கோவை வளர்ச்சிக்கு ‘கிரீன் சிக்னல்’... அதிகாரிகளுடன் ஆலோசனையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா...
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கோவை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து தமிழ்நாடு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பல்வேறு துறைகளின் வளர்ச்சித் திட்டங்கள், சாலை மேம்பாட்டுப் பணிகள், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நடைபெற்று வரும் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இதற்காக இன்று காலை கோவை வந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முதலில் கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆய்வு மேற்கொண்டு விளையாட்டு வசதிகள் மற்றும் வீரர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய திட்டங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர். திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார், துறைச் செயலாளர்கள், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டம், மாவட்டத்தில் நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு மற்றும் சாலை மேம்பாட்டுத் திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்யும் முக்கிய நிகழ்வாக அமைந்தது. குறிப்பாக, கூட்டத்தில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் சம்பத்குமார் மற்றும் விக்னேஷ் ஆகியோர் பங்கேற்காதது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















