மேலும் அறிய

ரயிலில் வந்து பைக் திருடி செயின் பறிப்பு... கோவையை அதிர வைத்த வட மாநில கொள்ளையர்கள் - ஒருவர் கைது

மகாராஷ்டிராவில் இருந்து ரயிலில் வந்த 4 பேர் 3 பைக்குகளை திருடியுள்ளனர். பின்னர் அந்த பைக்குகளை பயன்படுத்தி செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

கோவை ரத்தினபுரி, பந்தய சாலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரே நாளில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் 10 பவுன் தங்க நகைகள் பறிப்பு சம்பவங்கள் நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட நபர்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் காவல் துறையினர் சம்பவங்கள் நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த 200 க்கும் மேற்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 பைக்கில் வந்த வாலிபர்கள் முகமூடி அணிந்தும், ஹெல்மெட் அணிந்தும் இந்த தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.


ரயிலில் வந்து பைக் திருடி செயின் பறிப்பு... கோவையை அதிர வைத்த வட மாநில கொள்ளையர்கள் - ஒருவர் கைது

இதுகுறித்து கோவை மாநகர ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், குற்றவாளிகள் பிடிக்க உதவி ஆணையர் கணேசன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை காவல் துறையினர் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் கோவை பல்வேறு பகுதிகளில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மலாங் யாசர் ஜாபிரி (24), தானே பகுதியை சேர்ந்த பிரதேமேஷ்(24), மத்திய பிரதேசம் சேர்ந்த சமீர் சிக்கு(24), ஆந்திராவை சேர்ந்த உசேன் அலி சேக்(24) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதில், உசேன் அலியை விபத்தில் சிக்கிய நிலையில் காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ரயிலில் கோவைக்கு வந்து பைக்குகளை திருடி, அவற்றை கொண்டு நகைப்பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதும், பின்னர் பைக்குகளை விட்டு விட்டு ரயிலில் சொந்த ஊர்களுக்கு சென்றதும் தெரியவந்தது. 


ரயிலில் வந்து பைக் திருடி செயின் பறிப்பு... கோவையை அதிர வைத்த வட மாநில கொள்ளையர்கள் - ஒருவர் கைது

இதுகுறித்து பந்தய சாலை காவல் நிலையத்தில் கோவை மாநகர துணை காவல் ஆணையர் சந்தீஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ மகாராஷ்டிராவில் இருந்து குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் இவர்கள் 4 பேரும் கோவை வந்துள்ளனர். ‌பின்னர் அங்கு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 3 பைக்குகளை திருடியுள்ளனர். அந்த பைக்குகளை பயன்படுத்தி செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் மீது ரயில் செல்லும் வழியில் உள்ள தர்மபுரி, ஆந்திரா, மத்திய பிரதேசம், கர்நாடகா ஆகிய பகுதிகளில் ரயிலில் சென்று செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் மலாங் யாசர் ஜாபிர் மீது 30 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளது. தற்போது, உசேன் அலி சேக் மட்டும் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரை தனிப்படை காவல் துறையினர் தேடி வருகின்றனர்” எனக் கூறினார்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (ஜூலை 18) எத்தனை இடங்களில் பவர் கட் இருக்கு? பட்டியல் வந்தாச்சு
கோவையில் நாளை (ஜூலை 18) எத்தனை இடங்களில் பவர் கட் இருக்கு? பட்டியல் வந்தாச்சு
கோவையில் நாளை மின்தடை: உங்க பகுதி இதில் உள்ளதா?
கோவையில் நாளை மின்தடை: உங்க பகுதி இதில் உள்ளதா?
கோவையில் நாளை (16-07-2026) எந்தெந்த இடங்களில் பவர் கட்? - எத்தனை மணி நேரம் இருக்காது?
கோவையில் நாளை (16-07-2026) எந்தெந்த இடங்களில் பவர் கட்? - எத்தனை மணி நேரம் இருக்காது?
Coimbatore power cut: நாளை (ஜூலை 15) கோவையில் முழு நேர மின்தடை அறிவிப்பு! உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க
நாளை (ஜூலை 15) கோவையில் முழு நேர மின்தடை அறிவிப்பு! உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Bengaluru Bullet Train: ரூ.18,000 கோடி பட்ஜெட், சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில், 350KM ஸ்பீட், 73 நிமிடங்கள் போதும்
ரூ.18,000 கோடி பட்ஜெட், சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில், 350KM ஸ்பீட், 73 நிமிடங்கள் போதும்
சென்னை CMDA திவால்: ஊதியத்திற்கே பணமில்லை! - வெள்ளை அறிக்கை வெளியிட அன்புமணி கோரிக்கை
சென்னை CMDA திவால்: ஊதியத்திற்கே பணமில்லை! - வெள்ளை அறிக்கை வெளியிட அன்புமணி கோரிக்கை
பெண் நிர்வாணப்படுத்தி தாக்குதல்.. சொந்த கட்சியினர் மீது ஆக்‌ஷன் எடுத்த சந்திரபாபு நாயுடு!
பெண் நிர்வாணப்படுத்தி தாக்குதல்.. சொந்த கட்சியினர் மீது ஆக்‌ஷன் எடுத்த சந்திரபாபு நாயுடு!
N Anand: தலைவருடன் தொடரும் நிழலே.. அன்புள்ள அப்பா.. அமைச்சர் ஆனந்துக்கு விதவிதமாக பிறந்தநாள் வாழ்த்து!
N Anand: தலைவருடன் தொடரும் நிழலே.. அன்புள்ள அப்பா.. அமைச்சர் ஆனந்துக்கு விதவிதமாக பிறந்தநாள் வாழ்த்து!
CM Vijay: திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
ஒரே சார்ஜில் 125 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Ampere Magnus இ ஸ்கூட்டர்! இத்தனை வசதிகளா?
ஒரே சார்ஜில் 125 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Ampere Magnus இ ஸ்கூட்டர்! இத்தனை வசதிகளா?
RS Bharathi: விஜய் பதவியை ராஜினாமா செய்யலாம்.. ஆட்சி மாற்றம் வரலாம்.. ஆர்.எஸ்.பாரதி கணிப்பு
RS Bharathi: விஜய் பதவியை ராஜினாமா செய்யலாம்.. ஆட்சி மாற்றம் வரலாம்.. ஆர்.எஸ்.பாரதி கணிப்பு
வெளியான நீட் தேர்வு முடிவுகள்; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு- இதோ எண்கள்!
வெளியான நீட் தேர்வு முடிவுகள்; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு- இதோ எண்கள்!
Embed widget