மேலும் அறிய

பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க தருமபுரி ஆட்சியர் உத்தரவு

பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி அதிரடி பிறப்பித்துள்ளார்.

பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க வேண்டும் என  தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி அதிரடி பிறப்பித்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை ஆறு மாதமாக மழை பெய்யவில்லை. தண்ணீர் இன்றி வறண்ட நிலையில் கோடைகால மழையாக கடந்த மே மாதம் மட்டும் 127.77 மில்லி மீட்டர் மழை தர்மபுரி மாவட்டத்தில் பெய்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதத்தை ஒப்பிடுகையில் நடப்பாண்டு மே மாதத்தில் 27.58 மில்லி மீட்டர் மழை கூடுதலாக பெய்துள்ளது. மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 942 மில்லி மீட்டர் ஆகும். ஆனால் இதுவரை 232.46 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது.  

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை 266.30 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் 232.46 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. இந்த நிலையில் தருமபுரி மாவட்ட அலுவலக கூட்டரங்கில் தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுக்காக உடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமை வகித்து பேசியதாவது:- தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது இம்மலையொட்டி தாழ்வான பகுதிகளின் விவரப்பட்டியல்,  அவசரகால போக்குவரத்து வழித்தடங்கள், போக்குவரத்து உறுதிகள் விவரங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.  தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகள் பற்றிய விவரப்பட்டியல் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சமுதாயக்கூடங்கள், திருமண மண்டபங்கள் பற்றிய விவரப் பட்டியல் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொது மக்களுக்கு குடிநீர் விநாயகம் செய்ய தேவையான வாகனங்கள் தண்ணீர் டேங்குகள் போர்ட்டபிள் ஜெனரேட்டர்கள், டார்ச் லைட்டுகள், உணவு சமைக்க பாத்திரங்கள், கேஸ் அடுப்புகள், ரேஷன் கடைகளில் தேவையான உணவுப் பொருட்களின் இருப்பு ஆகிய தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். எங்காவது சேதம் அடைந்தால் மீட்பு பணிக்கு பொக்லைன் புள்டவுசர்கள், மரங்களை வெட்டும் இயந்திரங்கள், போர்ட்டபிள் ஜெனரேட்டர்கள், டார்ச் லைட் நல்ல நிலையில் பராமரித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.  சாலைகளில் மழைநீர் தேங்காத வண்ணம் முன்கூட்டியே சீர்படுத்த வேண்டும் அணைக்கட்டுகள் ஏரிகளின் தரைப்பகுதிகளில் தேவையான அளவிற்கு மணல் மூட்டைகளை அடக்கி தயார் நிலையில் வைக்க வேண்டும்.  

அவசர காலங்களில் உதவ  சுய உதவி குழுக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பட்டியல் தொலைபேசி எண்கள் பட்டியல் தயார் நிலையில் வைக்க வேண்டும்.  நடமாடும் மருத்துவ குழுக்கள் அவர்களின் தொலைபேசி எண் விவரங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மழைக்காலம் தொடங்கும் முன்னரே குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கா வண்ணம் சாலைகள் சீர்படுத்த வேண்டும். கழிவு நீர் கால்வாய்களை தூர்வார வேண்டும் தெருக்களில் கொசு ஒழிப்பு மருந்து அடித்து குளோரின் பவுடர் தூவியும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து குடிநீர் கிணறுகள் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் சுத்தப்படுத்தி குளோரின் பவுடர் கலந்து குடிநீர் விநாயகம் செய்ய வேண்டும். கால்நடைகள் உயிர், மனித உயிர் சேதம் ஏற்படாது உடனடியாக நிவாரண உதவிகள் வழங்க பிரேத பரிசோதனை அறிக்கை உடனடியாக வழங்க வேண்டும் மேலும் அவசர தேவைகள் உதவிகள் பேரிடர் கால வீடு, கால்நடை, மனித உயிரிழப்பு போக்குவரத்து பாதிப்பு சேதங்கள் பற்றிய தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் கட்டுப்பாட்டு மைய இலவச தொலைபேசி எண்-  10 77 இல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (11-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
தருமபுரியில் நாளை (11-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
தருமபுரிக்கு பேருந்து சேவை வெறும் வசதியல்ல; அது சமூகநீதி ஆயுதம்! – அமைச்சருக்கு சௌமியா அன்புமணி MLA பறக்கவிட்ட அவசரக் கடிதம்!
தருமபுரிக்கு பேருந்து சேவை வெறும் வசதியல்ல; அது சமூகநீதி ஆயுதம்! – அமைச்சருக்கு சௌமியா அன்புமணி MLA பறக்கவிட்ட அவசரக் கடிதம்!
Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (ஜூலை 15) எங்கெல்லாம் மின் தடை: உங்க பகுதி லிஸ்டில் இருக்கா?
தருமபுரியில் நாளை (ஜூலை 15) எங்கெல்லாம் மின் தடை: உங்க பகுதி லிஸ்டில் இருக்கா?
தருமபுரியில் லிட்டர் லிட்டராக டீசல் திருட்டு.. ஃபாலோ பண்ணி ஓட்டுநரை மடக்கி பிடித்த லாரி உரிமையாளர்!
தருமபுரியில் லிட்டர் லிட்டராக டீசல் திருட்டு.. ஃபாலோ பண்ணி ஓட்டுநரை மடக்கி பிடித்த லாரி உரிமையாளர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget