மேலும் அறிய

கோவை : காட்டு யானை தாக்கி சந்தன மரம் கடத்தியவர் உயிரிழப்பு.. காவல்துறை விசாரணை தீவிரம்..

தனியார் எஸ்டேட்டில் சந்தன மரங்களை வெட்டி 4 கிலோ சந்தனக் கட்டையை எடுத்துக் கொண்டு தும்புபள்ளம் பகுதி வழியாக வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக காட்டு யானை தாக்கியதில் ராமர் (60) உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே வனப் பகுதியில் சந்தன மரம் கடத்திய நபர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகம் அமைந்துள்ளது. சிறுமுகை வனச்சரக எல்லைக்கு உட்பட்ட NES RF காப்புக் காட்டில் ராமர் (60) என்பவர் கடந்த 23ம் தேதியன்று காலை சுமார் 9 மணி அளவில் காட்டு யானை தாக்கி உயிரிழந்து விட்டார் என ஸ்ரீரங்கன் ஓடை பகுதியை சேர்ந்த கருப்புசாமி என்பவர் சிறுமுகை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இந்த தகவலின் அடிப்படையில் சிறுமுகை காவல் துறையினர் சிறுமுகை வனச்சரக அலுவலருக்கு தகவல் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து பெத்திகுட்டை பிரிவு வனவர், வனப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் மேற்கண்ட கருப்பசாமியை அழைத்துக் கொண்டு சம்பவ இடமான கூத்தாமுண்டி தெற்கு சுற்றுக்கு உட்பட்ட தும்புபள்ளம் என்ற இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அப்பகுதியில் அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் உயிரிழந்த நபர் ராமர் என்பதும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரிழந்ததும் உறுதி செய்யப்பட்டது.

மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

இதையடுத்து கருப்பசாமியிடம் வனத் துறையினர் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் கருப்பசாமி, ராஜ்குமார், ராமர் ஆகியோருடன் கடந்த 21 ம் தேதியன்று கோத்தகிரிக்கு உட்பட்ட பங்களா குழி எனும் இடத்தில் தனியார் எஸ்டேட்டில் திருட்டுத் தனமாக சந்தன மரங்களை வெட்டியுள்ளனர்.. பின்னர் சுமார் 4 கிலோ சந்தனக் கட்டையை எடுத்துக் கொண்டு கடந்த 23ம் தேதியன்று காலை சுமார் 9 மணியளவில் தும்புபள்ளம் பகுதி வழியாக வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக காட்டு யானை தாக்கியதில் ராமர் (60) உயிரிழந்ததாகவும், மற்றவர்கள் தப்பிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சந்தன மரம் கடத்தலின் போது உயிரிழப்பு நேர்ந்ததால் வெளியே கூறினால் காவல் துறை மற்றும் வனத்துறையினரிடம் சிக்கிக் கொள்வோம் என்பதால், கடந்த இரண்டு நாட்களாக இது குறித்த தகவலை வெளியே கூறாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் சிறுமுகை காவல் நிலையத்திற்கு வந்து தகவல் கூறியதை அடுத்து, ராமர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து ராமரின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget