மேலும் அறிய

மீண்டும் கிராமத்திற்குள் புகுந்த மக்னா யானை: மூன்றாவது முறையாக மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை

வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராம பகுதிக்குள் நுழைந்து மக்னா யானை பயிர் சேதம் செய்வதாக, மூன்றாவது முறையாக மயக்க ஊசி செலுத்தி பிடித்து வனப்பகுதியில் விட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த மக்னா யானையை, அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் மயக்க கூசி செலுத்தி பிடித்தனர். பின்னர் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அந்த யானை விடப்பட்டது. ஆனால் வனத்தை விட்டு வெளியேறிய அந்த மக்னா யானை, பொள்ளாச்சி பகுதியை கடந்து கோவை மாநகர பகுதிக்குள் நுழைந்தது. இதையடுத்து மீண்டும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட அந்த யானை, அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

இருப்பினும் அந்த மக்னா யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி பொள்ளாச்சி அருகே உள்ள சரளபதி, தம்பம்பதி, சேத்துமடை போன்ற விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது. மேலும் விவசாய விளை பொருட்களையும் அந்த யானை சேதப்படுத்தி வருகிறது. இதனால் இந்த யானையை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு சென்று விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் அந்த யானையை பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மக்னா யானையை பிடிப்பதற்காக டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் இருந்து மூன்று கும்கி யானைகளை வரவழைக்கப்பட்டு, சரளப்பதியில் நிறுத்தி வைக்கப்பட்டன.

கும்கி யானைகளை கொண்டு வந்து பல நாட்களாகியும் வனத்துறையினர் மக்னா யானையை பிடிக்காமல் மெத்தனம் காட்டுவதாகவும், கும்கி யானைகள் காட்சிப் பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். மக்னா யானை தொடர்ந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவதாகவும், வனத்துறையினர் உடனடியாக மக்னா யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே கடந்த 28 ம் தேதியன்று கும்கி யானைகளை டாப்சிலிப் வளர்ப்பு யானைகள் முகாமிற்கு அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


மீண்டும் கிராமத்திற்குள் புகுந்த மக்னா யானை: மூன்றாவது முறையாக மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை

இந்நிலையில் நேற்று மாலை சேத்துமடை பகுதிக்கு கும்கி யானைகள் மீண்டும் வரவழைக்கப்பட்டன. தொடர்ந்து வனத்துறையினர் மக்னா யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இதனிடையே இன்று அதிகாலையில் சேத்துமடை பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்திற்குள் மக்னா யானை நுழைந்து இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் யானையை பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது வன கால்நடை மருத்துவர் குழுவினர் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். பின்னர் மக்னா யானையின் கால்களை கயிறுகளால் கட்டிய வனத்துறையினர், கும்கி யானைகள் உதவியுடன் அந்த யானையை லாரியில் ஏற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மக்னா யானையை வால்பாறை அருகே குடியிருப்புகள் அதிகம் இல்லாத சின்னகல்லார் வனப்பகுதியில் விடுவிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராம பகுதிக்குள் நுழைந்து மக்னா யானை பயிர் சேதம் செய்வதாக, மூன்றாவது முறையாக மயக்க ஊசி செலுத்தி பிடித்து வனப்பகுதியில் விட உள்ளது குறிப்பிடத்தக்கது. மக்னா யானை பிடிக்கப்பட்டதால் சேத்துமடை பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Chennai Metro: சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Chennai Metro: சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Embed widget