மேலும் அறிய

பெரியார் குறித்து அவதூறு சுவரொட்டி ; பாரத்சேனா அமைப்பினர் இருவர் கைது..!

பெரியார் குறித்த அவதூறு சுவரொட்டிகளை ஒட்டியதற்காக முத்துகிருஷ்ணன், தமிழரசன் இருவரையும் கைது செய்த காவல் துறையினர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

பகுத்தறிவு பகலவன் எனப் போற்றப்படும் பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடந்து முடிந்த சட்ட மன்ற கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்  தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ம் தேதி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என அறிவித்தார். இதன்படி இன்று சமூக நீதி நாளாக அனுசரிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,  மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் சமூக நீதி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பெரியார் சிலைக்கு பல்வேறு தரப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


பெரியார் குறித்து அவதூறு சுவரொட்டி ; பாரத்சேனா அமைப்பினர் இருவர் கைது..!

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக, தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பறை இசை முழங்க ஆட்டம் பாட்டத்துடன் பெரியார் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்ததை வரவேற்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோரின் முகமூடி அணிந்தபடி வந்து சமூக நீதி கட்சியினர் மரியாதை செலுத்தினர். இதேபோல பெரியார் பிறந்த நாளை பல்வேறு பகுதிகளில் உள்ள பெரியார் சிலைக்கு முன்பு பல்வேறு அமைப்பினர் கொண்டாடினர்.


பெரியார் குறித்து அவதூறு சுவரொட்டி ; பாரத்சேனா அமைப்பினர் இருவர் கைது..!

இந்நிலையில் காந்திபுரம் அருகே உள்ள 100 அடி சாலை மற்றும் டாடாபாத் பகுதியில்  பெரியாரைப் பற்றி அவதூறாக பாரத் சேனா என்ற அமைப்பின் சார்பில் நேற்றிரவு சுவரொட்டிகள் ஓட்டப்பட்டன. இது குறித்த தகவலின் பேரில் காட்டூர் காவல் துறையினர் அப்பகுதிக்கு சென்று பார்த்த போது, அச்சுவரொட்டிகளை ஒருவர் ஒட்டிக் கொண்டிருப்பதை பார்த்துள்ளனர். அந்த நபரை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் சுவரொட்டியை ஒட்டியவர் ரவிக்குமார் என்பதும், கோவை மாவட்ட பாரத் சேனா இளைஞர் அணி பொதுச் செயலாளர் முத்துகிருஷ்ணன் (31) என்பவரும், பாரத் சேனா பீளமேடு பகுதி உறுப்பினர் தமிழரசன் (30) என்பவரும் சுவரொட்டிகளை ஒட்டச் சொல்லியதும் தெரியவந்தது. இதையடுத்து சுவரொட்டிகளை பறிமுதல் செய்த காவல் துறையினர் ரவிக்குமாரை காட்டூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து முத்துகிருஷ்ணன் மற்றும் தமிழரசனை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின்னர் ரவிக்குமார் கூலித் தொழிலாளி என்பதும், பாரத் சேனா அமைப்பை சேர்ந்த முத்துகிருஷ்ணன், தமிழரசன் இருவரும் சுவரொட்டிகளை ஒட்டச் சொல்லியதும் தெரியவந்தது. இதன் பின்னர் ரவிக்குமார் விடுவிக்கப்பட்டார். பெரியார் குறித்த அவதூறு சுவரொட்டிகளை ஒட்டியதற்காக முத்துகிருஷ்ணன், தமிழரசன் இருவரையும் கைது செய்த காவல் துறையினர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

‘சவால்’ போட்டியில் சோகம் – நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
‘சவால்’ போட்டியில் சோகம் – நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
காம்பவுண்ட் சுவரில் தாவிய விலங்கு... சிறுத்தையா? காட்டு பூனையா? - பீதியில் கோவை மக்கள்...
காம்பவுண்ட் சுவரில் தாவிய விலங்கு... சிறுத்தையா? காட்டு பூனையா? - பீதியில் கோவை மக்கள்...
மதுபோதையில் மிரட்டல் ரைடு... கோவையில் இரவில் அட்டகாசம் செய்யும் இளைஞர்கள்....
மதுபோதையில் மிரட்டல் ரைடு... கோவையில் இரவில் அட்டகாசம் செய்யும் இளைஞர்கள்....
“கோவிந்தா கோவிந்தா” முழக்கத்தில் அதிர்ந்த காரமடை – மாசி மகா தேர் திருவிழா விமர்சை!
“கோவிந்தா கோவிந்தா” முழக்கத்தில் அதிர்ந்த காரமடை – மாசி மகா தேர் திருவிழா விமர்சை!
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Cluster Bomb Attack: முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
Gold rate today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
Top 10 News Headlines: அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
அன்புமணி, எல்.கே. சுதீஷ் வேட்புமனு, நிதிஷ் இல்லம் முன்பு போராட்டம், கொத்து குண்டால் தாக்கிய ஈரான் - 11 மணி செய்திகள்
Congress Rajya Sabha candidate : காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
Who Killed Khamenei.?: ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
DMK - Congress: நாங்க மகிழ்ச்சியா இல்ல.. தியாகம் பண்றோம் அவ்வளவு தான்.. காங்கிரஸ் தலைவர் ஆதங்கம்!
DMK - Congress: நாங்க மகிழ்ச்சியா இல்ல.. தியாகம் பண்றோம் அவ்வளவு தான்.. காங்கிரஸ் தலைவர் ஆதங்கம்!
AIADMK: யப்பா முடியலடா.. அதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு புது கட்சி.. என்ன தெரியுமா?
AIADMK: யப்பா முடியலடா.. அதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு புது கட்சி.. என்ன தெரியுமா?
Salem: தேர்தல் சீசன் வந்தா போதும்.. பேரம் பேசும் பிரேமலதா.. விளாசிய விந்தியா!
Salem: தேர்தல் சீசன் வந்தா போதும்.. பேரம் பேசும் பிரேமலதா.. விளாசிய விந்தியா!
Embed widget