மேலும் அறிய

Crime: 5 வயது சிறுமியை அடித்து சூடு போட்ட சித்தப்பா போக்சோவில் கைது

குழந்தையின் உடலில் ஆங்காங்கே காயம் மற்றும் சூடு போடப்பட்ட வடு மாதிரி தழும்புகள் இருந்துள்ளது. இதனை சகோதரியிடம் கேட்டபோது உடம்பை சிறுமியே கீரிக் கொண்டதாக தெரிவித்துள்ளார். 

தருமபுரி அருகே 5 வயது சிறுமியை அடித்து, துன்புறுத்தி, சூடு போட்டதாக, சித்தப்பா செல்வம் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் பனங்கனஅள்ளி கிராமத்தை சேர்ந்த சிவப்பிரகாசம்-அமுதா தம்பதியினருக்கு மோகன் (15) மற்றும் 5 வயது பெண் குழந்தை என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். அமுதாவின் கணவர் திருப்பூரில்  தங்கி பழைய கட்டிடங்கள் உடைக்கும் பணியை மேற்கொள்கிறார்.

மேலும் கணவர் சரியாக குடும்பத்தை கவனிக்காத நிலையில் இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது தாயாரின் வீடான சின்னபெரம்பனூரில் அமுதா வசித்து வந்துள்ளார். இதில் மகன் மோகன் அக்ரஹாரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் +1 படித்து வரும் நிலையில், சிறுமி இன்னும் பள்ளியில் சேரவில்லை.

இந்நிலையில் அமுதாவின் தாயார் ரேவதி என்பவருக்கு கேன்சர் வந்து சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறார். தனது தாயாரை சென்னை அழைத்துச் செல்ல கடந்த 01.06.24 அன்று  5 வயது மகளை பாப்பாரப்பட்டியில் உள்ள தனது சகோதரி சங்கீதா என்பவர் வீட்டில் விட்டு சென்றுள்ளார்.

இதனையடுத்து தாயாருக்கு சிகிச்சை முடிந்து ஒன்றரை மாதங்கள் கழித்து 20.07.2024 அன்று ஊருக்கு வந்துள்ளார்.‌ அப்பொழுது குழந்தையின் உடலில் ஆங்காங்கே காயம் மற்றும் சூடு போடப்பட்ட வடு மாதிரி தழும்புகள் இருந்துள்ளது. இதனை சகோதரியிடம் கேட்டபோது தனது 7 வயது மகன் அடித்ததாகவும், உடம்பை சிறுமியே கீரிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, குழந்தையினை அருகில் உள்ள தனியார் மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.‌ அப்பொழுது குழந்தையை பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்ந்து பென்னகரம் அரசு மருத்தவமனையில் மருத்துவ பரிசோதனை செய்ததில், காயங்கள் உறுதி செய்யப்பட்டது. 

இதனை தொடர்ந்து மருத்துவர் மற்றும் பென்னாகரம் காவல் துறையினர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்டோர் குழந்தையிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் குழந்தையை, சித்தப்பா செல்வம்(சங்கீதாவின் கணவர்) என்பவர் அடித்ததாகவும், சூடு வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். 

இதனை தொடர்ந்து குழந்தை பென்னகரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மேலும் மருத்துவர்கள் பரிசோதனைகள் செய்தனர். இதனை தொடர்ந்து பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில்  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம், செல்வம் மீது புகார் கொடுக்கப்பட்டது‌. 

இதனையடுத்து குழந்தையை செல்வம் என்பவர் அடித்து துன்புறுத்தியதாகவும், சிறுமி மீது வன்கொடுமை செய்த சித்தப்பா செல்வம் என்பவர் மீது பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, செல்வத்தை கைது செய்தனர். 

மேலும் சித்தப்பாவே சிறுமியை அடித்து சித்தரவதை செய்து சூடு வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Embed widget