"பைக்கில் ஏறி ‘போஸ்’ கொடுத்த நல்ல பாம்பு" - கோவையில் நடு ரோட்டில் பரபரப்பு...
இருசக்கர வாகனத்தின் மீது ஏறி “படம் எடுத்தாடிய” நல்ல பாம்பின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

கோவை அருகே உள்ள கோவைபுதூர் ரிங் ரோடு பகுதியில் அரிய மற்றும் பரபரப்பான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இருசக்கர வாகனத்தின் மீது ஏறி “படம் எடுத்தாடிய” நல்ல பாம்பின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சம்பவம் குறித்து கூறப்படுவதாவது: கோவைபுதூர் ரிங் சாலையில் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, திடீரென ஒரு பெரிய நல்ல பாம்பு சாலையை குறுக்கே கடந்து சென்றது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டி, உடனடியாக தனது பைக்கை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு, பயத்தில் அங்கிருந்து தூரம் ஓடிச் சென்றார்.
அதன்பின், அந்தப் பாம்பு அங்கு இருந்து நகராமல், நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மெதுவாக ஏறியது. பைக்கின் முன்பகுதிக்குச் சென்ற பாம்பு, தலையை உயர்த்தி “படம் எடுத்தாடும்” போல் நீண்ட நேரம் அங்கே நின்றது. இந்தக் காட்சி அங்கு சென்ற மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை ஆச்சரியத்திலும் அச்சத்திலும் ஆழ்த்தியது.
இதனை கண்டு பலர் தங்களது வாகனங்களை நிறுத்தி, செல்போன்களில் வீடியோ பதிவு செய்தனர். சில நிமிடங்கள் பைக்கின் மீது இருந்த பாம்பு, பின்னர் தானாகவே கீழிறங்கி அருகிலுள்ள புதருக்குள் சென்று மறைந்தது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. “பாம்பு லிப்ட் கேட்க வந்ததா?” என்ற கேலிச் கருத்துகளும் இணையத்தில் பரவுகின்றன.
இதனிடையே, வனப்பகுதிகளை ஒட்டிய சாலைகளில் பயணிக்கும் போது வாகன ஓட்டிகள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Before You Go
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
ட்ரெண்டிங் செய்திகள்






















