மேலும் அறிய

‘இபிஎஸ் முதல்வராக இருந்திருந்தால் மின்கட்டணம் உயர்ந்திருக்காது’ - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

"எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்திருந்தால், இந்த விலை உயர்வு வந்திருக்காது என மக்கள் பேசுகிறார்கள். திமுக அரசு மக்கள் விரோத போக்கை கைவிட்டு, விலை உயர்வை நிறுத்த வேண்டும்”

மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து, அதிமுக சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவையிலும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு மாநகர மாவட்ட அதிமுக சார்பில், கோவை வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல அதிமுக புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


‘இபிஎஸ் முதல்வராக இருந்திருந்தால் மின்கட்டணம் உயர்ந்திருக்காது’ - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் 4 ஆண்டு காலம் எடப்பாடி பழனிசாமி அற்புதமான ஆட்சியை தந்தார். 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் கோவை மாவட்டத்திற்கு அவர் தந்தார். மக்கள் விரும்பும் ஆட்சியை தந்தவர். தொண்டர்கள் விருப்பப்படியும், எதிர்பார்த்தபடியும் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி வந்து விட்டார். எடப்பாடி பழனிசாமி அதிமுகவிற்கு இடைக்கால பொதுச்செயலாளராக வந்தது யாருக்கு பயம்? ஸ்டாலினுக்கும், திமுகவிற்கும் பயம். எடப்பாடி பழனிசாமி உங்களில் ஒருவர். திமுகவை வீழ்த்தி, அம்மா ஆட்சியை கொண்டு வர எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையாக வேண்டும் என தொண்டர்கள் நினைத்தார்கள்.

திமுக ஆட்சியில் மக்களுக்கு எதாவது செய்திருக்கிறார்களா?. மக்களுக்கு எதுவும் செய்யாத ஆட்சியாக உள்ளது. காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என நீதிமன்றமே கேள்வி எழுப்பியுள்ளது. சட்டம், ஒழுங்கு மோசமாக உள்ளது. இதை எல்லாம் கவனிக்காமல் ஓபிஎஸ் உடன் சேர்ந்து, அதிமுக தொண்டர்களின் கோவிலான அதிமுக தலைமை அலுவலகத்தை உடைத்துள்ளனர். இதற்கு காரணம் ஸ்டாலின். அதிமுக அலுவலகத்தை சீல் வைத்ததை டிவியில் பார்த்த போது, அவ்வளவு கஷ்டமாக இருந்தது. அதிமுக அலுவல கதவை செருப்புக் காலால் உதைத்தவர் விபத்தில் உயிரிழந்தார். திமுக அராஜகம் செய்து கொண்டிருக்கிறதுஎன அவர் பேசினார்.


‘இபிஎஸ் முதல்வராக இருந்திருந்தால் மின்கட்டணம் உயர்ந்திருக்காது’ - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி, “திமுக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சொத்துவரி, மின்கட்டணம், கட்டுமான பொருட்கள் விலைகளை உயர்த்தியுள்ளது. அதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்திருந்தால், இந்த விலை உயர்வு வந்திருக்காது என மக்கள் பேசுகிறார்கள். திமுக அரசு மக்கள் விரோத போக்கை கைவிட்டு, விலை உயர்வை நிறுத்த வேண்டும்எனத் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது கோவை மாவட்ட அவைத் தலைவர் ஏ.வி. வெங்கடாசலம் திடீரென மயங்கி விழுந்தார். அப்போது பேசிக் கொண்டிருந்த எஸ்.பி. வேலுமணி சிறிது நேரம் பேச்சை நிறுத்தினார். உடனடியாக கட்சி நிர்வாகிகள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் ஆர்ப்பாட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Embed widget