மேலும் அறிய

கொரோனா தொற்று; மூத்த செய்தியாளர் எம்ஜிஆர் கண்ணன் காலமானார்!

நமது அம்மா நாளிதழ் செய்தியாளர் எம்.ஜி.ஆர் கண்ணன் (வயது 84) கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று இயற்கை எய்தினார்.

கரூர் மாவட்டத்தில் நமது அம்மா நாளிதழ் செய்தியாளர் எம்.ஜி.ஆர் கண்ணன் (வயது 84) கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று இயற்கை எய்தினார். இவர் கரூர் மாவட்டத்தில் தனது செய்தியாளர் பணியை 15 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி நமது எம்ஜிஆர் நாளிதழ் மூலம் கரூர் மாவட்டத்தில் பல்வேறு அதிமுக நிர்வாகிகள் இடம் புகழ்பெற்ற செய்தியாளராக உருவெடுத்தார். அதன் தொடர்ச்சியாக அதிமுகவில் பொறுப்பு வகித்தார். பல்வேறு மாவட்ட செயலாளர்கள் அதிமுகவில் மாற்றப்பட்ட நிலையிலும், அனைவரையும் அரவணைத்து போகும் செய்தியாளராக இவரது பணி அன்று முதல் தொடர்ந்து வருகிறது.
கொரோனா தொற்று; மூத்த செய்தியாளர் எம்ஜிஆர் கண்ணன் காலமானார்!

கரூர் மாவட்டத்தில் மற்ற செய்தியாளர்களை உறவு முறையை வைத்து அழைத்து தனது புதிய யுத்தியை மேற்கொண்ட செய்தியாளர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இவர் கரூர் மாவட்டத்தில் மூத்த பத்திரிகையாளரும், பல்வேறு தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் செய்தியாளராகவும், இருந்து பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக காய்ச்சலில் அவதிப்பட்டு வந்துள்ளார். அதைத்தொடர்ந்து காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்ட நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொரோனா தொற்று; மூத்த செய்தியாளர் எம்ஜிஆர் கண்ணன் காலமானார்!

கரூரில் உள்ள பல்வேறு கட்சி நிர்வாகிகளும் எம்ஜிஆர் கண்ணன் இழப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இவர் எம்.ஜி.ஆர் தீவிர விசுவாசி என்பதால் தனது பெயருக்கும் முன்னால் எம்ஜிஆர் என்ற புனைப்பெயரில் அதிமுக நிர்வாகிகள் வழங்கியுள்ளனர். அது மட்டும் இல்லாமல் பல்வேறு கட்சி நிர்வாகி இடமும், பாகுபாடு இன்றி பழகக் கூடிய செய்தியாளர் என்ற பெயரும் இவருக்கு உண்டு , அதுபோல் பல்வேறு அரசியல் நிர்வாகிகளுக்கு அரசியல் ஆலோசனை வழங்கும் ஆலோசகராகவும் மாவட்டத்தில் வலம் வந்துள்ளார். என்பது கூடுதல் தகவல் . நமது அம்மா நாளிதழ் கண்ணன் இறப்புக்கு கரூர் மாவட்ட பத்திரிக்கையாளர் நல சங்கத்தின் சார்பாக இரங்கலை தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து பேருந்துநிலையம் ரவுண்டானா அருகே அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.


கொரோனா தொற்று; மூத்த செய்தியாளர் எம்ஜிஆர் கண்ணன் காலமானார்!

இந்த கண்ணீர் அஞ்சலி நிகழ்ச்சியில் கரூர் மாவட்டத்தில் பணியாற்றும் நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் கலந்துகொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு நாள்தோறும் செய்தியாளர்கள் மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்கள் சிகிச்சை பலனின்றி இறந்து வரும் நிலையில் கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்த முதல் செய்தியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்துள்ள தமிழக அரசு, அவர்களின் மறைவிற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump On India: ”மோடி செய்ததை அம்பலப்படுத்தினேன், இந்தியா வழிக்கு வந்துவிட்டது” - அதிபர் ட்ரம்ப் அதிரடி பேச்சு
Trump On India: ”மோடி செய்ததை அம்பலப்படுத்தினேன், இந்தியா வழிக்கு வந்துவிட்டது” - அதிபர் ட்ரம்ப் அதிரடி பேச்சு
12th Public Exam: 12ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி - வினாத்தாள் கசிவு, ஆங்கிலத் தேர்வை ரத்து செய்து அரசு உத்தரவு
12th Public Exam: 12ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி - வினாத்தாள் கசிவு, ஆங்கிலத் தேர்வை ரத்து செய்து அரசு உத்தரவு
CRIME: மகளிர் தினம் எதுக்கோ? முடியாத சோகம்..! தலித் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம், சாதியின் கோர தாண்டவம்
CRIME: மகளிர் தினம் எதுக்கோ? முடியாத சோகம்..! தலித் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம், சாதியின் கோர தாண்டவம்
FasTag: ஃபாஷ்டேக் விதிகள்..! தவறுதலாக பணம் எடுக்கப்பட்டதா? திரும்பப் பெற வாய்ப்பு இருக்கா?  எளிய வழிமுறை இதோ..!
FasTag: ஃபாஷ்டேக் விதிகள்..! தவறுதலாக பணம் எடுக்கப்பட்டதா? திரும்பப் பெற வாய்ப்பு இருக்கா? எளிய வழிமுறை இதோ..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISESarathkumar BJP : அண்ணாமலைக்கு ஆப்பு! பாஜக தலைவர் சரத்குமார்? கடுப்பில் சீனியர்ஸ்Chandrababu Naidu Praises Tamilnadu : ’’தமிழர்கள் TOP-ல இருக்காங்கதமிழ்நாடு தான் BEST’’புகழ்ந்து தள்ளிய சந்திரபாபுPolice vs Drunken lady : தலைக்கேறிய போதை !நடுரோட்டில் இளம்பெண் அலப்பறை திணறிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump On India: ”மோடி செய்ததை அம்பலப்படுத்தினேன், இந்தியா வழிக்கு வந்துவிட்டது” - அதிபர் ட்ரம்ப் அதிரடி பேச்சு
Trump On India: ”மோடி செய்ததை அம்பலப்படுத்தினேன், இந்தியா வழிக்கு வந்துவிட்டது” - அதிபர் ட்ரம்ப் அதிரடி பேச்சு
12th Public Exam: 12ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி - வினாத்தாள் கசிவு, ஆங்கிலத் தேர்வை ரத்து செய்து அரசு உத்தரவு
12th Public Exam: 12ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி - வினாத்தாள் கசிவு, ஆங்கிலத் தேர்வை ரத்து செய்து அரசு உத்தரவு
CRIME: மகளிர் தினம் எதுக்கோ? முடியாத சோகம்..! தலித் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம், சாதியின் கோர தாண்டவம்
CRIME: மகளிர் தினம் எதுக்கோ? முடியாத சோகம்..! தலித் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம், சாதியின் கோர தாண்டவம்
FasTag: ஃபாஷ்டேக் விதிகள்..! தவறுதலாக பணம் எடுக்கப்பட்டதா? திரும்பப் பெற வாய்ப்பு இருக்கா?  எளிய வழிமுறை இதோ..!
FasTag: ஃபாஷ்டேக் விதிகள்..! தவறுதலாக பணம் எடுக்கப்பட்டதா? திரும்பப் பெற வாய்ப்பு இருக்கா? எளிய வழிமுறை இதோ..!
IND Vs NZ Final: இந்தியா Vs நியூசிலாந்து - ஃபைனலுக்கான துபாய் மைதானம் எப்படி? மழைக்கு வாய்ப்பு? ரிசர்வ் டே இருக்கா?
IND Vs NZ Final: இந்தியா Vs நியூசிலாந்து - ஃபைனலுக்கான துபாய் மைதானம் எப்படி? மழைக்கு வாய்ப்பு? ரிசர்வ் டே இருக்கா?
"நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள்" விஜய் சொன்னவுடன் அதிர்ந்த ஒய்எம்சிஏ மைதானம்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் இப்தார் நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்!
பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள், ஆனால் இப்போ பாருங்க.!...இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!
Embed widget