மேலும் அறிய

8 ஆண்டாக தன் மகனை அரசு பள்ளியில் படிக்க வைக்கும் நீதிபதி - குவியும் பாராட்டுகள்

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வடிவேல் தனது மகனை அரசு பள்ளியில் 9-ம் வகுப்பில் சேர்த்துள்ளதற்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருபவர் வடிவேல் (40). இவரது மனைவி புனிதா. இவர்களுக்கு ரீமா சக்தி என்ற மகளும், நிஷாந்த் சக்தி என்ற மகனும் உள்ளனர். தனது மகன் மற்றும் மகளை முதல் வகுப்பில் இருந்து அரசுப் பள்ளியில் சேர்த்து வடிவேல் படிக்க வைத்து வருகிறார்.

ஈரோடு மாவட்டம் குமலன் குட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த ரீமா சக்தி, பொதுத்தேர்வு எழுதி முடிவுகளுக்காக காத்திருக்கிறார். அதேபள்ளியில் படித்த நிஷாந்த் சக்தி எட்டாம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இந்நிலையில் அண்மையில் ஈரோட்டில் இருந்து திருப்பூர் மாவட்டம் அவிநாசிக்கு நீதிபதி வடிவேல் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து நிஷாந்த் சக்தியை அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் நேற்று நீதிபதி வடிவேல் சேர்த்தார்.


8 ஆண்டாக தன் மகனை அரசு பள்ளியில் படிக்க வைக்கும் நீதிபதி - குவியும் பாராட்டுகள்

நிஷாந்த் சக்தி 1 மற்றும் 2ம் வகுப்புகளை கோவை பெட்டதாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியிலும், 3 முதல் 5 -ம் வகுப்பு வரை திருச்சி மதுராபுரி அரசு நடுநிலைப்பள்ளியிலும், 6 முதல் 8 -ம் வகுப்பு வரை ஈரோடு, குமலன்குட்டை அரசு உயர் நிலைப் பள்ளியிலும் படித்துள்ளார். இதையடுத்து அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பிற்கு சேர்ந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக ஒரு நீதிபதி தனது மகனை அரசு பள்ளியிலேயே படிக்க வைத்து வருகிறார்.

இது குறித்து நீதிபதி வடிவேல் கூறுகையில், “ நான் அரசுப் பள்ளியில் படித்து, வழக்கறிஞர் பட்டம் பெற்றேன். பின்னர் அரசு உதவி வழக்கறிஞராக 2014 ம் ஆண்டு மாநிலத்திலேயே முதலாவதாக தேர்ச்சி பெற்றேன். தமிழ்நாடு அரசு தேர்வாணையம் வாயிலாக தேர்வு எழுதி நீதிபதியாக பணிபுரிகிறேன்.


8 ஆண்டாக தன் மகனை அரசு பள்ளியில் படிக்க வைக்கும் நீதிபதி - குவியும் பாராட்டுகள்

அரசுப் பள்ளிகளில் சிறு குறைகள் இருக்கத் தான் செய்யும். அப்படி இருக்கும் போது தான் மாணவர்களிடையே தேடலும், ஆர்வமும் அதிகரிக்கும். நாட்டில் அரசு துறைகளில் பணிபுரியும் 60 சதவீதம் பேர் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் தான். அரசு துறைகளில் பணி புரிபவர்கள், அவர்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க முன்வர வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

மாவட்ட நீதிபதி தனது குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைத்து, மற்ற அரசு ஊழியர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். இவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
America Vs Venezuela: சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
South Africa Gun Shoot: தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
America Vs Venezuela: சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
South Africa Gun Shoot: தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
TN WEATHER ALERT: மீனவர்களே அலர்ட்... 65 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று- வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
மீனவர்களே அலர்ட்... 65 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று- வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
Embed widget