மேலும் அறிய

Dharmapuri: அரசு வேலை வாங்கித் தருவதாக 5 கோடி ரூபாய் பணம் பறிப்பு - தருமபுரியில் அட்டூழியம்

தருமபுரி அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் முக்கல்நாயக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வினோதினி என்பவர் பொறியியல் படித்துள்ளார். மேலும் அரசாங்க வேலை வேண்டி பல்வேறு வகையில் முயற்சி செய்து வந்துள்ளார். அப்போது நண்பர் மூலம் போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவரின் மகன் சௌந்தரம், சக்திவேல் அவரது மனைவி ரூபினி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் அறிமுகம் கிடைத்துள்ளது.

அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை:

அப்போது சௌந்தரம் என்பவர், தலைமைச் செயலகத்தில் அதிகாரியாக வேலை செய்து வருவதாகவும், பல பேருக்கு பல்வேறு துறைகளை அரசு வேலை வாங்கித் தந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதே போல் நீங்களும் பணம் கொடுத்தால் உங்களுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளார். அப்போது அவரது அண்ணன்கள் சக்திவேல் ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது தாயார் பாஞ்சாலை அண்ணி ரூபிணி ஆகியோர் உடன் இருந்துள்ளனர். மேலும் அவர்கள் அனைவரும் சேர்ந்து தைரியமாக பணம் கொடுங்கள் என்றும், உங்களைப்போல் படித்துவிட்டு வேலை இல்லாதவர்களை அழைத்து வாருங்கள், அவருக்கும் அரசு வேலை வாங்கி தரலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

 

Dharmapuri: அரசு வேலை வாங்கித் தருவதாக 5 கோடி ரூபாய் பணம் பறிப்பு - தருமபுரியில் அட்டூழியம்

போலியான பணி நியமன ஆணை

இதனை நம்பிய வினோதினி  நேரடியாகவும் . வங்கி கணக்கு மூலமாகவும் பணம் கொடுத்துள்ளார். வினோதினியிடம் மட்டுமின்றி பலரிடமும் இந்திய உணவுக் கழகத்தில் வேலை, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை என பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளார். வினோதினிக்கு இந்திய உணவுக் கழகத்தில் வேலைக்கான பணி உத்தரவை கொடுத்துள்ளார். இந்த பணி நியமன ஆணை குறித்து விசாரித்தபோது போலி உத்தரவு என தெரியவந்துள்ளது. இதேபோல் ஆனந்தன், கண்ணன், ராஜசேகர், சிலம்பரசன் என்பவர்களுக்கும் இந்திய உணவுக் கழகத்தில் போலியான பணி நியமன உத்தரவை கொடுத்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தியதில், பணி நியமன உத்தரவு போலி என்று தெரிந்து கொண்டனர்.

கொலை மிரட்டல்

இதனையறிந்து பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்று சேர்ந்து சௌந்தரத்திடம் கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு ஏழுமலை என்பவர் பாதிக்கப்பட்டவர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார் . இதனால் அச்சமடைந்த பாதிக்கப்பட்டவர்கள் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

இந்த மனுவில், எங்களை ஏமாற்றிய பணத்தில் தான் அந்த கும்பல் காரிமங்கலத்தில் கல்லூரி ஆரம்பித்ததாகவும், பல இடங்களில் விவசாய நிலங்கள் வாங்கி இருப்பதாகவும், தெரிய வருகிறது. எனவே இதே போல் பல பேரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ஐந்து கோடி ரூபாய் வரை ஏமாற்றி உள்ளார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீண்டு தரவேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs PBKS LIVE Score: பஞ்சாப் பந்து வீச்சை பஞ்சாய் பறக்கவிடும் ஆர்சிபி!
RCB vs PBKS LIVE Score: பஞ்சாப் பந்து வீச்சை பஞ்சாய் பறக்கவிடும் ஆர்சிபி!
”ரொம்ப வருத்தமா இருக்கு” சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் இரங்கல்
Sivakasi Blast: ”ரொம்ப வருத்தமா இருக்கு” சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் இரங்கல்
Vijyakanth: பத்மபூஷன் விருது பெற்ற 8 தமிழர்கள்....விஜயகாந்த் சார்பாக விருதை பெற்றுக் கொண்ட பிரேமலதா
பத்மபூஷன் விருது பெற்ற 8 தமிழர்கள்....விஜயகாந்த் சார்பாக விருதை பெற்றுக் கொண்ட பிரேமலதா
Star Movie: ஸ்டார் படம் பார்த்துட்டு இத பண்ணாதீங்க ப்ளீஸ்.. இயக்குநர் இளன் ரசிகர்களுக்கு வைத்த கோரிக்கை!
Star Movie: ஸ்டார் படம் பார்த்துட்டு இத பண்ணாதீங்க ப்ளீஸ்.. இயக்குநர் இளன் ரசிகர்களுக்கு வைத்த கோரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Narayanan Thirupathy on Savukku : ”சவுக்கு தாக்கப்பட்டாரா? ஏத்துக்க முடியாது” நாராயணன் திருப்பதிsanjiv goenka angry on kl rahul : அன்று தோனி.. இன்று ராகுல்! திருந்தமாட்டீங்களா கோயங்கா!Karti Chidambaram slams modi : Thiruchendhur beach : திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்! ஆபத்தை உணராத பக்தர்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs PBKS LIVE Score: பஞ்சாப் பந்து வீச்சை பஞ்சாய் பறக்கவிடும் ஆர்சிபி!
RCB vs PBKS LIVE Score: பஞ்சாப் பந்து வீச்சை பஞ்சாய் பறக்கவிடும் ஆர்சிபி!
”ரொம்ப வருத்தமா இருக்கு” சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் இரங்கல்
Sivakasi Blast: ”ரொம்ப வருத்தமா இருக்கு” சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் இரங்கல்
Vijyakanth: பத்மபூஷன் விருது பெற்ற 8 தமிழர்கள்....விஜயகாந்த் சார்பாக விருதை பெற்றுக் கொண்ட பிரேமலதா
பத்மபூஷன் விருது பெற்ற 8 தமிழர்கள்....விஜயகாந்த் சார்பாக விருதை பெற்றுக் கொண்ட பிரேமலதா
Star Movie: ஸ்டார் படம் பார்த்துட்டு இத பண்ணாதீங்க ப்ளீஸ்.. இயக்குநர் இளன் ரசிகர்களுக்கு வைத்த கோரிக்கை!
Star Movie: ஸ்டார் படம் பார்த்துட்டு இத பண்ணாதீங்க ப்ளீஸ்.. இயக்குநர் இளன் ரசிகர்களுக்கு வைத்த கோரிக்கை!
TN Heat Wave: கொளுத்தும் வெயில்.. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த ஸ்ட்ரிக்ட் உத்தரவு - எதுக்குனு தெரியுமா?
TN Heat Wave: கொளுத்தும் வெயில்.. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த ஸ்ட்ரிக்ட் உத்தரவு - எதுக்குனு தெரியுமா?
Rahul Guarantee:
"ஆகஸ்ட் 15-க்குள் 30 லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரம்பும்" : ராகுல் காந்தி அதிரடி..
Flight Crash: போயிங் 737 விமானம் டேக் ஆஃப் ஆகும்போது விபத்து; 10 பேர் காயம் என முதற்கட்ட தகவல்
Flight Crash: போயிங் 737 விமானம் டேக் ஆஃப் ஆகும்போது விபத்து; 10 பேர் காயம் என முதற்கட்ட தகவல்
Watch Video: கர்ப்பகால வயிற்றை மறைக்க தீபிகா படுகோன் செய்த செயல்.. வைரலாகும் க்யூட் வீடியோ!
கர்ப்பகால வயிற்றை மறைக்க தீபிகா படுகோன் செய்த செயல்.. வைரலாகும் க்யூட் வீடியோ!
Embed widget