மேலும் அறிய

கோவை : காட்டு யானை தாக்கி சந்தன மரம் கடத்தியவர் உயிரிழப்பு.. காவல்துறை விசாரணை தீவிரம்..

தனியார் எஸ்டேட்டில் சந்தன மரங்களை வெட்டி 4 கிலோ சந்தனக் கட்டையை எடுத்துக் கொண்டு தும்புபள்ளம் பகுதி வழியாக வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக காட்டு யானை தாக்கியதில் ராமர் (60) உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே வனப் பகுதியில் சந்தன மரம் கடத்திய நபர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகம் அமைந்துள்ளது. சிறுமுகை வனச்சரக எல்லைக்கு உட்பட்ட NES RF காப்புக் காட்டில் ராமர் (60) என்பவர் கடந்த 23ம் தேதியன்று காலை சுமார் 9 மணி அளவில் காட்டு யானை தாக்கி உயிரிழந்து விட்டார் என ஸ்ரீரங்கன் ஓடை பகுதியை சேர்ந்த கருப்புசாமி என்பவர் சிறுமுகை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இந்த தகவலின் அடிப்படையில் சிறுமுகை காவல் துறையினர் சிறுமுகை வனச்சரக அலுவலருக்கு தகவல் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து பெத்திகுட்டை பிரிவு வனவர், வனப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் மேற்கண்ட கருப்பசாமியை அழைத்துக் கொண்டு சம்பவ இடமான கூத்தாமுண்டி தெற்கு சுற்றுக்கு உட்பட்ட தும்புபள்ளம் என்ற இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அப்பகுதியில் அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் உயிரிழந்த நபர் ராமர் என்பதும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரிழந்ததும் உறுதி செய்யப்பட்டது.

மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

இதையடுத்து கருப்பசாமியிடம் வனத் துறையினர் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் கருப்பசாமி, ராஜ்குமார், ராமர் ஆகியோருடன் கடந்த 21 ம் தேதியன்று கோத்தகிரிக்கு உட்பட்ட பங்களா குழி எனும் இடத்தில் தனியார் எஸ்டேட்டில் திருட்டுத் தனமாக சந்தன மரங்களை வெட்டியுள்ளனர்.. பின்னர் சுமார் 4 கிலோ சந்தனக் கட்டையை எடுத்துக் கொண்டு கடந்த 23ம் தேதியன்று காலை சுமார் 9 மணியளவில் தும்புபள்ளம் பகுதி வழியாக வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக காட்டு யானை தாக்கியதில் ராமர் (60) உயிரிழந்ததாகவும், மற்றவர்கள் தப்பிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சந்தன மரம் கடத்தலின் போது உயிரிழப்பு நேர்ந்ததால் வெளியே கூறினால் காவல் துறை மற்றும் வனத்துறையினரிடம் சிக்கிக் கொள்வோம் என்பதால், கடந்த இரண்டு நாட்களாக இது குறித்த தகவலை வெளியே கூறாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் சிறுமுகை காவல் நிலையத்திற்கு வந்து தகவல் கூறியதை அடுத்து, ராமர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து ராமரின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
646
Active
28426
Recovered
157
Deaths
Last Updated: Sat 12 July, 2025 at 10:55 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை -  மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை - மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
Embed widget