மேலும் அறிய

ரயிலில் வந்து பைக் திருடி செயின் பறிப்பு... கோவையை அதிர வைத்த வட மாநில கொள்ளையர்கள் - ஒருவர் கைது

மகாராஷ்டிராவில் இருந்து ரயிலில் வந்த 4 பேர் 3 பைக்குகளை திருடியுள்ளனர். பின்னர் அந்த பைக்குகளை பயன்படுத்தி செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

கோவை ரத்தினபுரி, பந்தய சாலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரே நாளில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் 10 பவுன் தங்க நகைகள் பறிப்பு சம்பவங்கள் நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட நபர்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் காவல் துறையினர் சம்பவங்கள் நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த 200 க்கும் மேற்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 பைக்கில் வந்த வாலிபர்கள் முகமூடி அணிந்தும், ஹெல்மெட் அணிந்தும் இந்த தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.


ரயிலில் வந்து பைக் திருடி செயின் பறிப்பு... கோவையை அதிர வைத்த வட மாநில கொள்ளையர்கள் - ஒருவர் கைது

இதுகுறித்து கோவை மாநகர ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், குற்றவாளிகள் பிடிக்க உதவி ஆணையர் கணேசன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை காவல் துறையினர் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் கோவை பல்வேறு பகுதிகளில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மலாங் யாசர் ஜாபிரி (24), தானே பகுதியை சேர்ந்த பிரதேமேஷ்(24), மத்திய பிரதேசம் சேர்ந்த சமீர் சிக்கு(24), ஆந்திராவை சேர்ந்த உசேன் அலி சேக்(24) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதில், உசேன் அலியை விபத்தில் சிக்கிய நிலையில் காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ரயிலில் கோவைக்கு வந்து பைக்குகளை திருடி, அவற்றை கொண்டு நகைப்பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதும், பின்னர் பைக்குகளை விட்டு விட்டு ரயிலில் சொந்த ஊர்களுக்கு சென்றதும் தெரியவந்தது. 


ரயிலில் வந்து பைக் திருடி செயின் பறிப்பு... கோவையை அதிர வைத்த வட மாநில கொள்ளையர்கள் - ஒருவர் கைது

இதுகுறித்து பந்தய சாலை காவல் நிலையத்தில் கோவை மாநகர துணை காவல் ஆணையர் சந்தீஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ மகாராஷ்டிராவில் இருந்து குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் இவர்கள் 4 பேரும் கோவை வந்துள்ளனர். ‌பின்னர் அங்கு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 3 பைக்குகளை திருடியுள்ளனர். அந்த பைக்குகளை பயன்படுத்தி செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் மீது ரயில் செல்லும் வழியில் உள்ள தர்மபுரி, ஆந்திரா, மத்திய பிரதேசம், கர்நாடகா ஆகிய பகுதிகளில் ரயிலில் சென்று செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் மலாங் யாசர் ஜாபிர் மீது 30 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளது. தற்போது, உசேன் அலி சேக் மட்டும் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரை தனிப்படை காவல் துறையினர் தேடி வருகின்றனர்” எனக் கூறினார்.

தலைப்பு செய்திகள்

Coimbatore Power Cut: கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
coimbatore power cut: கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Embed widget