மேலும் அறிய

அரசு பள்ளியில் மாணவர்களுக்கு திடீர் வயிற்று வலி - தண்ணீரில் ஏதோ கலந்துட்டாங்க என மக்கள் புகார்

தருமபுரி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஒருவர் இறங்கி ஏறியதால், ஏதேனும் கலந்து இருக்கலாம் என பொதுமக்கள் புகார்.

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த கடம்பரஅள்ளி அருகே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியில், தண்ணீர் நிரப்புவதன் மூலம் வகுரப்பம்பட்டி, கடம்பரஹள்ளி, பெரிசாகவுண்டப்பட்டி, பட்டகப்பட்டி உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி அருகில் உள்ள திருப்பதி என்பவர் சித்தர்கள் போல வீட்டில் இருந்து கொண்டு, வீடு முழுவதும் ஆங்காங்கே பல்வேறு வாசகங்களை எழுதி வைத்து, பூஜை நடத்துவதும், கிராமத்தில் உள்ள யாரிடமும் பேசாமல், அமைதியாக சுற்றி திரிவதுமாக இருந்துள்ளார்.

 இந்நிலையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து திருப்பதி தனக்கு தனியாக குடிநீர் குழாய் அமைத்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது கிராம மக்கள் குடிநீர் குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, குழாயை துண்டித்துள்ளனர். இதனால் குடிநீர் விட மறுத்த உங்களை எல்லாம், ஏதாவது ஒரு வழி செய்யாமல் விடமாட்டேன் என தெரிவித்ததாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அடிக்கடி திருப்பதி மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மேல், ஏறுவதும் இறங்குவதுமாக இருந்துள்ளார். 

இதனை கண்ட கிராம மக்கள் திருப்பதி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏதேனும் கலந்து இருக்கலாம் என அச்சமடைந்து காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை ஆய்வு செய்துள்ளனர். 

இந்நிலையில் கம்பைநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கின்ற ஒரு சில மாணவர்களுக்கு திடீரென தலைவலி, கண் எரிச்சல், வயிறு வலி, கை கால் வலி மற்றும் மயக்கம் போன்ற உபாதைகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த உபாதை ஏற்பட்ட மாணவர்கள் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் விநியோகம் செய்யப்படுகின்ற கிராமத்தைச் சார்ந்தவர்கள் என்பதால், ஒருவேளை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ள தண்ணீரை குடித்ததால் தான் இந்த உபாதை ஏற்பட்டு இருக்கலாமோ என அச்சமடைந்து, கம்பைதல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடம்பர அள்ளி, வகுப்பம்பட்டி, பெருசா கவுண்டம்பட்டி, பட்டகப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்களை அழைத்து,  தலைமையாசிரியர் பழனி, அரசு பள்ளி வளாகத்திலேயே சிறப்பு மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்தார். 

இதனை  தொடர்ந்து கம்பைநல்லூர் அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவ குழு வரவழைக்கப்பட்டு, மாணவர்களுக்கு இரத்த அழுத்தம் உள்ளிட்ட  பரிசோதனை செய்து ஓஆர்எஸ் கரைசல், மாத்திரை, மருந்துகள் கொடுத்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அச்சமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மருத்துவர் குழு மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தில் உள்ள அலுவலக குழு ஆய்வு செய்து குடிநீரை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். 

மேலும் குடிநீர் தொட்டியில் ஏதேனும் கலந்து இருக்கலாம் என்ற தகவல் பரவியதாலும், மாணவர்களுக்கு உபாதைகள் ஏற்பட்டுள்ளது என்ற தகவல் பரவியதாலும், அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்களின் பெற்றோர்கள், அச்சமடைந்து, பள்ளிக்கு போன் மூலமாகவும், நேரில் வந்து விசாரணை செய்தனர்.  இதனால் கம்பைநல்லூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இலவச லேப்டாப்பில் ஸ்டாலின் படத்தை அழித்தவர்களுக்கு செக்.! வாரன்டி இல்லை- மாணவர்களுக்கு ஷாக் தகவல்
இலவச லேப்டாப்பில் ஸ்டாலின் படத்தை அழித்தவர்களுக்கு செக்.! வாரன்டி இல்லை- மாணவர்களுக்கு ஷாக் தகவல்
TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
Tilak Varma: டாடிஸ் ஹோம்..! உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர்? கடைசி நேர ட்விஸ்ட்
Tilak Varma: டாடிஸ் ஹோம்..! உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர்? கடைசி நேர ட்விஸ்ட்
Suzuki e-Access: சுசூகியின் மின்சார ஸ்கூட்டர் ரெடி.. யானை விலைக்கு சோளப்பொறி ரேஞ்சா? இந்த வண்டி தேறுமா?
Suzuki e-Access: சுசூகியின் மின்சார ஸ்கூட்டர் ரெடி.. யானை விலைக்கு சோளப்பொறி ரேஞ்சா? இந்த வண்டி தேறுமா?
ABP Premium

வீடியோ

Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இலவச லேப்டாப்பில் ஸ்டாலின் படத்தை அழித்தவர்களுக்கு செக்.! வாரன்டி இல்லை- மாணவர்களுக்கு ஷாக் தகவல்
இலவச லேப்டாப்பில் ஸ்டாலின் படத்தை அழித்தவர்களுக்கு செக்.! வாரன்டி இல்லை- மாணவர்களுக்கு ஷாக் தகவல்
TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
TN Weather Update: சென்னைக்கு வார்னிங்..! 4 மாவட்டங்களில் மிக கனமழை, 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - இன்றைய தமிழக வானிலை
Tilak Varma: டாடிஸ் ஹோம்..! உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர்? கடைசி நேர ட்விஸ்ட்
Tilak Varma: டாடிஸ் ஹோம்..! உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர்? கடைசி நேர ட்விஸ்ட்
Suzuki e-Access: சுசூகியின் மின்சார ஸ்கூட்டர் ரெடி.. யானை விலைக்கு சோளப்பொறி ரேஞ்சா? இந்த வண்டி தேறுமா?
Suzuki e-Access: சுசூகியின் மின்சார ஸ்கூட்டர் ரெடி.. யானை விலைக்கு சோளப்பொறி ரேஞ்சா? இந்த வண்டி தேறுமா?
Parasakthi : சிவகார்த்திகேயனின் பராசக்தி காட்சிகள் ரத்து..அதிர்ச்சியில் ரசிகர்கள்
Parasakthi : சிவகார்த்திகேயனின் பராசக்தி காட்சிகள் ரத்து..அதிர்ச்சியில் ரசிகர்கள்
Porur to Vadapalani Metro Train: நாளை முதல் வடபழனி டூ போரூர் வரை மெட்ரோ ரயில்.! பொதுமக்கள் எதிர்பார்த்த சூப்பர் நியூஸ் வந்தாச்சு...
நாளை முதல் வடபழனி டூ போரூர் வரை மெட்ரோ ரயில்.! பொதுமக்கள் எதிர்பார்த்த சூப்பர் நியூஸ் வந்தாச்சு...
TN Roundup: ஏறுமுகத்தில் தங்கம், மீனவர்கள் மாயம், பராசக்தி ரிலீஸ், அண்ணாமலை அதிரடி - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: ஏறுமுகத்தில் தங்கம், மீனவர்கள் மாயம், பராசக்தி ரிலீஸ், அண்ணாமலை அதிரடி - தமிழகத்தில் இதுவரை
TASMAC Holiday: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு
Embed widget