மேலும் அறிய

இனி இஷ்டம் போல சுற்றித்திரியலாம்.. காட்டுக்குள் விடப்பட்ட 'ரிவால்டோ' யானை - மக்கள் மகிழ்ச்சி

கரோலில் அடைக்கப்பட்ட அந்த யானைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கபட்டு வந்தது. இந்நிலையில் ரிவால்டோ யானையை கரோலில் இருந்து விடுவிக்க வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள வாழைத்தோட்டம் மற்றும் மாவனல்லா பகுதியில் 45 வயது மதிக்கதக்க காட்டு யானை சுற்றி திரிந்து வந்தது. இந்த யானை அப்பகுதி மக்களால் 'ரிவால்டோ' என அழைக்கப்பட்டது. யானைகள் ஒரிடத்தில் இல்லாமல் வேறு இடங்களுக்கு செல்வது வழக்கம். ஆனால் இந்த யானை வாழைத்தோட்டம் முதல் மசினகுடி வரையிலான பகுதியில் சுற்றி வந்தது.  இந்த யானைக்கு தும்பிக்கையில் காயம் ஏற்பட்டு இருப்பதால், உணவு எடுத்து செல்வதில் சிரமம் இருந்து வந்தது. மேலும் வலது கண் பார்வை குறைவும் உள்ளது. பெரும்பாலும் அந்த யானை அதிக நேரம் குடியிருப்பு பகுதிக்களுக்குள் நடமாடியதுடன், விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியும் வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த யானையை பிடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் முதுமலை புலிகள் காப்பக நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

இனி இஷ்டம் போல சுற்றித்திரியலாம்.. காட்டுக்குள் விடப்பட்ட 'ரிவால்டோ' யானை - மக்கள் மகிழ்ச்சி

இதனையடுத்து ரிவால்டோ யானையை கரோலில் அடைக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். வழக்கமாக காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி, கும்கி யானைகள் உதவியுடன் பிடிப்பது வழக்கம். ஆனால் இந்த யானை மனிதர்களுடன் பழக்கப்பட்ட யானை என்பதால், வாழைத்தோட்டம் பகுதியில் அமைக்கப்பட்ட கரோலில் பழங்களை வைத்து வரவழைத்து அதற்குள் அடைத்தனர். கரோலில் அடைக்கப்பட்ட அந்த யானைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கபட்டு வந்தது. இந்நிலையில் ரிவால்டோ யானையை கரோலில் இருந்து விடுவிக்க வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். 


இனி இஷ்டம் போல சுற்றித்திரியலாம்.. காட்டுக்குள் விடப்பட்ட 'ரிவால்டோ' யானை - மக்கள் மகிழ்ச்சி

இதையடுத்து ரிவால்டோ யானையின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்யவும் வன பகுதியில் விடுவதா? அல்லது முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு அழைத்து சென்று பராமரிப்பதா? என்பது குறித்து முடிவு செய்ய 8 பேர் கொண்ட வல்லுனர் குழு ஒன்று மாவட்ட நிர்வாகம் சார்பாக அமைக்கபட்டது. அதில் முன்னாள் வன கால்நடை உதவி இயக்குனர் மனோகரன் தலைமையில் அமைக்கபட்டுள்ள இந்த  குழுவில் நீலகிரி மாவட்ட கால்நடைபராமரிப்பு துறை துணை இயக்குனர், சுற்றுசூழல் ஆர்வலர்கள், யானை நிபுணர்கள், வன உயிரியல் துறை பேராசிரியர் உள்ளிட்ட 8 பேர் இடம் பெற்றனர். அக்குழுவினர் ரிவால்டோ யானையை நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் ரிவால்டோ யானையை வனப் பகுதிக்குள் விடுவிக்க நீலகிரி மாவட்டம் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட குழுவினர் அறிக்கை தந்தனர்.


இனி இஷ்டம் போல சுற்றித்திரியலாம்.. காட்டுக்குள் விடப்பட்ட 'ரிவால்டோ' யானை - மக்கள் மகிழ்ச்சி

இதனைத் தொடர்ந்து அந்த யானையை வனப்பகுதிக்குள் விடுவிக்க முடிவு செய்தனர். யானையின் உடல் நிலை தேறியதை அடுத்து, யானையின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் வனத்துறையினர் யானையின் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தினர். இதையடுத்து இன்று கரோலில் இருந்து ரிவால்டோ யானையை வெளியே அழைத்து வந்த வனத் துறையினர், லாரி மூலம் கர்நாடகா எல்லையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சிக்ஹல்லா வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. ரேடியோ காலர் மூலம் யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Honda Car: பொறுத்தது போதும்.. சர்வதேச மாடலை இறக்கிட வேண்டியது தான் - ஹோண்டாவின் 4 புதிய கார்கள்
Honda Car: பொறுத்தது போதும்.. சர்வதேச மாடலை இறக்கிட வேண்டியது தான் - ஹோண்டாவின் 4 புதிய கார்கள்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Embed widget