மேலும் அறிய

Crime : இலட்சக்கணக்கில் லஞ்சம்: கஞ்சா வியாபாரிகளை பிடிக்கச் சென்ற இடத்தில் கூட்டாளியாக மாறிய எஸ்.ஐ!

2018 முதல் 2020 ம் ஆண்டு வரை மகேந்திரன், கோவையில் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் துறையில் பணியாற்றியுள்ளார். அவர் பணி புரிந்த காலத்தில், கஞ்சா தொடர்பான பல வழக்குகளை கையாண்டுள்ளார்.

கோவையில் கஞ்சா வியாபாரிகளிடம் வங்கி கணக்கு மூலம் இலட்சக்கணக்கில் பணம் பெற்று வந்த சைபர் க்ரைம் உதவி ஆய்வாளரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை இரத்தனபுரி பகுதியில் கஞ்சா ப் அதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக இரத்தினபுரி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த காரமடை பகுதியை சேர்ந்த சந்திரபாபு (33) என்பவரிடம் காவல் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது காவல் துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து சந்திரபாவுவை கைது செய்த காவல் துறையினர், 1.2 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். பின்னர் சந்திரபாபுவிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.


Crime : இலட்சக்கணக்கில் லஞ்சம்: கஞ்சா வியாபாரிகளை பிடிக்கச் சென்ற இடத்தில் கூட்டாளியாக மாறிய எஸ்.ஐ!

அந்த விசாரணையில் அவரது வீட்டிற்கு அருகே 7 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பதும், உள்ளூர் கஞ்சா வியாபாரிகளுக்கு கஞ்சாவை விற்பனை செய்து இருப்பதும் தெரியவந்தது. இதன் பேரில் காவல் துறையினர் சோதனை நடத்தி கஞ்சாவை கைப்பற்றினர். இதையடுத்து மொத்தமாக 8.2 கிலோ கஞ்சா மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஜலீல், கிஷோர், பாண்டி, ரியாஸ்கான், முருகன், சிவா, முருகேசன், பாண்டி, மணிகண்டன், மகேந்திரன் ஆகியோரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதில் மகேந்திரன் (34) என்பவர் ஈரோடு மாவட்ட சைபர் க்ரைம் பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையம் பகுதியை சேர்ந்த மகேந்திரன், கடந்த 2011 ம் ஆண்டு முதல் காவல் துறையில் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்னதாக 2018 முதல் 2020 ம் ஆண்டு வரை மகேந்திரன், கோவையில் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் துறையில் பணியாற்றியுள்ளார். அவர் பணி புரிந்த காலத்தில், கஞ்சா தொடர்பான பல வழக்குகளை கையாண்டுள்ளார். அப்போது கஞ்சா கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துக் கொண்டுள்ளார். பின்னர் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை தயாரிப்பாளர்களுக்கும், விற்பனை செய்பவர்களுக்கும் கஞ்சா நெட்வொர்க்கின் விவரங்களை பகிர்ந்து கொண்டு கஞ்சா விற்பனை செய்ய உதவியுள்ளார். இதையொட்டி இரு தரப்பினரிடம் இருந்தும் தனது வங்கிக் கணக்குகள் மூலம் கமிஷனாக இலட்சக்கணக்கில் பணம் பெற்று வந்துள்ளார். அவரது வங்கிக் கணக்கில் பல லட்சம் ரூபாய் பணம் வந்துள்ளது காவல் துறையினர் விசாரணையில் உறுதியானது. இதையடுத்து ரத்தினபுரி காவல் துறையினர் உதவி ஆய்வாளர் மகேந்திரனை கைது செய்தனர். கஞ்சா வியாபாரிகளிடம் பணம் பெற்றதாக காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Also Read : Crime: மனைவியின் நண்பரை 15 துண்டுகளாக வெட்டிக் கொன்ற கணவர் - சந்தேகத்தால் நிகழ்ந்த கொடூரம்

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget