மேலும் அறிய

கோவையில் பிடிபட்ட வெள்ளை நிற நாகபாம்பு ; பொதுமக்கள் ஆச்சரியம்

அல்பினோ கோப்ரா என்ற வகையை சேர்ந்த இந்த நாகப்பாம்பு மரபணு பிரச்சினை காரணமாக வெள்ளை நிறத்தில் இருப்பதாகவும், மரபணு மற்றும் நிறமி பிரச்சனைகளால் பாம்புகள் வெள்ளைநிறத்தில் இருக்கும்

கோவை சுந்தராபிரம் பகுதியில் ஒரு வீட்டில் பிடிக்கப்பட்ட வெள்ளை நிற நாகபாம்பு பத்திரமாக வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் உரிமையாளர், தண்ணீர் தொட்டியில் வழக்கம் போல் தண்ணீர் நிரப்ப சென்றுள்ளார். அப்போது அந்தப் பகுதியில் ஒரு வெள்ளை நிற நாகபாம்பு பதுங்கி இருந்துள்ளது. வெள்ளை நிற நாகபாம்பு இருப்பதை பார்த்து அந்த வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். ந்த பாம்பை அடித்து கொல்ல மனம் இல்லாத அவர், வீட்டில் வெள்ளை நிற நாகப்பாம்பு ஒன்று இருப்பதாகவும், அதனை பிடித்து செல்லுமாறும் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினருக்கு தகவல் அளித்துள்ளார். இதன் பேரில் அவ்வமைப்பை சேர்ந்த மோகன் என்பவர் விரைந்து சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு பார்சியல் ஆல்பினோ கோப்ரா என்ற வகையைச் சார்ந்த இரண்டடி நீளம் கொண்ட வெள்ளை நிற நாகபாம்பு இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அந்த வெள்ளை நிற நாகப்பாம்பை காயமின்றி பத்திரமாக பிடித்தார். பின்னர் அந்த வெள்ளை நிற நாக பாம்பை கோவை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். வனத்துறையினர் அந்த வெள்ளை நிற நாகத்தை வனப்பகுதியில் பத்திரமாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அல்பினோ கோப்ரா என்ற வகையை சேர்ந்த இந்த நாகப்பாம்பு மரபணு பிரச்சினை காரணமாக வெள்ளை நிறத்தில் இருப்பதாகவும், வெள்ளை நிற நாக பாம்புகள் தனி வகையை சார்ந்தது இல்லை எனவும், மரபணு மற்றும் நிறமிகளில் இருக்கும் பிரச்சனைகள் காரணமாக பாம்புகள் வெள்ளைநிறத்தில் இருக்கும் எனவும் வன ஆர்வலர்கள் தெரிவித்தனர். மழைக்காலம் என்பதால் பாம்புகள் அதிகளவில் உலாவலாம் எனவும், பாம்புகள் அச்சத்தில் தான் மனிதர்களை தாக்குவதாகவும், இதுபோல பாம்புகள் வீடுகளுக்கு வந்தால் அவற்றை அடித்துக் கொள்ளாமல் உடனடியாக வனத்துறை மற்றும் பாம்பு பிடிப்பவர்களிடம் கூறினால், அவற்றை மீட்டு பத்திரமாக வனப்பகுதிக்குள் விடுவார்கள் எனவும் அவர்கள் தெரிவித்தனர். கோவையில் சில மாதங்களுக்கு முன்பாக இதே போல போத்தனூர் வெள்ளை நாகப்பாம்பு பிடிபட்டது. சில மாதங்கள் இடைவெளிக்கு பின்னர் அதே பகுதிக்கு அருகே மீண்டும் வெள்ளை நாகப்பாம்பு பிடிபட்டுள்ளது.  ஏற்கனவே கடந்த 2019 ம் ஆண்டு கோவை மதுக்கரை பகுதியிலும், கடந்த 2022 ம் ஆண்டு சுந்தராபுரம் பகுதியிலும் இதே போன்ற வெள்ளை நிற பாம்பு மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கோவையில் தொடர்ச்சியாக வெள்ளை நிற நாகப்பாம்புகள் அடிக்கடி பிடிக்கப்படுவது பொதுமக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க : திருச்செந்தூரில் குழந்தையை கடத்தியதாக கைதான பெண் காவல் நிலையத்தில் உயிரிழப்பு

 

தலைப்பு செய்திகள்

TN Weather: கோவை, நீலகிரி, குமரியில் இன்று கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
கோவை, நீலகிரி, குமரியில் இன்று கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
coimbatore power cut: கோவை மக்களே உஷார்! - நாளை ( 04-07-2026) இந்த இடங்களில் எல்லாம் கரண்ட் இருக்காது
கோவை மக்களே உஷார்! - நாளை ( 04-07-2026) இந்த இடங்களில் எல்லாம் கரண்ட் இருக்காது
coimbatore power cut: கோவை மக்களே அலர்ட் - நாளை (25-06-2026) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் முழுப் பட்டியல் இதோ
கோவை மக்களே அலர்ட் - நாளை (25-06-2026) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் முழுப் பட்டியல் இதோ
சொந்த குழந்தையை கொன்ற தாய்... 14 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் தீர்ப்பு
சொந்த குழந்தையை கொன்ற தாய்... 14 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் தீர்ப்பு

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN : “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
“நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
Anitha Radhakrishnan released : அனிதா ராதாகிருஷ்ணனை சிறையில் அடைக்க மறுப்பு.! தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த நீதிபதி- நடந்தது என்ன.?
அனிதா ராதாகிருஷ்ணனை சிறையில் அடைக்க மறுப்பு.! தவெக அரசுக்கு ஷாக் - நடந்தது என்ன?
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Honda Car Offers: 2.15 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. கார்களுக்கு ஆஃபரை அள்ளித் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.15 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. கார்களுக்கு ஆஃபரை அள்ளித் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Ayatollah Ali Khamenei Funeral: இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
Online Automated Patta Transfer : இனி பட்டா மாறுதல்களுக்கு தினமும் அலைய வேண்டாம்.! புதிய நடைமுறை அமல்- என்ன தெரியுமா.?
இனி பட்டா மாறுதல்களுக்கு தினமும் அலைய வேண்டாம்.! புதிய நடைமுறை அமல்- என்ன தெரியுமா.?
Vaigai Selvan quits AIADMK : அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
Embed widget