Valparai Accident: சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்! – வால்பாறை மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு
வால்பாறையில் சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு.

கோவை மாவட்டம் வால்பாறையில் சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர். வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வால்பாறை மலைச்சாலையில் 13ஆவது கொண்டை ஊசி வளைவில் வேன் கவிழ்ந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
கேரள மாநிலத்தில் இருந்து சுற்றுலா வந்த வேன் விபத்துக்குள்ளாகியுள்ளது. 16 பேர் பயணம் செய்த வேன் வளைவில் திரும்பும்போது விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
Before You Go
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
ட்ரெண்டிங் செய்திகள்






















