மேலும் அறிய

கோவை : வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வந்த வாகனம் : அரசியல் கட்சி முகவர்கள் வாக்குவாதம்

கல்லூரிக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் மைதானத்தில் மட்டுமே நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

நடந்து முடிந்த கோவை மக்களவை தேர்தலில் ஆறு சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்  கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் பொறியியல் மற்றும்  தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் முகவர்களும் அங்கு 24 மணிநேரம் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளதை அடுத்து, கல்லூரியை சுற்றிலும் பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கல்லூரிக்குள் வரக்கூடிய  வாகனங்கள் அனைத்தும் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகிறது.

முகவர்கள் வாக்குவாதம்

மாணவர்கள் மற்றும் கல்லூரி பணியாளர்கள் அனைவரும் அடையாள அட்டைகள் காண்பித்து உள்ளே செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊழியர்களின் வாகனங்கள் உள்ளிட்ட பிறரின் வாகனங்கள் கல்லூரியின் மைதானத்தில் மட்டுமே நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு அருகே  வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை கல்லூரி பணிபுரியும் பேராசிரியர் ஒருவரின் கார் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு அருகே நிறுத்தியதால், அங்கிருந்த வேட்பாளர்களின் முகவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வேட்பாளர்களின் கார்களே உள்ளே அனுமதிக்கப்படாத நிலையில் கல்லூரியில் பணிபுரிபவர்களின் வாகனங்கள் எப்படி இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை வரை அனுமதிக்கப்படுகிறது என கேள்வி எழுப்பினர். இதனை அடுத்து அவர்களை சமாதானம் செய்த அதிகாரிகள் கல்லூரிக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் மைதானத்தில் மட்டுமே நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு தனியார் வாகனம் வந்த விவகாரம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆட்சியரிடம் பாஜக புகார்


கோவை : வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வந்த வாகனம் : அரசியல் கட்சி முகவர்கள் வாக்குவாதம்

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சார்ந்த 30க்கும் மேற்பட்ட பாஜகவினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அதில் நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில் கோவை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சூலூர் பேரூராட்சியில்  148,151 முதல் 160 வரை பூத்துகளில் அகர வரிசைப்படி மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் வைக்கப்படாமல், தலைகீழாக வைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் குழப்பமடைந்தாகவும், அந்த பகுதிகளில் மறு தேர்தல் நடத்தவும், இதனை மாற்றி வைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து பாஜக சூலூர் ஒன்றிய கிழக்கு மண்டல தலைவர் ரவிக்குமார் கூறுகையில் நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலின் போது வேட்பாளர்களின் பெயர்கள் மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்களில் அகர வரிசையில் வைக்கப்படாமல் ஆளுங்கட்சிக்கு  சாதகமாக இருக்க வேண்டும் என்று தலைகீழாக மாற்றி வைக்கப்பட்டது. இதனால் வாக்காளர்கள் குழப்பம் அடைந்தனர். இது குறித்து அங்கு பணியில் இருந்த தேர்தல் அதிகாரிகளுடன் கேட்ட போது சரியான பதில் அளிக்கவில்லை. எனவே வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் வலியுறுத்தி உள்ளோம். அதே சமயம் கோவை மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஏராளமானோர் வாக்களிக்க வந்திருந்தும் அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியல் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர். இதற்கு யார் காரணம் என கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மாநில தலைவரின் ஆலோசனையின் பேரில் போராட்டங்களில் ஈடுபடுவோம்” எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
Embed widget