மேலும் அறிய

பெரும்பாலை அகழாய்வில் ஆய்வாளர்களை கவர்ந்த பானை குறியீடுகள்

பெரும்பாலை அகழாய்வில் ஆய்வாளர்களை கவர்ந்த பானை குறியீடுகள்-இந்தக் குறியீடுகளை மேலும் ஆய்வு செய்வதற்கு ஆய்வாளர்கள் திட்டம்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாகாவதி ஆற்றின் கரையில் பெரும்பாலை கிராமம் அமைந்துள்ளது. இந்த பெரும்பாலை கிராமத்தில் உள்ள செம்மனூர் சிவன் கோயிலுக்கு எதிரில் பெரிய தொல்லியல் மேடு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனை அடுத்து தமிழகத் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2022-2023 ஆம் ஆண்டில் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டது. இந்த அகழாய்வு பணிகள் கிட்டத்தட்ட ஆறு மாத காலம் நடைபெற்று வந்தது. 

அப்பொழுது பெரும்பாலை பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் அகழாய்வில் கிடைத்தது. இந்த அகழாய்வு பணியில் கிடைத்த பொருட்களை எல்லாம் சேகரித்து வந்தனர். 

இதில் வரலாற்றுக்கு முற்பட்ட மற்றும் இரும்பு காலத்தைச் சார்ந்த மக்கள் பல்வேறு கால கட்டங்களில் வாழ்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு சான்றாக சிவப்பு, கருப்பு, சிவப்பு மண்பாண்டங்கள், சுடுமண் பொம்மை, சங்கு வளையல்கள், வட்ட சில்லுகள், களிமண் மணிகள், கண்ணாடி வளையல்கள், செம்பு மற்றும் இரும்பாலான பொருட்களின் பகுதிகள், விலை உயர்ந்த மணிகள், பூசப்பட்ட தரை தளம் செங்கல் பட்டைகளும், தொழில் பட்டறைகளும் இருந்ததற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளது. அவற்றில் மண் பாண்டங்களில் இடப்பட்ட, வடிவில் சார்ந்த குறியீடுகளை தொல்லியல் ஆய்வாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. 

ஒரு லட்சம் சதுர மீட்டர் உள்ள தொல்லியல் மேட்டில் வெறும் 425 சதுர மீட்டர் பரப்பளவில் மட்டுமே அகழாய்வு செய்யப்பட்டது. இதில் 1028 பானை குறியீடுகள் கிடைத்துள்ளது. அவற்றில் 297 குறியீடுகள் நன்கு அடையாளம் காண்பவையாக உள்ளது.

இதில் 732 குறியீடுகள் வரையறுக்க முடியாதவை. இதில் பெரும்பாலானவற்றில் ஒரே மாதிரியான குறியீடுகள் இருந்துள்ளது. அதாவது நட்சத்திரம், ஆங்கில எழுத்துக்களான யுடிஏ போன்ற வடிவங்கள், ஏணி, ஸ்வஸ்திக், வில் அம்பு உள்ளிட்ட வடிவங்கள் அதிக அளவில் இருந்துள்ளது. 

அதேபோல கிடைக்கோட்டின் கீழ், வலப்பக்கமும் இடப்பக்கமும் சம எண்ணிக்கையில் சரிந்த கோடுகள் உள்ள கீரல்கள், கிடைமட்டமாக சம இடைவெளியுடன் கூடிய இரண்டு கோடுகள், இரண்டு செங்குத்துக் கோடு, மேல் அல்லது நடுவில் அலை போல் நெலிந்த கோடுகள் உள்ளிட்ட வடிவில் கீரல்கள் அதிக அளவில் கிடைத்துள்ளது. ஆனால் ஒரு தமிழி எழுத்து கீரல்கள் கூட கிடைக்கவில்லை. இங்குள்ள அகழாய்வு குழிகளில் நான்கு கரிம பொருட்கள் அமெரிக்காவில் உள்ள பீட்டா காலக் கணிப்பு ஆய்வகத்திற்கு அனுப்பி சோதிக்கப்பட்டதில், அவை கிமு 6 ஆம் நூற்றாண்டுக்கு முன் பின் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 

இதேபோன்று குறியீடுகள் ஈரோடு மாவட்டம் கொடுமணல், திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் கிடைத்துள்ளது. இவற்றில் இருந்து தமிழி எழுத்துக்கள் தோன்றும் முன், வர்த்தகர்கள் தங்களின் கருத்தை தெரிவிக்க இதுபோன்ற குறியீடுகளை, தமிழகம் முழுவதும் பயன்படுத்தி இருக்கலாம் என்று இது குறித்த விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தலைப்பு செய்திகள்

CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Embed widget