மேலும் அறிய

ஏடிஎம் கொள்ளையில் கிடைத்த துணுக்கு; வடமாநில கும்பலை ரவுண்டு கட்டிய ஸ்பெஷல் டீம்

10 தனிப்படை அமைத்து விசாரணை முடிக்கி விடப்பட்டுள்ளதாக சேலம் சரக டிஐஜி உமா தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி முதல் இரவு வரை அந்த ஏடிஎம் இயந்திரத்தில் பண பரிவர்த்தனை எதுவும் நடைபெறவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த வங்கி ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டனர். காஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த மர்ம நபர்கள் அதிலிருந்து ரூ.14.50 லட்சம் கொள்ளை அடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதே போல் கடந்த 5ஆம் தேதி ஓசூர் ஆவலப்பள்ளி ஹட்கோவில் ஒரு ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடந்தது. இது தொடர்பாக ஓசூர் ஹட்கோ போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி நடத்தினர். இதற்கிடையே, ஞாயிறு அன்று கர்நாடக மாநிலம் வெள்ளந்தூர் மற்றும் ஆசான் மாவட்டங்களில் இரண்டு ஏடிஎம் மையங்களில் இயந்திரத்தை உடைத்து ரூ.20 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக திங்கட்கிழமை ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் இரண்டு ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து அதிலிருந்து ரூ.25 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்த கொள்ளை நடந்த ஏடிஎம் இயந்திரங்களில் பதிவான கைரேகைகளை வைத்து மூன்று மாநில போலீசார்  நடத்திய விசாரணையில் அவர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அவர்கள் வடமாநிலங்களான அரியானா, குல்பர்கா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கொள்ளையர்களாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையே ஓசூரில் ஏடிஎம் கொள்ளை நடந்த இடத்தில் திங்கட்கிழமை சேலம் சரக டிஐஜி உமா நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஓசூரில் நடந்த ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 40 போலீசார் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணையில் நடத்தி வருகிறார்கள். இந்த கொள்ளை தொடர்பாக முழு தகவலை நாளை 9ஆம் தேதி பத்திரிகையாளர்களுக்கு எஸ்பி தெரிவிக்க உள்ளார்.

குருபரப்பள்ளியில் கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்கள் உடைத்து ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டது அரியானா மாநிலம் மே வாத் பகுதியைச் சேர்ந்த கும்பல் என்பதும் பிக்கப் வாகனத்தில் வந்து கொள்ளையடித்து சென்றதும் தெரிய வந்தது.

 இது தொடர்பாக ஒரு சில குற்றவாளிகள் கைதான போதிலும் முக்கிய குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர்.

கொள்ளையடிக்கப்பட்ட பணமும் மீட்கப்படவில்லை. தற்போது ஓசூர், ஆந்திரா, கர்நாடகாவில் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து ரூ.59.50 லட்சம் கொள்ளை அடித்த கும்பல் குருபரப்பள்ளியில் கைவரிசை காட்டிய கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது இவ்வாறு சேலம் சரக டிஐஜி உமா தெரிவித்தார் 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Minister Ramesh: திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்
திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்
Minister Ramesh: சாமி கும்பிடுவதில் சிரமம்.. பக்தர்கள் நடத்தப்படும் விதத்தில் அதிருப்தி! அமைச்சர் ரமேஷ் உடனடியாக சரி செய்வாரா?
Minister Ramesh: சாமி கும்பிடுவதில் சிரமம்.. பக்தர்கள் நடத்தப்படும் விதத்தில் அதிருப்தி! அமைச்சர் ரமேஷ் உடனடியாக சரி செய்வாரா?
கதறிய சிறுமி... மிரட்டிய கொடூரன்: மயிலாடுதுறையில் கேஸ் ஸ்டவ் மெக்கானிக்கை தட்டி தூக்கிய மகளிர் போலீஸ்!
கதறிய சிறுமி... மிரட்டிய கொடூரன்: மயிலாடுதுறையில் கேஸ் ஸ்டவ் மெக்கானிக்கை தட்டி தூக்கிய மகளிர் போலீஸ்!
Gold Silver Rate May 29th: போச்சுடா.! ரூ.5000 கூடிடுச்சே.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை என்ன தெரியுமா.?
போச்சுடா.! ரூ.5000 கூடிடுச்சே.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை என்ன தெரியுமா.?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்
திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்
Minister Ramesh: சாமி கும்பிடுவதில் சிரமம்.. பக்தர்கள் நடத்தப்படும் விதத்தில் அதிருப்தி! அமைச்சர் ரமேஷ் உடனடியாக சரி செய்வாரா?
Minister Ramesh: சாமி கும்பிடுவதில் சிரமம்.. பக்தர்கள் நடத்தப்படும் விதத்தில் அதிருப்தி! அமைச்சர் ரமேஷ் உடனடியாக சரி செய்வாரா?
கதறிய சிறுமி... மிரட்டிய கொடூரன்: மயிலாடுதுறையில் கேஸ் ஸ்டவ் மெக்கானிக்கை தட்டி தூக்கிய மகளிர் போலீஸ்!
கதறிய சிறுமி... மிரட்டிய கொடூரன்: மயிலாடுதுறையில் கேஸ் ஸ்டவ் மெக்கானிக்கை தட்டி தூக்கிய மகளிர் போலீஸ்!
Gold Silver Rate May 29th: போச்சுடா.! ரூ.5000 கூடிடுச்சே.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை என்ன தெரியுமா.?
போச்சுடா.! ரூ.5000 கூடிடுச்சே.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை என்ன தெரியுமா.?
திருச்சி - சார்லபள்ளி வாராந்திர ரயில் நிரந்தரச் சேவையாக மாறுகிறது... ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு
திருச்சி - சார்லபள்ளி வாராந்திர ரயில் நிரந்தரச் சேவையாக மாறுகிறது... ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு
CV Shanmugam: சிவி சண்முகம் தவெக-வில் இணைவது உறுதி? விஜய் தரப்போகும் பதவி என்ன தெரியுமா?
CV Shanmugam: சிவி சண்முகம் தவெக-வில் இணைவது உறுதி? விஜய் தரப்போகும் பதவி என்ன தெரியுமா?
Hardik Pandya: ”நீ கிளிச்ச வரைக்கும் போதும்” சொந்த காசில் சூனியம் - ஹர்திக்கிற்கு கும்புடு, ரோகித்தை நாடும் மும்பை
”நீ கிளிச்ச வரைக்கும் போதும்” சொந்த காசில் சூனியம் - ஹர்திக்கிற்கு கும்புடு, ரோகித்தை நாடும் மும்பை
CM Vijay: அதிகாரிகளுக்கு நோ..! மக்கள் வரி பணத்தில் ஹேர் ஸ்டைலிஸ்டிற்கு ட்ரிப்பா? CM விஜய்க்கு சரமாரி கேள்வி
அதிகாரிகளுக்கு நோ..! மக்கள் வரி பணத்தில் ஹேர் ஸ்டைலிஸ்டிற்கு ட்ரிப்பா? CM விஜய்க்கு சரமாரி கேள்வி
Embed widget