மேலும் அறிய

ரயிலில் வந்து பைக் திருடி செயின் பறிப்பு... கோவையை அதிர வைத்த வட மாநில கொள்ளையர்கள் - ஒருவர் கைது

மகாராஷ்டிராவில் இருந்து ரயிலில் வந்த 4 பேர் 3 பைக்குகளை திருடியுள்ளனர். பின்னர் அந்த பைக்குகளை பயன்படுத்தி செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

கோவை ரத்தினபுரி, பந்தய சாலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரே நாளில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் 10 பவுன் தங்க நகைகள் பறிப்பு சம்பவங்கள் நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட நபர்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் காவல் துறையினர் சம்பவங்கள் நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த 200 க்கும் மேற்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 பைக்கில் வந்த வாலிபர்கள் முகமூடி அணிந்தும், ஹெல்மெட் அணிந்தும் இந்த தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.


ரயிலில் வந்து பைக் திருடி செயின் பறிப்பு... கோவையை அதிர வைத்த வட மாநில கொள்ளையர்கள் - ஒருவர் கைது

இதுகுறித்து கோவை மாநகர ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், குற்றவாளிகள் பிடிக்க உதவி ஆணையர் கணேசன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை காவல் துறையினர் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் கோவை பல்வேறு பகுதிகளில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மலாங் யாசர் ஜாபிரி (24), தானே பகுதியை சேர்ந்த பிரதேமேஷ்(24), மத்திய பிரதேசம் சேர்ந்த சமீர் சிக்கு(24), ஆந்திராவை சேர்ந்த உசேன் அலி சேக்(24) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதில், உசேன் அலியை விபத்தில் சிக்கிய நிலையில் காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ரயிலில் கோவைக்கு வந்து பைக்குகளை திருடி, அவற்றை கொண்டு நகைப்பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதும், பின்னர் பைக்குகளை விட்டு விட்டு ரயிலில் சொந்த ஊர்களுக்கு சென்றதும் தெரியவந்தது. 


ரயிலில் வந்து பைக் திருடி செயின் பறிப்பு... கோவையை அதிர வைத்த வட மாநில கொள்ளையர்கள் - ஒருவர் கைது

இதுகுறித்து பந்தய சாலை காவல் நிலையத்தில் கோவை மாநகர துணை காவல் ஆணையர் சந்தீஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ மகாராஷ்டிராவில் இருந்து குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் இவர்கள் 4 பேரும் கோவை வந்துள்ளனர். ‌பின்னர் அங்கு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 3 பைக்குகளை திருடியுள்ளனர். அந்த பைக்குகளை பயன்படுத்தி செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் மீது ரயில் செல்லும் வழியில் உள்ள தர்மபுரி, ஆந்திரா, மத்திய பிரதேசம், கர்நாடகா ஆகிய பகுதிகளில் ரயிலில் சென்று செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் மலாங் யாசர் ஜாபிர் மீது 30 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளது. தற்போது, உசேன் அலி சேக் மட்டும் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரை தனிப்படை காவல் துறையினர் தேடி வருகின்றனர்” எனக் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
Embed widget