மேலும் அறிய

சுற்றுலா பயணிகளிடம் தகராறு: வனச்சரகர் கைது; வன ஊழியர்கள் போராட்டம்!

வால்பாறை காவல் துறையினர் வால்பாறை வனச்சரகர் ஜெயச்சந்திர கிருஷ்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு பதிவு செய்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள சிறு குன்றா வனப் பகுதியில் வனத் துறைக்கு சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. இந்த பகுதி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியாக இருந்து வருகிறது. இங்கு வால்பாறை நீதிமன்ற எழுத்தர் மனோகரனின் விருந்தினர்களாக, சுற்றுலா பயணிகள் இரண்டு பேர் நேற்றிரவு தங்கி உள்ளனர். இதனிடையே இரவு நேரத்தில் சுற்றுலா பயணிகள் இருவரும் தங்கும் விடுதியை விட்டு வெளியேறி வனப் பகுதியில் சுற்றியதாக தெரிகிறது. இதனை இரவு நேர ரோந்து பணியில் இருந்த வால்பாறை வனச்சரகர் ஜெயச்சந்திர கிருஷ்ணன் பார்த்துள்ளார். இதையடுத்து வனச்சரகர் ஜெயச்சந்திர கிருஷ்ணன் சுற்றுலா பயணிகளை கண்டித்ததாகவும், இரவு நேரத்தில் வன விலங்குகள் அதிகம் நடமாடுவதால் வெளியில் சுற்ற வேண்டாமென கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் வனச் சரகருக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


சுற்றுலா பயணிகளிடம் தகராறு: வனச்சரகர் கைது; வன ஊழியர்கள் போராட்டம்!
சுற்றுலா பயணிகளிடம் தகராறு: வனச்சரகர் கைது; வன ஊழியர்கள் போராட்டம்!

இதையடுத்து வனச்சரகர் ஜெயச்சந்திர கிருஷ்ணன் சுற்றுலா பயணிகளை  வன விலங்குகள் நடமாட்டம் மிகுந்த பரிச்சமற்ற பகுதியில், இரவு நேரத்தில் கட்டாயப்படுத்தி வெளியற்றதாகவும், மது போதையில் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் வால்பாறை நீதிமன்ற எழுத்தர் மனோகரன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் வால்பாறை காவல் துறையினர் வால்பாறை வனச்சரகர் ஜெயச்சந்திர கிருஷ்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு பதிவு செய்தனர். இதையடுத்து வனச்சரகர் ஜெயச்சந்திர கிருஷ்ணன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.


சுற்றுலா பயணிகளிடம் தகராறு: வனச்சரகர் கைது; வன ஊழியர்கள் போராட்டம்!

சுற்றுலா பயணிகள் நீதிபதி ஒருவரின் உறவினர்கள் எனவும், அதன் காரணமாக வனச்சரகர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வால்பாறை வனச் சரகரை முறையாக விசாரிக்காமல் பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக கூறி, அட்டகட்டி சோதனைச் சாவடி முன்பு 200க்கும் மேற்பட்ட ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பணியாற்றும் வனத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வனச்சரகரை மிரட்டியதோடு, நீதித் துறையின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வனச்சரகரை கைது செய்து இருப்பதாக வன ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். வனச்சரகரை கைது செய்ததை கண்டித்தும், வனப் பணியாளர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக வன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வார காலம் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். நீதிமன்ற ஊழியரின் புகாரின் பேரில் வனச்சரகர் கைது செய்யப்பட்ட சம்பவமும், அதனைத் தொடர்ந்து நடக்கும் வன ஊழியர்கள் போராட்டமும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
TVK Government : ’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?-பரபரப்பு தகவல்கள்..!
’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு சொட்டு நீர் கூட கிடைக்காது! - விழிப்புணர்வு பயணத்தைத் தொடங்கினார் அன்புமணி !
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு சொட்டு நீர் கூட கிடைக்காது! - விழிப்புணர்வு பயணத்தைத் தொடங்கினார் அன்புமணி !
Embed widget