மேலும் அறிய

அடர் வனத்தில் விடப்பட்ட பொள்ளாச்சி மக்னா யானை; சேட்டிலைட் ரேடியோ காலர் மூலம் கண்காணிப்பு

வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராம பகுதிக்குள் நுழைந்து மக்னா யானை பயிர் சேதம் செய்வதாக, மூன்றாவது முறையாக மயக்க ஊசி செலுத்தி பிடித்து வனப்பகுதியில் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த மக்னா யானையை, அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அந்த யானை விடப்பட்டது. ஆனால் வனத்தை விட்டு வெளியேறிய அந்த மக்னா யானை, பொள்ளாச்சி பகுதியை கடந்து கோவை மாநகர பகுதிக்குள் நுழைந்தது. இதையடுத்து மீண்டும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட அந்த யானை, அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

இருப்பினும் அந்த மக்னா யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி பொள்ளாச்சி அருகே உள்ள சரளபதி, தம்பம்பதி, சேத்துமடை போன்ற விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது. மேலும் விவசாய விளை பொருட்களையும் அந்த யானை சேதப்படுத்தி வருகிறது. இதனால் இந்த யானையை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு சென்று விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் அந்த யானையை பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மக்னா யானையை பிடிப்பதற்காக டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் இருந்து மூன்று கும்கி யானைகளை வரவழைக்கப்பட்டு, சரளப்பதியில் நிறுத்தி வைக்கப்பட்டன.


அடர் வனத்தில் விடப்பட்ட பொள்ளாச்சி மக்னா யானை; சேட்டிலைட் ரேடியோ காலர் மூலம் கண்காணிப்பு

கும்கி யானைகளை கொண்டு வந்து பல நாட்களாகியும் வனத்துறையினர் மக்னா யானையை பிடிக்காமல் மெத்தனம் காட்டுவதாகவும், கும்கி யானைகள் காட்சிப் பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். மக்னா யானை தொடர்ந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவதாகவும், வனத்துறையினர் உடனடியாக மக்னா யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே கடந்த 28 ம் தேதியன்று கும்கி யானைகளை டாப்சிலிப் வளர்ப்பு யானைகள் முகாமிற்கு அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் சேத்துமடை அருகேயுள்ள சரளப்பதி பகுதிக்கு கும்கி யானைகள் மீண்டும் வரவழைக்கப்பட்டன. தொடர்ந்து வனத்துறையினர் மக்னா யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இதனிடையே இன்று அதிகாலையில் சரளப்பதி பகுதியில் மக்னா யானை நுழைந்து இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் யானையை பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது வன கால்நடை மருத்துவர் குழுவினர் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். பின்னர் மக்னா யானையின் கால்களை கயிறுகளால் கட்டிய வனத்துறையினர், கும்கி யானைகள் உதவியுடன் அந்த யானையை லாரியில் ஏற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.

பின்னர் மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு மக்னா யானைக்கு சேட்டிலைட் ரேடியோ காலர் பொருத்தப்பட்டது. இதையடுத்து வால்பாறை அருகே கேரள மாநில எல்லையில் உள்ள சின்னக்கல்லார் வனப்பகுதியில் மக்னா யானை விடுவிக்கப்பட்டது. யானையை சேட்டிலைட் ரேடியோ காலர் மூலம் கண்காணித்து வரும் வனத்துறையினர், அந்த யானை நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராம பகுதிக்குள் நுழைந்து மக்னா யானை பயிர் சேதம் செய்வதாக, மூன்றாவது முறையாக மயக்க ஊசி செலுத்தி பிடித்து வனப்பகுதியில் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget