மேலும் அறிய

கோவை அருகே 1.5 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல் ; 4 பேர் கைது

கடந்த 3 மாதங்களில் புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 110 நபர்கள் மீது 97 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2757.870 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த கோவை மாவட்ட காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவதாக சூலூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில் சூலூர் காவ‌ல் துறை‌யின‌ர் அப்பநாயக்கன்பட்டி - கலங்கல் சாலையில் உள்ள கலங்கல் சந்திப்பு அருகே வாகன தணிக்கை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு நான்கு சக்கர வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி காவல் துறையினர் சோதனை செய்த போது, அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

1.5 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்

பின்னர் புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் பாபு (34) மற்றும் பாரதி (29) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 200 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை  பறிமுதல் செய்தனர். அவர்களிடம் விசாரணை செய்ததில் அப்பநாயக்கன்பட்டி அருகே உள்ள குடோனில் சுமார் 1200 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து  அங்கு சோதனை செய்த காவல் துறையினர் 1200 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்த கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த தென்னரசு (29) என்பவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு 12 இலட்சத்து 71 ஆயிரம் ரூபாய் இருக்குமென காவல் துறையினர் தெரிவித்தனர்.

காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

இதேபோல் சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூர் சந்திப்பு பகுதியில் ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக சூலூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அங்கு காவல் துறையினர் சோதனை மேற்கொண்ட போது, 99 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 100 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், அவற்றை பதுக்கி வைத்திருந்த பாலமுருகன் என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், கடந்த 01.05.2024 முதல் மாவட்ட காவல் துறையினரால் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி சோதனைகளின் அடிப்படையில், தற்போது வரை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 110 நபர்கள் மீது 97 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடமிருந்து சுமார் 2757.870 கிலோகிராம் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது தொடர்ந்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் பதிரி நாராயணன் எச்சரித்துள்ளார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இது தான் என்ன குளோஸ் பண்ண முழு காரணம் - அமைச்சர் நாசர் பேச்சால் பரபரப்பு
இது தான் என்ன குளோஸ் பண்ண முழு காரணம் - அமைச்சர் நாசர் பேச்சால் பரபரப்பு
Breaking News LIVE 19th OCT 2024: 2 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் - வானிலை அறிக்கை
Breaking News LIVE 19th OCT 2024: 2 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் - வானிலை அறிக்கை
அரசின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது... காட்டமான அறிக்கை வெளியிட்ட அன்புமணி
அரசின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது... காட்டமான அறிக்கை வெளியிட்ட அன்புமணி
தீட்சிதர்கள் என்ன கடவுளா? காசு கொடுக்கலன்னா விபூதி கூட கிடைக்காது: கடுமையாக சாடிய சென்னை உயர்நீதிமன்றம்
தீட்சிதர்கள் என்ன கடவுளா? காசு கொடுக்கலன்னா விபூதி கூட கிடைக்காது: கடுமையாக சாடிய சென்னை உயர்நீதிமன்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi : ”திராவிடத்தை தவிர்த்த RN ரவி? திட்டமிட்ட செயலா?” ஆலோசகர் திடீர் விளக்கம்Ponmudi vs Senji Masthan : Serious Mode-ல் பொன்முடி!ஹாயாக பிஸ்கட் சாப்பிட்ட மஸ்தான்!பதறிய அதிகாரிகள்Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இது தான் என்ன குளோஸ் பண்ண முழு காரணம் - அமைச்சர் நாசர் பேச்சால் பரபரப்பு
இது தான் என்ன குளோஸ் பண்ண முழு காரணம் - அமைச்சர் நாசர் பேச்சால் பரபரப்பு
Breaking News LIVE 19th OCT 2024: 2 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் - வானிலை அறிக்கை
Breaking News LIVE 19th OCT 2024: 2 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் - வானிலை அறிக்கை
அரசின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது... காட்டமான அறிக்கை வெளியிட்ட அன்புமணி
அரசின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது... காட்டமான அறிக்கை வெளியிட்ட அன்புமணி
தீட்சிதர்கள் என்ன கடவுளா? காசு கொடுக்கலன்னா விபூதி கூட கிடைக்காது: கடுமையாக சாடிய சென்னை உயர்நீதிமன்றம்
தீட்சிதர்கள் என்ன கடவுளா? காசு கொடுக்கலன்னா விபூதி கூட கிடைக்காது: கடுமையாக சாடிய சென்னை உயர்நீதிமன்றம்
இபிஎஸ் மாவட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி... மீண்டும் சேலத்தில் இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்!
இபிஎஸ் மாவட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி... மீண்டும் சேலத்தில் இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்!
போடு வெடிய; தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை- முதல்வர் அறிவிப்பு
போடு வெடிய; தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை- முதல்வர் அறிவிப்பு
Nelson : கவின் இந்த படத்துக்கு வேண்டாம்...நட்ப உள்ள கொண்டு வந்து என்ன கவுத்திடாத...பிளடி பெக்கர் டிரைலர் லாஞ்சில்  நெல்சன்
Nelson : கவின் இந்த படத்துக்கு வேண்டாம்...நட்ப உள்ள கொண்டு வந்து என்ன கவுத்திடாத...பிளடி பெக்கர் டிரைலர் லாஞ்சில் நெல்சன்
Largest Roads: உலகிலேயே அதிக சாலைகளை கொண்ட நாடு எது? லிஸ்டில் இந்தியாவிற்கு இடம் உண்டா?
Largest Roads: உலகிலேயே அதிக சாலைகளை கொண்ட நாடு எது? லிஸ்டில் இந்தியாவிற்கு இடம் உண்டா?
Embed widget