மேலும் அறிய

திருப்பூரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்களை கடத்தி பணம் பறித்த வழக்கு - 3 காவலர்கள் உட்பட 6 பேர் கைது

திருப்பூரில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணின் கணவரை கடத்தி 1 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய 3 காவலர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் - தாராபுரம் சாலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பவித்ரன் என்பவர், தனது மனைவியை பாலியல் தொழில் ஈடுபடுத்தி வந்துள்ளார். மேலும் அவரது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். பாலியல் தொழில் செய்யும் பெண்ணிடம் வாடிக்கையாளர் போல அணுகிய சிலர், அவரது வீட்டிற்கு சென்று அங்கு பாலியல் தொழில் நடைபெறுவதை உறுதி செய்தனர். பின்னர் சீருடை அணிந்த 3 காவலர்களும் அங்கே வந்து  கணவர் பவித்ரனை தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு ரூ.1 லட்சம் பணம் கேட்டு காரில் கடத்திச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் நல்லூர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றுள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் பதட்டத்துடன் சென்ற பெண்ணை நிறுத்தி விசாரித்த போது, காவலர்கள் தனது கணவரை அழைத்துச் சென்றது குறித்து தெரிவித்துள்ளார்.

காவலர்கள் கைது

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் பவித்திரன் செல்போன் எண்ணை கொண்டு தேடியதில் அவர் பெருமாநல்லூரில் இருப்பதை கண்டறிந்தனர். உடனடியாக அங்கு சென்ற காவல் துறையினர் தனியார் தங்கும் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். பின்னர் அவரை மீட்ட காவல் துறையினர் அவருடன் திருச்சியை சேர்ந்த தனபால் சிங், ஈரோட்டை சேர்ந்த முருகன் என்ற மேலும் இரண்டு பேரையும் கடத்தி வைக்கப்பட்டதை கண்டறிந்து, அவர்களையும் மீட்டனர். ஆட்களை கடத்திய வழக்கில் திருப்பூர் ஆயுதப்படை காவலர்கள் கோபால்ராஜ் (33), சோமசுந்தரம் (33), நீலகிரி சோலூர் மட்டம் காவல் நிலைய காவலர் லட்சுமணன் (32) மற்றும் இவர்களுக்கு உதவி செய்த ஜெயராமன் (20), ஹரீஷ் (25), அருண்குமார் (24) என 6 பேரை நல்லூர் காவல் துறையினர் கைது செய்தனர்.

பணியிடை நீக்கம்

விசாரணையில் சோமசுந்தரம், கோபால்ராஜ், லட்சுமணன் ஆகிய மூன்று பேரும் ஆயுதப்படையில் ஒன்றாக பணியாற்றி வந்ததும், பின்னர் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்ட போதும் தொடர்ந்து ஒன்றாக பேசி வந்ததாகவும் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை கண்காணித்து, இதுபோல கடத்தி பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது. இவர்கள் மேலும் பலரிடமும் இதுபோல கடத்தி பணம் பறித்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் நீலகிரி காவல் கண்காணிப்பாளர் காவலர்கள் 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளனர். பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை கடத்தி காவலர்களே பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7400
Active
11967
Recovered
87
Deaths
Last Updated: Sat 14 June, 2025 at 04:00 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TNPSC Group 1: க்ரூப் -1 தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது? முதன்மை தேர்வு - டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு
TNPSC Group 1: க்ரூப் -1 தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது? முதன்மை தேர்வு - டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு
Ahmedabad Flight Crash: விமானியே சொல்லி இருக்கார்.. நொறுங்கும் முன் ”விமானத்தில் இதுதான் பிரச்னையாம்”
Ahmedabad Flight Crash: விமானியே சொல்லி இருக்கார்.. நொறுங்கும் முன் ”விமானத்தில் இதுதான் பிரச்னையாம்”
மதுரையில் காவல்நிலையத்தை சூறையாடிய இருவர் விருதுநகரில் கைது !
மதுரையில் காவல்நிலையத்தை சூறையாடிய இருவர் விருதுநகரில் கைது !
Tamil Cinema: நிரம்பி வழியும் தாத்தா, அங்கிள்கள் - தத்தளிக்கும் தமிழ் சினிமா, நோ மாஸ், காதலுக்கு டிமேண்ட்
Tamil Cinema: நிரம்பி வழியும் தாத்தா, அங்கிள்கள் - தத்தளிக்கும் தமிழ் சினிமா, நோ மாஸ், காதலுக்கு டிமேண்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MDMK Join ADMK BJP Alliance | பாஜக கூட்டணியில் மதிமுக?அதிர்ச்சியில் திமுக! எல்.முருகன் ட்விஸ்ட்”PHOTO-க்கு போஸ் மட்டும் தான்”ஆய்வுக்கு வந்த MLA அடித்து விரட்டிய பொதுமக்கள்Anirudh Kavya Maran Marriage : அனிருத்-க்கு திருமணம்?காவ்யா மாறனுடன் காதல்! SECRET உடைத்த பிரபலம்”நமக்கு எதுக்கு அதிக சீட்” வார்னிங் கொடுத்த அமித்ஷா! EPS-ஐ வைத்து மோடியின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 1: க்ரூப் -1 தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது? முதன்மை தேர்வு - டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு
TNPSC Group 1: க்ரூப் -1 தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது? முதன்மை தேர்வு - டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு
Ahmedabad Flight Crash: விமானியே சொல்லி இருக்கார்.. நொறுங்கும் முன் ”விமானத்தில் இதுதான் பிரச்னையாம்”
Ahmedabad Flight Crash: விமானியே சொல்லி இருக்கார்.. நொறுங்கும் முன் ”விமானத்தில் இதுதான் பிரச்னையாம்”
மதுரையில் காவல்நிலையத்தை சூறையாடிய இருவர் விருதுநகரில் கைது !
மதுரையில் காவல்நிலையத்தை சூறையாடிய இருவர் விருதுநகரில் கைது !
Tamil Cinema: நிரம்பி வழியும் தாத்தா, அங்கிள்கள் - தத்தளிக்கும் தமிழ் சினிமா, நோ மாஸ், காதலுக்கு டிமேண்ட்
Tamil Cinema: நிரம்பி வழியும் தாத்தா, அங்கிள்கள் - தத்தளிக்கும் தமிழ் சினிமா, நோ மாஸ், காதலுக்கு டிமேண்ட்
MG ZS EV Offer: நாட்டின் முதல் EV இண்டர்நெட் எஸ்யுவி, ரூ.6 லட்சம் வரை விலை குறைப்பு - 75 அம்சங்கள், பக்கா டிசைன்
MG ZS EV Offer: நாட்டின் முதல் EV இண்டர்நெட் எஸ்யுவி, ரூ.6 லட்சம் வரை விலை குறைப்பு - 75 அம்சங்கள், பக்கா டிசைன்
TNPSC Group-1: 72 பணியிடங்களுக்கு 2.49 லட்சம் பேர் போட்டி - குரூப் 1 தேர்வு, செய்யக்கூடாதவை லிஸ்ட்
TNPSC Group-1: 72 பணியிடங்களுக்கு 2.49 லட்சம் பேர் போட்டி - குரூப் 1 தேர்வு, செய்யக்கூடாதவை லிஸ்ட்
Ahmedabad plane crash: நிம்மதியை பறித்த அகமதாபாத் விபத்து.. 222 உடல்களை அடையாளம் காண்பதில் சவால் - கண்ணீரில் உறவினர்கள்
Ahmedabad plane crash: நிம்மதியை பறித்த அகமதாபாத் விபத்து.. 222 உடல்களை அடையாளம் காண்பதில் சவால் - கண்ணீரில் உறவினர்கள்
வேலைக்காரன் லவ் பண்ணுனா துவைச்சு புடுவேன்.. சிவாஜியா இப்படி சொன்னாரு! உண்மையை உடைத்த ராதாரவி
வேலைக்காரன் லவ் பண்ணுனா துவைச்சு புடுவேன்.. சிவாஜியா இப்படி சொன்னாரு! உண்மையை உடைத்த ராதாரவி
Embed widget