மேலும் அறிய

மாவட்ட ஆட்சியரை சந்திக்க காலி குடங்களுடன் வந்த பெண்கள் - தருமபுரியில் பரபரப்பு

காரிமங்கலம் அருகே முறையான குடிநீர் வழங்க வேண்டி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு.

தருமபுரி மாவட்டம் காரியமங்கலம் அடுத்த இண்டமங்கலம் ஊராட்சியில் உள்ள இண்டமங்கலம் காலனியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினரும் 1000-க்கும் மக்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடும் வறட்சி காரணமாக கிராமத்தில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. மேலும்  ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீர் கூட, இந்த கிராமத்திற்கு வருவதில்லை. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக வேண்டி 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள திருப்பத்தூர்-தருமபுரி நெடுஞ்சாலையில் சீராம்பட்டியில் உள்ள ஒகேனக்கல் தண்ணீர் பிடிக்கும் இடத்திற்கு சென்று குடிநீர் கொண்டு வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் கிராமமக்கள் கூலி வேலை செய்து வருவதாலும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருவதால், குடிநீர் தேடி அலைந்து மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் வீட்டில் வளர்க்கும் கால்நடைகளுக்கு கூட தண்ணீர் இல்லாத நிலை உள்ளது.

இது சம்மந்தமாக நாங்கள் ஊராட்சி மன்றத் தலைவரிடமும், காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடமும் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த கிராம மக்களுக்கு தண்ணீர் வசதி கிடைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்துள்ளனர். அப்பொழுது அரசு அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பெண் காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.

இந்த மனுவில், காரிமங்கலம் அடுத்த இண்டமங்கலம் காலனி பகுதிக்கென்று தனியாக இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தொட்டிகள் முழுமையாக வேலை நடைபெறாமல், பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதில் தெருக்களுக்கு குழாய் இணைப்பு கூட வழங்கப்படவில்லை. எனவே எங்கள் இண்டமங்கலம் காலனி பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை பராமரிப்பு வேலை செய்து அதற்கு குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்து தண்ணீர் வழங்கவும், ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தின் மூலம் இணைப்பு வழங்கி குடிநீர் கிடைக்க ஆவண செய்ய வேண்டும். மேலும் குடிநீர் வசதி வழங்கப்படவில்லையென்றால், போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குடிநீர் கேட்டு, பெண்கள் கிராமமக்கள் காலி குடங்களுடன் மனு அளிக்க வந்ததால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“வாஜ்பாய்க்கு பெரிய மனது, சோனியாவுக்கு அது இல்லை” போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர்..!
“வாஜ்பாய்க்கு பெரிய மனது, சோனியாவுக்கு அது இல்லை” போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர்..!
TN Rains: ஃபெஞ்சலால் பெய்த பேய்மழை! வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம் - எப்போதான் வடியும் தண்ணீர்?
TN Rains: ஃபெஞ்சலால் பெய்த பேய்மழை! வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம் - எப்போதான் வடியும் தண்ணீர்?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
அய்யம்பேட்டையில் சோகம்... வீட்டை இடிக்கும்போது சிலாப் விழுந்து 2 பேர் பலி
அய்யம்பேட்டையில் சோகம்... வீட்டை இடிக்கும்போது சிலாப் விழுந்து 2 பேர் பலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“வாஜ்பாய்க்கு பெரிய மனது, சோனியாவுக்கு அது இல்லை” போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர்..!
“வாஜ்பாய்க்கு பெரிய மனது, சோனியாவுக்கு அது இல்லை” போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர்..!
TN Rains: ஃபெஞ்சலால் பெய்த பேய்மழை! வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம் - எப்போதான் வடியும் தண்ணீர்?
TN Rains: ஃபெஞ்சலால் பெய்த பேய்மழை! வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம் - எப்போதான் வடியும் தண்ணீர்?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
அய்யம்பேட்டையில் சோகம்... வீட்டை இடிக்கும்போது சிலாப் விழுந்து 2 பேர் பலி
அய்யம்பேட்டையில் சோகம்... வீட்டை இடிக்கும்போது சிலாப் விழுந்து 2 பேர் பலி
Expensive Passport: இவ்வளவு காசு கட்டணுமா..! உலகின் விலையுயர்ந்த பாஸ்போர்ட் எது? லிஸ்டில் இந்தியாவிற்கு எந்த இடம்?
Expensive Passport: இவ்வளவு காசு கட்டணுமா..! உலகின் விலையுயர்ந்த பாஸ்போர்ட் எது? லிஸ்டில் இந்தியாவிற்கு எந்த இடம்?
Rashmika Mandana:
Rashmika Mandana: "தேசிய விருது கன்ஃபார்ம்" அடித்துச் சொல்லும் புஷ்பா நாயகி ராஷ்மிகா மந்தனா!
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
TN Rain Update: ஓயாமல் அடிக்கும் ஃபெஞ்சல் புயல் - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், கனமழை - சென்னை வானிலை அறிக்கை
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Embed widget