மேலும் அறிய

கொலை வழக்கில் கைதான கல்லூரி மாணவர் தப்பியோட முயற்சி; கடைசியில் முறிந்தது கை தான்

டிரைவர் சாலையை கடந்து லாரியின் அருகே வந்தபோது அவ்வழியாக டூவீலரில் வந்த இரண்டு பேர்  இரும்பு ராடால் தாக்கியும் கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டு தப்பினர்.

கிருஷ்ணகிரியில் லாரி டிரைவர் கொலையில் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்ல முயன்ற போது தப்பிக்க முயன்ற கல்லூரி மாணவருக்கு கையில் முறிவு ஏற்பட்டது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் கைதான சிறுவனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள நடனசேரி கிராமத்தை சேர்ந்தவர் எலியாஸ் (43). லாரி டிரைவரான இவர், சென்னை ஸ்ரீபெரும்புதூரிலிருந்து கன்டெய்னர் லாரியில் எலக்ட்ரானிக் பொருட்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.

நேற்று முன்தினம் காலை சுமார் 9 மணி அளவில் லாரி கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி சுபேதார் மேடு அருகே வந்தபோது எலியாஸ் லாரியை சாலையோரம் ஏத்திவிட்டு சாலையின் எதிர்ப்புறம் உள்ள கடைக்கு சென்று டீ குடித்துள்ளர். பின்னர் மீண்டும் சாலையை கடந்து லாரியின் அருகே வந்தபோது அவ்வழியாக டூவீலரில் வந்த இரண்டு பேர்  இரும்புராடால் தாக்கியும் கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டு தப்பினர்.

இது பற்றி தகவல் அறிந்து வந்த மகாராஜா கடை போலீசார் சடலத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். அதில் டூவீலரின் நம்பரை வைத்து விசாரித்து இந்த கொலையில் ஈடுபட்டதாக கிருஷ்ணகிரி சேர்ந்த பி. இ., இரண்டாம் ஆண்டு மாணவர் காதர் பாஷா மற்றும் படிக்காமல் ஊர் சுற்றி வரும் (17) வயது சிறுவன் ஆகிய இருவரையும் பிடித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் ஸ்டேஷனுக்கு அழைப்புச் சென்றனர். அவர்களிடம் எஸ் பி தங்கதுரை விசாரணை மேற்கொண்டார். 

முதற்கட்ட விசாரணையில் டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு சாலையை கடந்து கடைக்கு டீ குடிக்க சென்றபோது, சாலையோரம் சிறுநீர் கழித்துள்ளார். அப்போது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த டூவீலர் மீது அவர் சிறுநீர் கழித்துள்ளதாக தெரிகிறது.

இதை பார்த்து டூவீலரின் உரிமையாளரான கல்லூரி மாணவன் காதர் பாஷா எலியாஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். எலியாஸ் கடைக்கு சென்று டீ குடித்துவிட்டு மீண்டும் லாரி எடுத்துச் செல்ல வந்த போது அங்கு டூ வீலரில் வந்த சிறுவனும் மாணவனும் சேர்ந்து கத்தியால் குத்தியும் இரும்புராடால் அடித்தும் எலியாசை கொலை செய்தது தெரிய வந்தது.

தொடர்ந்து இருவரையும் மருத்துவ பரிசோதனைக்காக நேற்று முன்தினம் போலீசார் தனித்தனி டூவீலரில் அழைத்துச் சென்றனர். அப்போது கிருஷ்ணகிரி, பெங்களூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென டூவீலர் இங்கிருந்து கல்லூரி மாணவன் குதித்து தப்பியோட முயன்றார்.

இதில் அவருக்கு கையில் முறிவு ஏற்பட்டது. பின்னர் அவரை போலீசார் கேட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புகள் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து சிறுவனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

 இது பற்றி போலீசார் கூறுகையில்:- கல்லூரி மாணவனுக்கு சிகிச்சை முடிந்த பிறகு அவருடன் சேர்ந்து சிறுவனும் சிறையில் அடைக்கப்படுவார் என்றனர். இதன் இடையே தொடர்ந்து சிறுவனிடம் கொலையில் வேறு யாருக்கேனும்தொடர்பு உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (19-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
தருமபுரியில் நாளை (19-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (18-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (18-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (13-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
தருமபுரியில் நாளை (13-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (11-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
தருமபுரியில் நாளை (11-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Gold and silver rate today : இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Superb: 40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Embed widget