மேலும் அறிய

கொரோனா தொற்றால் ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்; 30 கிராம மக்கள் பரிதவிப்பு

கொரோனா தொற்றை சாமாளிக்க முடியாமல் நகரவாசிகளே திணறும் நிலையில், கிராம மக்கள் சிகிச்சைக்காக எங்கு செல்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர். ஆரம்ப கட்ட சிகிச்சை பெற முடியாத நிலை; நகரங்களுக்கு சிகிச்சைக்காக செல்ல பொருளாதார வசதி மற்றும் வாகன வசதிகள் பலரிடம் இல்லை.

கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நாள் ஒன்றுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்புகள் உறுதிச் செய்யப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 3944 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரு நாள் பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், இதுவரை ஒரு இலட்சத்து 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா இரண்டாவது அலையின் வீரியம் காரணமாக மூச்சுத் திணறலோடு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

கொரோனா தொற்றால் ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்; 30 கிராம மக்கள் பரிதவிப்பு

கோவை மாநகரப் பகுதிகளில் அதிகளவில் இருந்த கொரோனா தொற்று பாதிப்புகள் கிராமப்புறங்களிலும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் கிராமப்புறங்களிலும் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகேயுள்ள வாகராயம்பாளையம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அந்த சுகாதார நிலையத்தில் பணியாற்றிய மருத்துவர் உள்ளிட்ட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் அந்த சுகாதார நிலையத்திற்கு மருத்துவ சிகிச்சைக்காக வரும் சுற்று வட்டார கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமங்களில் இருந்து கொரோனா தொற்று காரணமாக சிகிச்சைக்காக நகரங்களை நோக்கி மக்கள் செல்வதை தவிர்க்க, ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய வசதிகளுடன் மேம்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கெளசிகா செல்வராஜ்
Caption

 

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த அத்திக்கடவு கெளசிகா நதி மேம்பாட்டு சங்கத்தின் தலைவர் செல்வராஜ் கூறுகையில், ”கோவை நகரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாகாரயம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினால் பதுவம்பள்ளி, காடுவெட்டிபாளையம், கிட்டாம்பாளையம், கணியூர் உள்ளிட்ட 30 கிராம மக்கள் பயனடைந்து வந்தனர். கொரோனா தொற்று கிராம அளவில் தீவிரமடைந்து வரும் நிலையில் அத்தொற்றை கட்டுப்படுத்தவும், கிராம நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கவும், கிராம நோயாளிகளுக்கு அடுத்த கட்டமாக எங்கு செல்ல வேண்டும் என வழிகாட்டவும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமே உயிர் ஆதாரமாக உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டுள்ளது. ஆனால் மற்ற மருத்துவமனைகள் எதுவும் மூடப்படவில்லை. கொரோனா தொற்றை சாமாளிக்க முடியாமல் நகரவாசிகளே திணறும் நிலையில், கிராம மக்கள் சிகிச்சைக்காக எங்கு செல்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர். ஆரம்ப கட்ட சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. நகரங்களுக்கு சிகிச்சைக்காக செல்ல பொருளாதார வசதி மற்றும் வாகன வசதிகள் பலரிடம் இல்லை.

கொரோனா தொற்றில் இருந்து கிராம மக்களை காப்பாற்ற ஆரம்ப சுகாதார நிலையங்களை அரசு மருத்துவமனையாக மாற்ற வேண்டும். கூடுதல் மருத்துவர்கள், ஊழியர்கள், உபகரணங்கள் வசதிகளை செய்து தர வேண்டும். முதற்கட்டமாக நோயாளிகளை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு வழிகாட்ட கிராமங்களில் கொரோனா சோதனை மையங்களை அமைக்க வேண்டும். கிராமப்புறங்களில் மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்தினால் தான், மூன்றாவது அலையை சமாளிக்க முடியும். இல்லையெனில் வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும்” என அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR vs DC LIVE Score: விக்கெட் எடுக்க முடியாமல் திணறும் டெல்லி..அதிரடி காட்டும் ரியான் பராக்!
RR vs DC LIVE Score: விக்கெட் எடுக்க முடியாமல் திணறும் டெல்லி..அதிரடி காட்டும் ரியான் பராக்!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Lok Sabha Election: ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே!  ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே! ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!Thangar Bachan - ”அத கொஞ்சம் நிறுத்துங்க” திடீரென ஒலித்த செல்போன்! கடுப்பான தங்கர் பச்சான்KC Veeramani - ”பழி போடாதீங்க A.C.சண்முகம்..இந்தப் பக்கம் வர முடியாது” எச்சரிக்கும் K.C. வீரமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR vs DC LIVE Score: விக்கெட் எடுக்க முடியாமல் திணறும் டெல்லி..அதிரடி காட்டும் ரியான் பராக்!
RR vs DC LIVE Score: விக்கெட் எடுக்க முடியாமல் திணறும் டெல்லி..அதிரடி காட்டும் ரியான் பராக்!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Lok Sabha Election: ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே!  ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே! ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE : சென்னை ஆழ்வார்பேட்டை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Rishabh Pant: டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
டெல்லி அணிக்காக ஐ.பி.எல்.லில் 100 போட்டிகள்! முதல் வீரர் என்ற சாதனையை படைத்த ரிஷப் பண்ட்!
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
Thalaivar 171 Title: லோகேஷின் டைம் டிராவல் கதையில்  கைதியாக ரஜினி! தலைவர் 171 டைட்டில் அப்டேட்!
Thalaivar 171 Title: லோகேஷின் டைம் டிராவல் கதையில் கைதியாக ரஜினி! தலைவர் 171 டைட்டில் அப்டேட்!
Embed widget