மேலும் அறிய

கோவை : காட்டு யானை தாக்கி சந்தன மரம் கடத்தியவர் உயிரிழப்பு.. காவல்துறை விசாரணை தீவிரம்..

தனியார் எஸ்டேட்டில் சந்தன மரங்களை வெட்டி 4 கிலோ சந்தனக் கட்டையை எடுத்துக் கொண்டு தும்புபள்ளம் பகுதி வழியாக வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக காட்டு யானை தாக்கியதில் ராமர் (60) உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே வனப் பகுதியில் சந்தன மரம் கடத்திய நபர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகம் அமைந்துள்ளது. சிறுமுகை வனச்சரக எல்லைக்கு உட்பட்ட NES RF காப்புக் காட்டில் ராமர் (60) என்பவர் கடந்த 23ம் தேதியன்று காலை சுமார் 9 மணி அளவில் காட்டு யானை தாக்கி உயிரிழந்து விட்டார் என ஸ்ரீரங்கன் ஓடை பகுதியை சேர்ந்த கருப்புசாமி என்பவர் சிறுமுகை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இந்த தகவலின் அடிப்படையில் சிறுமுகை காவல் துறையினர் சிறுமுகை வனச்சரக அலுவலருக்கு தகவல் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து பெத்திகுட்டை பிரிவு வனவர், வனப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் மேற்கண்ட கருப்பசாமியை அழைத்துக் கொண்டு சம்பவ இடமான கூத்தாமுண்டி தெற்கு சுற்றுக்கு உட்பட்ட தும்புபள்ளம் என்ற இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அப்பகுதியில் அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் உயிரிழந்த நபர் ராமர் என்பதும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரிழந்ததும் உறுதி செய்யப்பட்டது.

மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

இதையடுத்து கருப்பசாமியிடம் வனத் துறையினர் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் கருப்பசாமி, ராஜ்குமார், ராமர் ஆகியோருடன் கடந்த 21 ம் தேதியன்று கோத்தகிரிக்கு உட்பட்ட பங்களா குழி எனும் இடத்தில் தனியார் எஸ்டேட்டில் திருட்டுத் தனமாக சந்தன மரங்களை வெட்டியுள்ளனர்.. பின்னர் சுமார் 4 கிலோ சந்தனக் கட்டையை எடுத்துக் கொண்டு கடந்த 23ம் தேதியன்று காலை சுமார் 9 மணியளவில் தும்புபள்ளம் பகுதி வழியாக வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக காட்டு யானை தாக்கியதில் ராமர் (60) உயிரிழந்ததாகவும், மற்றவர்கள் தப்பிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சந்தன மரம் கடத்தலின் போது உயிரிழப்பு நேர்ந்ததால் வெளியே கூறினால் காவல் துறை மற்றும் வனத்துறையினரிடம் சிக்கிக் கொள்வோம் என்பதால், கடந்த இரண்டு நாட்களாக இது குறித்த தகவலை வெளியே கூறாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் சிறுமுகை காவல் நிலையத்திற்கு வந்து தகவல் கூறியதை அடுத்து, ராமர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து ராமரின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
coimbatore power cut: கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Embed widget