மேலும் அறிய

கோவை : காட்டு யானை தாக்கி சந்தன மரம் கடத்தியவர் உயிரிழப்பு.. காவல்துறை விசாரணை தீவிரம்..

தனியார் எஸ்டேட்டில் சந்தன மரங்களை வெட்டி 4 கிலோ சந்தனக் கட்டையை எடுத்துக் கொண்டு தும்புபள்ளம் பகுதி வழியாக வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக காட்டு யானை தாக்கியதில் ராமர் (60) உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே வனப் பகுதியில் சந்தன மரம் கடத்திய நபர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகம் அமைந்துள்ளது. சிறுமுகை வனச்சரக எல்லைக்கு உட்பட்ட NES RF காப்புக் காட்டில் ராமர் (60) என்பவர் கடந்த 23ம் தேதியன்று காலை சுமார் 9 மணி அளவில் காட்டு யானை தாக்கி உயிரிழந்து விட்டார் என ஸ்ரீரங்கன் ஓடை பகுதியை சேர்ந்த கருப்புசாமி என்பவர் சிறுமுகை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இந்த தகவலின் அடிப்படையில் சிறுமுகை காவல் துறையினர் சிறுமுகை வனச்சரக அலுவலருக்கு தகவல் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து பெத்திகுட்டை பிரிவு வனவர், வனப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் மேற்கண்ட கருப்பசாமியை அழைத்துக் கொண்டு சம்பவ இடமான கூத்தாமுண்டி தெற்கு சுற்றுக்கு உட்பட்ட தும்புபள்ளம் என்ற இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அப்பகுதியில் அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் உயிரிழந்த நபர் ராமர் என்பதும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரிழந்ததும் உறுதி செய்யப்பட்டது.

மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

இதையடுத்து கருப்பசாமியிடம் வனத் துறையினர் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் கருப்பசாமி, ராஜ்குமார், ராமர் ஆகியோருடன் கடந்த 21 ம் தேதியன்று கோத்தகிரிக்கு உட்பட்ட பங்களா குழி எனும் இடத்தில் தனியார் எஸ்டேட்டில் திருட்டுத் தனமாக சந்தன மரங்களை வெட்டியுள்ளனர்.. பின்னர் சுமார் 4 கிலோ சந்தனக் கட்டையை எடுத்துக் கொண்டு கடந்த 23ம் தேதியன்று காலை சுமார் 9 மணியளவில் தும்புபள்ளம் பகுதி வழியாக வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக காட்டு யானை தாக்கியதில் ராமர் (60) உயிரிழந்ததாகவும், மற்றவர்கள் தப்பிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சந்தன மரம் கடத்தலின் போது உயிரிழப்பு நேர்ந்ததால் வெளியே கூறினால் காவல் துறை மற்றும் வனத்துறையினரிடம் சிக்கிக் கொள்வோம் என்பதால், கடந்த இரண்டு நாட்களாக இது குறித்த தகவலை வெளியே கூறாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் சிறுமுகை காவல் நிலையத்திற்கு வந்து தகவல் கூறியதை அடுத்து, ராமர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து ராமரின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

Coimbatore power cut: கோவையில் நாளை (09-06-2026) எந்தெந்த பகுதிகளில் மின் தடை? - லிஸ்டை வெளியிட்ட மின்வாரியம்
கோவையில் நாளை (09-06-2026) எந்தெந்த பகுதிகளில் மின் தடை? - லிஸ்டை வெளியிட்ட மின்வாரியம்
கோவை நீதிமன்ற வளாகத்தில் பிணமாக கிடந்த வட மாநில வாலிபர்!.. கொலை செய்யப்பட்டது அம்பலம்.
கோவை நீதிமன்ற வளாகத்தில் பிணமாக கிடந்த வட மாநில வாலிபர்!.. கொலை செய்யப்பட்டது அம்பலம்.
கோவையில் போலீசார் அதிரடி நடவடிக்கை ; பீகாரில் இருந்து கடத்திய 45 கிலோ கஞ்சா பறிமுதல் . மூன்று பேர் கைது!
கோவையில் போலீசார் அதிரடி நடவடிக்கை ; பீகாரில் இருந்து கடத்திய 45 கிலோ கஞ்சா பறிமுதல் . மூன்று பேர் கைது!
வயநாடு பேரிடர் பாடம்: தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன- செங்கோட்டையன்.
வயநாடு பேரிடர் பாடம்: தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன- செங்கோட்டையன்.

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai : ’அண்ணாமலையுடன் இணையப்போகும் முக்கிய அரசியல் புள்ளி’ இவர்தான் அவர்..!
’அண்ணாமலையுடன் இணையப்போகும் முக்கிய அரசியல் புள்ளி’ இவர்தான் அவர்..!
DMK: கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டங்க..! பொறாமையில் பொங்கும் திமுகவினர், சாபம் விடும் உபிக்கள்
DMK: கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டங்க..! பொறாமையில் பொங்கும் திமுகவினர், சாபம் விடும் உபிக்கள்
INDIA Alliance Meeting : ’திமுக இல்லாத இண்டியா கூட்டம்’ கேள்வி எழுப்ப கட்சிகள் திட்டம் – கலக்கத்தில் காங்கிரஸ்..?
'இண்டியா கூட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ்’ நடக்கப்போவது என்ன?
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
Bose Venkat: விஜய் ஜெயிச்சாரு.. மொத்த மானத்தையும் வாங்கிய குடும்பம்.. போஸ் வெங்கட் வேதனை!
Bose Venkat: விஜய் ஜெயிச்சாரு.. மொத்த மானத்தையும் வாங்கிய குடும்பம்.. போஸ் வெங்கட் வேதனை!
Tamilnadu Round Up: மீண்டும் குறைந்த தங்கம் விலை, பதவிக்காக ஓடும் அதிமுகவினர்? திமுக சாடல் - தமிழ்நாட்டில் இதுவரை
மீண்டும் குறைந்த தங்கம் விலை, பதவிக்காக ஓடும் அதிமுகவினர்? திமுக சாடல் - தமிழ்நாட்டில் இதுவரை
Hyundai Creta: SUV-க்களின் கிங்கிற்கு சலுகைகளை வாரி வழங்கிய ஹுண்டாய் - இன்ஜின் & EV ரெண்டிற்கும் ஆஃபர்
SUV-க்களின் கிங்கிற்கு சலுகைகளை வாரி வழங்கிய ஹுண்டாய் - இன்ஜின் & EV ரெண்டிற்கும் ஆஃபர்
DMK Alliance plan : இனி கூட்டணியே வேண்டாம்.. தனித்தே போட்டியிடலாம் திமுக நிர்வாகிகள் எடுத்த முடிவு.! காரணம் என்ன.?
இனி கூட்டணியே வேண்டாம்.. தனித்தே போட்டியிடலாம் திமுக நிர்வாகிகள் எடுத்த முடிவு.! காரணம் என்ன.?
Embed widget