மேலும் அறிய

பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த கோரி ரயில்வே ஊழியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்

புதிய பென்ஷன் திட்டத்தை கைவிடுதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெறுகிறது.

மத்திய அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு பல்வேறு மத்திய அரசு துறையை சேர்ந்த ஊழியர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டியும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டியும் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பல கட்ட போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையம் முன்பு எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தை சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிடுதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 300 க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 8ம் தேதியிலிருந்து காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரைக்கும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று மூன்றாவது நாளாக ரயில்வே ஊழியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று நடைபெற்ற போராட்டத்தில் அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கண்ணையா கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஆர்.எம்.யூ பொதுச்செயலாளர் கண்ணையா, “பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தகோரி வலியுறுத்தி வந்த நிலையில், மத்திய அரசு பதில் அளிக்கவில்லை. முதல்கட்டமாக நான்கு நாட்களாக உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வருகிறோம். காலை 9 முதல் மாலை 5 மணி வரைக்கும் போராட்டம் நடத்தி வருகிறோம். இரயில்வே துறை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அதை சார்ந்த மக்களும் பாதிப்பு அடைந்துள்ளனர். மக்களுடன் பிரச்சினைக்கு சேர்த்து போராட்டம் நடத்தி வருகின்றோம். அடித்தட்டு, நடுத்தர மக்கள் பாதிப்படையமால் இருக்கும் வண்ணம் கோரிக்கை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறோம்.

வந்தே பாரத் திட்டம் போன்றவையால் எளிய மக்கள் பதிப்படைய வாய்ப்புள்ளது. எல்லா பெட்டிகளும் ரயில்களை ஏ.சி.களாக மாற்றும் போது கட்டணம் உயர்வால் மக்கள் பாதிப்படைவார்கள் என்றார்.  மத்திய அரசு ஒவ்வொரு துறையாக தனியாருக்கு கொடுத்து வருகையில் இப்போது இரயில்வே துறைக்கு வந்துவிட்டார்கள் என்றார். தனியாரிடம் இரயில்வே சென்றால் ஆம்னி பஸ் போன்று இரயில்வேயில் பயணம் கட்டணம் ஏறும் என்றார். மேலும்  100 இரயில்கள் தனியாருக்கு கொடுத்துள்ளார்கள். போராட்டம் 3 வது நாளக  தொடரும் நிலையில் அரசு சார்பாக எந்தவிதமான பேச்சுவார்த்தைக்கும் வரவில்லை" என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
ABP Premium

வீடியோ

Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget