மேலும் அறிய

யாருக்குமே தலை வணங்காத மோடி இந்த இருவரையும் எழுந்து நின்று வணங்குகிறார் - ஹசினா சையத்

யாருக்குமே தலை வணங்காத மோடி, சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவரையும் எழுந்து நின்று வணங்குகிறார். எத்தனை நாட்கள் இந்த ஆட்சி நீடிக்கும் என்று தெரியவில்லை.

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில் பாஜக மன்னர் ஆட்சியை தகர்த்தெரிந்த ஜனநாயக கொண்டாட்டம் நிகழ்ச்சி தருமபுரி மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில், தருமபுரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு  காங்கிரஸ் கட்சியின் மகளிரணி மாநில தலைவர் ஹசினா சையத் கலந்து கொண்டு, மகளிரணி நிர்வாகிகளுடன் பேசினார். யாருக்குமே தலை வணங்காத மோடி இந்த இருவரையும் எழுந்து நின்று வணங்குகிறார் - ஹசினா சையத்

இந்த கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த, ஹசினா, ”டெல்லிக்கு வந்த மற்ற மாநிலங்களைச் சார்ந்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டு மக்களைக் கண்டு ஆச்சரியத்துடன் கேட்கிறார்கள். மோடியின் மீதும், பாஜகவின் மீதும் தமிழக மக்களுக்கு எவ்வளவு வெறுப்பு இருக்கிறது என கேட்கின்றனர். தமிழகத்தில் 40க்கு 40 என்று இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்து பாஜகவினரை ஓட , ஓட  விரட்டியடித்துள்ளனர். இது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள மோடிக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இந்திய அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தை கையில் எடுத்தபோது, மோடிக்கு பயம் வந்துவிட்டது. தற்பொழுது இந்த அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு தலையில் வைக்கிறார். இதை தலைவணங்கி ஏற்கிறாரா என்று தெரியவில்லை. 

கடந்த பத்தாண்டு கால ஆட்சியின் போது, மோடி யாரையும் தலைவணங்கி கும்பிட மாட்டார். குடியரசு தலைவராகவே இருந்தாலும் கூட, மோடியை தலைவணங்கி கும்பிட வேண்டும். ஆனால் மோடி தற்பொழுது சந்திரபாபு நாயுடுக்கும், நிதீஷ் குமாருக்கும் எழுந்து நின்று தலைவணங்கி கும்பிடுகிறார். சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமார் உடனான இந்த கூட்டணி ஆட்சி எத்தனை நாட்கள் இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஓராண்டு காலம் கூட இது நீடிப்பது கடினம் தான். ஏனென்றால் நிதிஷ்குமார் அவ்வப்போது ஒவ்வொரு கோரிக்கைகளை வைப்பார். தனக்கு துணை பிரதமர் வேண்டும் என்று கூட கேட்பார். அவ்வாறு இருக்கும்போது மோடியின் இந்த கூட்டாட்சி என்பது எத்தனை நாள் நீடிக்கும் என்பது கேள்விக்குறிதான். காங்கிரஸ் ஒரு வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட போகிறது. இதை மோடியின் பாஜக ஆட்சி எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பது தெரியவில்லை.

மாண்புமிகு மரபை மறந்த பாரத பிரதமர் மோடி 10 ஆண்டுகாலம் சாதிக்காததை இந்த 5 ஆண்டுகளில் என்ன சாதிக்கபோகிறார். நாட்டில் வருடத்திற்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாப்பு தருவதாக கூறிய மோடி, 10 ஆண்டுகளில் 20 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தந்தரா? பாஜகவினர் எதற்கெடுத்தாலும் காங்கிரசை குறை கூறுவதில் குறியாக இருந்து வருகின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி என்ன செய்கிறார் என்பதை கவனித்து வருகின்றனர். அதேபோல் பிரியங்கா காந்தி எங்கு செல்கிறார், என்ன செய்கிறார் என்று பார்த்துக் கொண்டு காங்கிரசையை குறை சொல்லி வருகின்றனர். மேலும் நாங்கள் நேருவை போன்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கின்றோம் என பேசுகின்றனர். ஆனால், நேருவை பற்றி பேசுவதற்கு பாஜகவினருக்கு கொஞ்சம் கூட அருகதை இல்லை. ஏனென்றால் நேரு மூன்று முறை ஆட்சி செய்தபோதும், வாக்குசதவீதம் 73, 74, 75 என  கொஞ்சம் கூட குறையாமல் வெற்றி பெற்று ஆட்சி செய்தார். ஆனால் மோடி கடந்த 2014 ஆம் ஆண்டில் பெற்ற வாக்குகளை விட, 2019 ஆம் ஆண்டு குறைவான வாக்கு சதவீதம் பெற்றிருந்தார். தற்பொழுது அதைவிடவும் 2024 வாக்கு சதவீதம் குறைவாக தான் பெற்று இருக்கிறார். 

நாட்டில் உள்ள 140 கோடி மக்களில் 70 கோடிக்கும் அதிகமாக பெண்கள் உள்ளனர். பெண்கள் முன்னேற்றத்திற்கு மோடி என்ன செய்தார். 33 சதவீதம் இன்னும் முடிவு பெறவில்லை. இளைஞர் காங்கிரஸ் சார்பில் நீட் எதிர்ப்பு போராட்டத்தை ராகுல் காந்தி அறிவித்த நிலையில், வலிமையான எதிர்கட்சியான காங்கிரசை, மோடி எப்படி சமாளிப்பார்” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

AR Rahman: அச்சச்சோ..! இசைப்புயலுக்கு என்ன ஆச்சு? ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி, ரசிகர்கள் ஷாக்
AR Rahman: அச்சச்சோ..! இசைப்புயலுக்கு என்ன ஆச்சு? ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி, ரசிகர்கள் ஷாக்
US Strikes Houthis: அடுத்த போரை தொடங்கிய ட்ரம்ப்..! ஹவுதி மீது அமெரிக்கா தாக்குதல், 20 பேர் பலி
US Strikes Houthis: அடுத்த போரை தொடங்கிய ட்ரம்ப்..! ஹவுதி மீது அமெரிக்கா தாக்குதல், 20 பேர் பலி
Anganwadi Job: அடித்தது ஜாக்பாட்..! எழுத்து தேர்வே இல்லை,  தமிழக அரசில் 7783 பணியிடங்கள் - முழு விவரம் உள்ளே
Anganwadi Job: அடித்தது ஜாக்பாட்..! எழுத்து தேர்வே இல்லை, தமிழக அரசில் 7783 பணியிடங்கள் - முழு விவரம் உள்ளே
WPL 2025 Final: அடக்கொடுமையே..! ஃபைனலில் டெல்லி ஹாட்ரிக் தோல்வி.. 2வது முறையாக கோப்பையை வென்ற மும்பை
WPL 2025 Final: அடக்கொடுமையே..! ஃபைனலில் டெல்லி ஹாட்ரிக் தோல்வி.. 2வது முறையாக கோப்பையை வென்ற மும்பை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AR Rahman: அச்சச்சோ..! இசைப்புயலுக்கு என்ன ஆச்சு? ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி, ரசிகர்கள் ஷாக்
AR Rahman: அச்சச்சோ..! இசைப்புயலுக்கு என்ன ஆச்சு? ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி, ரசிகர்கள் ஷாக்
US Strikes Houthis: அடுத்த போரை தொடங்கிய ட்ரம்ப்..! ஹவுதி மீது அமெரிக்கா தாக்குதல், 20 பேர் பலி
US Strikes Houthis: அடுத்த போரை தொடங்கிய ட்ரம்ப்..! ஹவுதி மீது அமெரிக்கா தாக்குதல், 20 பேர் பலி
Anganwadi Job: அடித்தது ஜாக்பாட்..! எழுத்து தேர்வே இல்லை,  தமிழக அரசில் 7783 பணியிடங்கள் - முழு விவரம் உள்ளே
Anganwadi Job: அடித்தது ஜாக்பாட்..! எழுத்து தேர்வே இல்லை, தமிழக அரசில் 7783 பணியிடங்கள் - முழு விவரம் உள்ளே
WPL 2025 Final: அடக்கொடுமையே..! ஃபைனலில் டெல்லி ஹாட்ரிக் தோல்வி.. 2வது முறையாக கோப்பையை வென்ற மும்பை
WPL 2025 Final: அடக்கொடுமையே..! ஃபைனலில் டெல்லி ஹாட்ரிக் தோல்வி.. 2வது முறையாக கோப்பையை வென்ற மும்பை
WPL 2025 Finale: கோப்பையை வென்ற மும்பை, WPL பரிசுத்தொகை எவ்வளவு? யார் யாருக்கு என்ன விருதுகள்?
WPL 2025 Finale: கோப்பையை வென்ற மும்பை, WPL பரிசுத்தொகை எவ்வளவு? யார் யாருக்கு என்ன விருதுகள்?
EPS Vs Sengottaiyan: “அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
“அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
Varun Chakravarthy: வசூல் சக்கரவர்த்திக்காக காத்திருந்த வருண் சக்கரவர்த்தி.. லேட்டா வந்துட்டீங்களே பாஸ்.!
வசூல் சக்கரவர்த்திக்காக காத்திருந்த வருண் சக்கரவர்த்தி.. லேட்டா வந்துட்டீங்களே பாஸ்.!
"யோவ்.. பிஸ்தா பருப்பு" துணை முதலமைச்சரையே வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்
Embed widget