு? - மகள்களுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் கடன் தொல்லை மற்றும் குடும்பத்த தகராறில் தாய் தனது இரண்டு மகள்களுடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த சின்ன பருகூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (45) கல் உடைக்கும் தொழிலாளி இவரது மனைவி உஷா (37) இவர்களது மகள்கள் நிவேதா (17) ஷர்மிளா (13) இவர்கள்  இருவரும் பர்கூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு, எட்டாம் வகுப்பு பயின்று வந்தனர். 


கடன் தொல்லை; குடும்பத் தகராறு? - மகள்களுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை

இந்நிலையில் ரமேஷுக்கு போதிய வருவாய் இல்லாததால் குடும்பத்தினர் கடன் பிரச்சனையில் அவதிப்பட்டு வந்துள்ளனர். குறிப்பாக மகளிர் சுய உதவி குழுவில் நேற்று 19-ஆம் தேதி ஐந்தாயிரம் பணம் கட்ட வேண்டிய நிலையில் பலரிடம் கடன் கேட்டுள்ளனர்.

 எங்கும் கிடைக்காததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அத்துடன் அடிக்கடி இருவர்களுக்குள் குடும்பத்தகராரும் இருந்து வந்துள்ளது. 

இதை அடுத்து ரமேஷ் பெங்களூரில் உள்ள தனது தம்பி கணேசனை செல்போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டுள்ளார். அப்போது வீட்டில் அதிக கூச்சல் இருந்ததால் அவர் போனை துண்டித்துள்ளார்.

 இது குறித்து பர்கூரில் உள்ள தனது தந்தை காத்தவராயனை தொடர்பு கொண்டு கணேசன் அண்ணன் வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அப்போது காத்தவராயன் ரமேஷை தொடர்பு கொண்டு பேசிய போது எனக்கு வாழவே பிடிக்கவில்லை நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் எனக்கூறி போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். பின்னர் அவர் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று பணம் ஏதும் கிடைக்குமா என கேட்க சென்று விட்டார்.

 மகன் தற்கொலை செய்யப் போவதாக கூறியதால் அதிர்ச்சி அடைந்த காத்தவராயன் உடனடியாக மகன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டிற்குள் மருமகள் உஷா பேத்திகள் நிவேதா, ஷர்மிளா ஆகியோர் தூக்கு போட்ட நிலையில் சடலமாக கடந்துள்ளனர்.

 கதறி அழுத காத்தவராயன் பர்கூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவல் அறிந்து வந்த கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் எஸ் பி. தங்கதுரை, பர்கூர் டிஎஸ்பி பிரித்திவிராஜ் சவுகான், பர்கூர் இன்ஸ்பெக்டர் வளர்மதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 மனைவியிடம் சண்டை போட்டுவிட்டு மாயமான ரமேஷை போலீசார் நேற்று மதியம் கண்டுபிடித்து அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

சம்பவம் குறித்து எஸ்பி இடம் கேட்டபோது "முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு உஷா தனது மகளுடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Embed widget