மேலும் அறிய

கோவை : மிரட்டும் கனமழை, காட்டு யானை - பழுதடைந்த வீடுகளால் பரிதவிக்கும் பழங்குடிகள்

கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், நேற்றிரவு பெய்த மழை காரணமாக மாயவன் என்பவரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சின்னார்பதி கிராமத்தில் கனமழை காரணமாக வீடுகள் சேதமடைந்துள்ளதால், பழங்குடியின மக்கள் பரிதவித்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் 1109 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. இந்த புலிகள் காப்பகத்திற்குள் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை உள்ளிட்ட 6 வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள 18 பழங்குடியின கிராமங்களில் காடர், மலசர், மலை மலசர், முதுவர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.


கோவை : மிரட்டும் கனமழை, காட்டு யானை - பழுதடைந்த வீடுகளால் பரிதவிக்கும் பழங்குடிகள்

பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட சின்னார்பதி வனக்கிராமம் ஆழியாறு அணைக்கு அருகே அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 27 மலை மலசர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு சார்பில் இக்கிராமத்தில் கட்டித் தரப்பட்ட வீடுகள் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றன. இதனிடையே கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், நேற்றிரவு பெய்த மழை காரணமாக மாயவன் என்பவரின் வீட்டின்  சுவர் இடிந்து விழுந்தது. இதேபோல மற்ற வீடுகளும் சேதமடைந்து இருப்பதால் மழைக்காலங்களில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், இரவில் கடும் மழை மற்றும் பனியில் உறக்கம் இல்லாமல் தவித்து வருவதாகவும் அப்பழங்குடியின மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த ஒரு வார காலமாக சின்னார்பதி கிராமத்திற்குள் ஒற்றை காட்டு யானை முகாமிட்டு இருந்தாலும்,  அதனை விரட்ட வனத்துறையினர்  நடவடிக்கை எடுக்காததால் அச்சத்துடன் வாழ வேண்டியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பேசிய தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் பரமசிவம், “சின்னார்பதி மக்களுக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டித்தரப்பட்ட வீடுகள் முழுவதும் சேதமடைந்துள்ளன. மழைக்காலங்களில் வீடுகள் ஒழுகுவதால் இரவு நேரங்களில் உறங்க முடியாமல், குழந்தைகளுடன் தவித்து வருகின்றனர். பழுதடைந்த வீடுகளில் மக்கள் எத்தனை காலம் தான் வாழ்வார்கள்? வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் எந்த உதவியும் செய்வதில்லை. இப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானையை விரட்டாமல் வனத்துறை அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். 


கோவை : மிரட்டும் கனமழை, காட்டு யானை - பழுதடைந்த வீடுகளால் பரிதவிக்கும் பழங்குடிகள்

சின்னார்பதி பழங்குடிகள் மேம்பாட்டு குழு என்ற பெயரில் வனத்துறை பணம் வசூலித்து குரங்கு அருவியில் சுற்றுலா பயணிகளுக்காக உடை மாற்றும் அறை கட்டியுள்ளது. ஆனால் அதேபகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு எந்த வசதியும் செய்து தரவில்லை. எந்த அடிப்படை வசதிகளும் செய்து தராமல் இருந்தால் பழங்குடியின மக்கள் தாங்களவே இக்கிராமத்தில் இருந்து வெளியேறி விடுவார்கள் என்ற எண்ணத்துடன் வனத்துறை செயல்பட்டு வருகிறது. 47 குடும்பங்கள் இருந்த கிராமத்தில் தற்போது, 27 குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். பலமுறை மனு அளித்தும், போராட்டம் நடத்தியும் தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இக்கிராமத்தில் உள்ள மக்களுக்கு பழுதடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிதாக வீடுகள் கட்டித்தர வேண்டும். அக்கிராமத்திற்குள் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
Embed widget