மேலும் அறிய

பொள்ளாச்சியில் சாலையில் கிடந்த துப்பாக்கி... போலீசிடம் ஒப்படைத்த மூதாட்டி!

சாலையோரம் கருப்பு நிற ‘ரெயின் கோட்’ ஒன்று கிடந்துள்ளதை பார்த்துள்ளார். அதை எடுத்துப் பார்த்த போது, அதில் இரண்டு கையுறைகள் மற்றும் ஒரு நாட்டு கைத் துப்பாக்கி சுற்றி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

பொள்ளாச்சியில் சாலையில் கிடந்த நாட்டு துப்பாக்கியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மூதாட்டியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் அன்னூர் ஒட்டர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. 72 வயதான இவர் பொள்ளாச்சி திருநீலகண்டர் வீதியில் வசிக்கும் பேத்தியின் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பேத்திக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனால் குழந்தையை பார்ப்பதற்காக நேற்று பொள்ளாச்சிக்கு விஜயலட்சுமி சென்றுள்ளார். அப்போது விஜயலட்சுமி பொள்ளாச்சி - கோவை சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையோரம் கருப்பு நிற ‘ரெயின் கோட்’ ஒன்று கிடந்துள்ளதை பார்த்துள்ளார். அதை எடுத்துப் பார்த்த போது, அதில் இரண்டு கையுறைகள் மற்றும் ஒரு நாட்டு கைத் துப்பாக்கி சுற்றி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி தனது பேரன் விஜய்க்கு தகவல் அளித்துள்ளார்.


பொள்ளாச்சியில் சாலையில் கிடந்த துப்பாக்கி... போலீசிடம் ஒப்படைத்த மூதாட்டி!

இதையடுத்து விஜயலட்சுமி தனது பேரன் விஜய் உடன் வந்து கைத்துப்பாக்கியை பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து பொள்ளாச்சி டிஎஸ்பி தமிழ்மணி தலைமையில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது விஜயலட்சுமி மற்றும் அவரது பேரன் விஜய் இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட பகுதி பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குள் இருப்பதால் வழக்கு மகாலிங்கபுரம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது குறித்து மகாலிங்கபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, கோவையில் உள்ள ஆயுத கிடங்கில் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைப்பற்றப்பட்ட துப்பாக்கி நாட்டு ரக துப்பாக்கியாகும். அதில் தோட்டாக்கள் எதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது.

துப்பாக்கியை கொண்டு வந்தது யார்? என்ன நோக்கத்திற்காக கொண்டு கொண்டு வரப்பட்டது? எதேனும் குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் துப்பாக்கி கிடந்ததாக கூறப்படும் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் துப்பாக்கியை விட்டு சென்றது யார் என்பது குறித்து காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். முக்கியமான சாலைகளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். சாலையோரம் துப்பாக்கி கிடந்த சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

 

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

 

 

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’Anbil Mahesh Phone Call : ’’ IDEA இருந்தா சொல்லுப்பா’’அன்பில் மகேஷ் PHONE CALL!  இளம் விஞ்ஞானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Breaking News LIVE OCT 4: வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் - மருத்துவர்கள் அட்வைஸ் என்ன?
Breaking News LIVE OCT 4: வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் - மருத்துவர்கள் அட்வைஸ் என்ன?
PM Kisan Yojana: பிஎம் கிசான் திட்டம் - விவசாயிகளுக்கான அடுத்த தவணை ரூ.6000 எப்போது கிடைக்கும்? விவரங்கள் இதோ..!
PM Kisan Yojana: பிஎம் கிசான் திட்டம் - விவசாயிகளுக்கான அடுத்த தவணை ரூ.6000 எப்போது கிடைக்கும்? விவரங்கள் இதோ..!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
Embed widget