மேலும் அறிய

கொரோனா தொற்றால் ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்; 30 கிராம மக்கள் பரிதவிப்பு

கொரோனா தொற்றை சாமாளிக்க முடியாமல் நகரவாசிகளே திணறும் நிலையில், கிராம மக்கள் சிகிச்சைக்காக எங்கு செல்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர். ஆரம்ப கட்ட சிகிச்சை பெற முடியாத நிலை; நகரங்களுக்கு சிகிச்சைக்காக செல்ல பொருளாதார வசதி மற்றும் வாகன வசதிகள் பலரிடம் இல்லை.

கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நாள் ஒன்றுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்புகள் உறுதிச் செய்யப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 3944 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரு நாள் பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், இதுவரை ஒரு இலட்சத்து 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா இரண்டாவது அலையின் வீரியம் காரணமாக மூச்சுத் திணறலோடு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

கொரோனா தொற்றால் ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்; 30 கிராம மக்கள் பரிதவிப்பு

கோவை மாநகரப் பகுதிகளில் அதிகளவில் இருந்த கொரோனா தொற்று பாதிப்புகள் கிராமப்புறங்களிலும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் கிராமப்புறங்களிலும் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகேயுள்ள வாகராயம்பாளையம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அந்த சுகாதார நிலையத்தில் பணியாற்றிய மருத்துவர் உள்ளிட்ட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் அந்த சுகாதார நிலையத்திற்கு மருத்துவ சிகிச்சைக்காக வரும் சுற்று வட்டார கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமங்களில் இருந்து கொரோனா தொற்று காரணமாக சிகிச்சைக்காக நகரங்களை நோக்கி மக்கள் செல்வதை தவிர்க்க, ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய வசதிகளுடன் மேம்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கெளசிகா செல்வராஜ்
Caption

 

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த அத்திக்கடவு கெளசிகா நதி மேம்பாட்டு சங்கத்தின் தலைவர் செல்வராஜ் கூறுகையில், ”கோவை நகரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாகாரயம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினால் பதுவம்பள்ளி, காடுவெட்டிபாளையம், கிட்டாம்பாளையம், கணியூர் உள்ளிட்ட 30 கிராம மக்கள் பயனடைந்து வந்தனர். கொரோனா தொற்று கிராம அளவில் தீவிரமடைந்து வரும் நிலையில் அத்தொற்றை கட்டுப்படுத்தவும், கிராம நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கவும், கிராம நோயாளிகளுக்கு அடுத்த கட்டமாக எங்கு செல்ல வேண்டும் என வழிகாட்டவும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமே உயிர் ஆதாரமாக உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டுள்ளது. ஆனால் மற்ற மருத்துவமனைகள் எதுவும் மூடப்படவில்லை. கொரோனா தொற்றை சாமாளிக்க முடியாமல் நகரவாசிகளே திணறும் நிலையில், கிராம மக்கள் சிகிச்சைக்காக எங்கு செல்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர். ஆரம்ப கட்ட சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. நகரங்களுக்கு சிகிச்சைக்காக செல்ல பொருளாதார வசதி மற்றும் வாகன வசதிகள் பலரிடம் இல்லை.

கொரோனா தொற்றில் இருந்து கிராம மக்களை காப்பாற்ற ஆரம்ப சுகாதார நிலையங்களை அரசு மருத்துவமனையாக மாற்ற வேண்டும். கூடுதல் மருத்துவர்கள், ஊழியர்கள், உபகரணங்கள் வசதிகளை செய்து தர வேண்டும். முதற்கட்டமாக நோயாளிகளை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு வழிகாட்ட கிராமங்களில் கொரோனா சோதனை மையங்களை அமைக்க வேண்டும். கிராமப்புறங்களில் மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்தினால் தான், மூன்றாவது அலையை சமாளிக்க முடியும். இல்லையெனில் வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும்” என அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ
கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget