மேலும் அறிய

கோவை : மிரட்டும் கனமழை, காட்டு யானை - பழுதடைந்த வீடுகளால் பரிதவிக்கும் பழங்குடிகள்

கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், நேற்றிரவு பெய்த மழை காரணமாக மாயவன் என்பவரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சின்னார்பதி கிராமத்தில் கனமழை காரணமாக வீடுகள் சேதமடைந்துள்ளதால், பழங்குடியின மக்கள் பரிதவித்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் 1109 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. இந்த புலிகள் காப்பகத்திற்குள் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை உள்ளிட்ட 6 வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள 18 பழங்குடியின கிராமங்களில் காடர், மலசர், மலை மலசர், முதுவர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.


கோவை : மிரட்டும் கனமழை, காட்டு யானை - பழுதடைந்த வீடுகளால் பரிதவிக்கும் பழங்குடிகள்

பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட சின்னார்பதி வனக்கிராமம் ஆழியாறு அணைக்கு அருகே அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 27 மலை மலசர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு சார்பில் இக்கிராமத்தில் கட்டித் தரப்பட்ட வீடுகள் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றன. இதனிடையே கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், நேற்றிரவு பெய்த மழை காரணமாக மாயவன் என்பவரின் வீட்டின்  சுவர் இடிந்து விழுந்தது. இதேபோல மற்ற வீடுகளும் சேதமடைந்து இருப்பதால் மழைக்காலங்களில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், இரவில் கடும் மழை மற்றும் பனியில் உறக்கம் இல்லாமல் தவித்து வருவதாகவும் அப்பழங்குடியின மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த ஒரு வார காலமாக சின்னார்பதி கிராமத்திற்குள் ஒற்றை காட்டு யானை முகாமிட்டு இருந்தாலும்,  அதனை விரட்ட வனத்துறையினர்  நடவடிக்கை எடுக்காததால் அச்சத்துடன் வாழ வேண்டியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பேசிய தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் பரமசிவம், “சின்னார்பதி மக்களுக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டித்தரப்பட்ட வீடுகள் முழுவதும் சேதமடைந்துள்ளன. மழைக்காலங்களில் வீடுகள் ஒழுகுவதால் இரவு நேரங்களில் உறங்க முடியாமல், குழந்தைகளுடன் தவித்து வருகின்றனர். பழுதடைந்த வீடுகளில் மக்கள் எத்தனை காலம் தான் வாழ்வார்கள்? வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் எந்த உதவியும் செய்வதில்லை. இப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானையை விரட்டாமல் வனத்துறை அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். 


கோவை : மிரட்டும் கனமழை, காட்டு யானை - பழுதடைந்த வீடுகளால் பரிதவிக்கும் பழங்குடிகள்

சின்னார்பதி பழங்குடிகள் மேம்பாட்டு குழு என்ற பெயரில் வனத்துறை பணம் வசூலித்து குரங்கு அருவியில் சுற்றுலா பயணிகளுக்காக உடை மாற்றும் அறை கட்டியுள்ளது. ஆனால் அதேபகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு எந்த வசதியும் செய்து தரவில்லை. எந்த அடிப்படை வசதிகளும் செய்து தராமல் இருந்தால் பழங்குடியின மக்கள் தாங்களவே இக்கிராமத்தில் இருந்து வெளியேறி விடுவார்கள் என்ற எண்ணத்துடன் வனத்துறை செயல்பட்டு வருகிறது. 47 குடும்பங்கள் இருந்த கிராமத்தில் தற்போது, 27 குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். பலமுறை மனு அளித்தும், போராட்டம் நடத்தியும் தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இக்கிராமத்தில் உள்ள மக்களுக்கு பழுதடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிதாக வீடுகள் கட்டித்தர வேண்டும். அக்கிராமத்திற்குள் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
TN WEATHER: அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Embed widget