மேலும் அறிய

'அரிசிக்கு மத்திய அரசு மாறுபட்ட ஜி.எஸ்.டி வரி விதிக்கக்கூடாது’ - அமைச்சர் மூர்த்தி

"பேக் பண்ணிய அரிசிக்கு ஒரு வித வரி, பேக் பண்ணாத அரிசிக்கு ஒரு வரி என ஜிஎஸ்டியில் பாகுபாடு இருப்பதாக வணிகர்கள் சிலர் சொன்னார்கள். அதை ஜி.எஸ்.டி கவுன்சிலில் வைப்பதாக சொல்லி இருக்கின்றோம்"

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கில் வணிகவரி நிலுவைகளுக்கான சமாதானத்‌ திட்டம்‌ குறித்த விழிப்புணர்வு மற்றும் விளக்கக் கூட்டம்‌ நடைபெற்றது. வணிகவரித்துறை அமைச்சர்‌ பி.மூர்த்தி தலைமையில்‌ நடைபெற்ற இந்த நிகழ்வில், கோவை, ஈரோடு, சேலம், ஓசூர் கோட்டங்களை சேர்ந்த வணிகர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும், அந்த மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய வணிகர் சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதனைத்தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி இந்த கூட்டத்தில் பேசினார். அப்போது பேசிய அவர், ”1999ம் ஆண்டு இந்த சமாதான திட்டத்தை கலைஞர் கொண்டு வந்தார். 5 முறை இது செயல்பாட்டிற்கு வந்திருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் வணிகர்களுக்கு 50 ஆயிரம் வரை வரி நிலுவையில் இருக்கும் 95 ஆயிரம் பேருக்கு தள்ளுபடி செய்து, 1002 சொத்துகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அரிசிக்கு மாறுபட்ட ஜிஎஸ்டி இருப்பதை சரி செய்ய வேண்டும் என வணிகர்கள் கேட்டு இருக்கின்றனர். மத்திய அரசு அவங்க என்ன சாப்பிடுறாங்க எனத் தெரியும். இருந்தாலும் அரிசிக்கான  கோரிக்கையினை ஜிஎஸ்டி கவுன்சிலில் மீண்டும் வைப்போம். இது போன்று வணிக வரித்துறையில் தள்ளுபடி செய்து இருப்பது வரலாற்றில் கிடையாது. வணிகப் பெருமக்கள் 12 ஆண்டு காலம்  சலனப்பட்டு இருந்தார்கள். அவர்களுக்காகவே இந்த சமாதான திட்டம் கொண்டு வரப்பட்டது. 90 சதவீத வணிகர்கள் நியாயமாக இருந்தாலும், 10 சதவீதம் பேர் போலியாக இருந்து வணிகர்களின் பெயரை கெடுக்க இருக்கின்றனர். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பவர்கள் அதை திரும்ப பெற்று சமாதான திட்டத்திற்கு வந்துவிடலாம்.


அரிசிக்கு மத்திய அரசு மாறுபட்ட ஜி.எஸ்.டி வரி விதிக்கக்கூடாது’ - அமைச்சர் மூர்த்தி

மாவட்ட வாரியாக வணிக வரித்துறை அதிகாரிகள், வணிகர்களை அழைத்து சமாதான திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சொல்லி இருக்கின்றோம். இப்போது இருக்கும் நிலுவை வரியை கட்டினால்தான் இன்னும் இரு ஆண்டுகள் வரை இந்த சலுகையை நீடிக்க முதல்வரிடம் கேட்க முடியும். சமாதான திட்டம் குறித்து பேசும் போது, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இதை கொண்டு வாருங்கள், தமிழக மக்களே உங்களை பாராட்டுவார்கள் என சொன்னார். சிறிய தவறுகள் இருந்தால் அபராதம் விதிக்க கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கின்றேன்” எனத் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சமாதான திட்டத்தில் மிகப்பெரிய சலுகைகளை அரசு கொடுத்து இருக்கிறது. அனைத்து மண்டலங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். வணிகர்கள் மத்தியில் இந்ததிட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விண்ணப்பிப்பதற்கு அரை மணி நேரம் போதும். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான உணவு பழக்கம் இருக்கின்றது. பேக் பண்ணிய அரிசிக்கு ஒரு வித வரி, பேக் பண்ணாத அரிசிக்கு ஒரு வரி என ஜிஎஸ்டியில் பாகுபாடு இருப்பதாக வணிகர்கள் சிலர் சொன்னார்கள். அதை ஜி.எஸ்.டி கவுன்சிலில் வைப்பதாக சொல்லி இருக்கின்றோம். கோதுமை, அரிசிக்கு பாகுபாடு காட்டுவதாக  சொல்லவில்லை” எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

"சிவ பக்தியில் மூழ்கடித்த இளையராஜா.. புல்லரிப்பா இருக்கு" பிரதமர் மோடி
Haridwar Stampede: கோயில்களில் பறிபோகும் உயிர்கள் - கடவுளுக்கு இரக்கமில்லையா? அரசுக்கு பொறுப்பில்லையா?
Haridwar Stampede: கோயில்களில் பறிபோகும் உயிர்கள் - கடவுளுக்கு இரக்கமில்லையா? அரசுக்கு பொறுப்பில்லையா?
பள்ளி மாணவர்களுக்கு பாடமாகும் ஆபரேஷன் சிந்தூர்; எந்தெந்த வகுப்புகளுக்கு தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கு பாடமாகும் ஆபரேஷன் சிந்தூர்; எந்தெந்த வகுப்புகளுக்கு தெரியுமா?
Engineering: காத்து வாங்கும் இன்ஜினியரிங் கல்லூரிகள்.. 142 காலேஜ்ல ஒருத்தர் கூட சேரல..!
Engineering: காத்து வாங்கும் இன்ஜினியரிங் கல்லூரிகள்.. 142 காலேஜ்ல ஒருத்தர் கூட சேரல..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பொண்டாட்டி இருக்கும்போதே மாதம்பட்டி 2 வது திருமணம் கல்யாணத்துக்கு முன்பே கர்பம்.. | Joy Crizildaa | Shruti Rangaraj
ஹன்சிகாவுக்கு விவாகரத்து?உண்மையை உடைத்த கணவர் இதுதான் காரணம்? | Sohael Khaturiya | Hansika Motwani Marriage | Tamil Cinema
தூத்துக்குடி வரும் மோடி! நேரில் அழைத்த ஸ்டாலின்! Files உடன் கனிமொழி!
கழட்டிவிட்ட பிரதமர் மோடி? கலக்கத்தில் ஓபிஎஸ்! கதறவிட்ட எடப்பாடி
Vikravandi |“எங்களுக்கே வழிவிட மாட்டியா” TOLGATE-யை நொறுக்கிய விசிகவினர் விக்கிரவாண்டியில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சிவ பக்தியில் மூழ்கடித்த இளையராஜா.. புல்லரிப்பா இருக்கு" பிரதமர் மோடி
Haridwar Stampede: கோயில்களில் பறிபோகும் உயிர்கள் - கடவுளுக்கு இரக்கமில்லையா? அரசுக்கு பொறுப்பில்லையா?
Haridwar Stampede: கோயில்களில் பறிபோகும் உயிர்கள் - கடவுளுக்கு இரக்கமில்லையா? அரசுக்கு பொறுப்பில்லையா?
பள்ளி மாணவர்களுக்கு பாடமாகும் ஆபரேஷன் சிந்தூர்; எந்தெந்த வகுப்புகளுக்கு தெரியுமா?
பள்ளி மாணவர்களுக்கு பாடமாகும் ஆபரேஷன் சிந்தூர்; எந்தெந்த வகுப்புகளுக்கு தெரியுமா?
Engineering: காத்து வாங்கும் இன்ஜினியரிங் கல்லூரிகள்.. 142 காலேஜ்ல ஒருத்தர் கூட சேரல..!
Engineering: காத்து வாங்கும் இன்ஜினியரிங் கல்லூரிகள்.. 142 காலேஜ்ல ஒருத்தர் கூட சேரல..!
அண்டா முதல் ஆறு வரை: திமுக ஆட்சியில் நீர்நிலைகள் காணாமல் போனதா? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி
அண்டா முதல் ஆறு வரை: திமுக ஆட்சியில் நீர்நிலைகள் காணாமல் போனதா? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி
வெளிநாடு சென்று படிக்க ஆசையா? முக்கிய ஆவணங்கள் முதல் தங்குமிடம் வரை: முழு வழிகாட்டி!
வெளிநாடு சென்று படிக்க ஆசையா? முக்கிய ஆவணங்கள் முதல் தங்குமிடம் வரை: முழு வழிகாட்டி!
Diwali Car Launch: இந்த தீபாவளி செம்ம கலெக்‌ஷன் மா..! காம்பேக்ட் தொடங்கி மிட்சைஸ் வரை, பட்டாசாய் புதிய SUV-க்கள்
Diwali Car Launch: இந்த தீபாவளி செம்ம கலெக்‌ஷன் மா..! காம்பேக்ட் தொடங்கி மிட்சைஸ் வரை, பட்டாசாய் புதிய SUV-க்கள்
அன்புமணி ராமதாஸ் நடை பயணத்திற்கு தடையில்லை , அடுத்து என்ன ? - வழக்கறிஞர் பாலு சொன்ன தகவல்
அன்புமணி ராமதாஸ் நடை பயணத்திற்கு தடையில்லை , அடுத்து என்ன ? - வழக்கறிஞர் பாலு சொன்ன தகவல்
Embed widget