மேலும் அறிய

பேஸ்புக் பழக்கம்! குடும்ப நண்பர்! இரும்பு கம்பியால் கொலை செய்யப்பட்ட இளைஞர்! கோவையில் பகீர் சம்பவம்!

தனது மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியூருக்கு செல்வதற்காக கார்த்திகேயன் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் சென்ற போது, காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர்.

கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே குடும்ப நண்பராக பழகி வந்தவரை வீட்டிலேயே வைத்து இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம்  கோவில்பாளையத்தை அடுத்துள்ள விஸ்வாசபுரம் டெக்ஸ்டூல் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். 47 வயதான இவர் மனைவி பிரேமா மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். கார்த்திகேயனுக்கு சொந்த ஊர் திருவையாறு. இவர் கோவை கணபதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்து வருகிறார். பிரேமா விளாங்குறிச்சி பகுதியில் உள்ள சத்துணவு மையத்தில் உதவியாளராக பணி புரிந்து வருகிறார். 

இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக பிரேமாவிற்கும், கோவை கணபதி பகுதியில் தங்கி இருக்கும் ஜெகன் என்பவருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. ஜெகனின் சொந்த ஊரும் திருவையாறு என்பதால், ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் குடும்ப நண்பர்களாக மாறினர். கார்த்திகேயன் வீட்டுக்கு அடிக்கடி ஜெகன் வந்து சென்றார். இந்நிலையில் தான் பணிபுரிந்த நிறுவனத்திலேயே ஜெகனுக்கு வேலை வாங்கி கொடுத்தார் கார்த்திகேயன். 

 

ஜெகன்
ஜெகன்

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கார்த்திகேயன் வீட்டிலேயே ஜெகன் தங்கியுள்ளார். மேலும் ஜெகன் தன்னுடைய பாஸ்போர்ட்டை கார்த்திகேயன் மனைவி பிரேமாவிடம் கொடுத்து வைத்திருந்தார். அந்த பாஸ்போர்ட்டை திரும்ப கேட்ட போது, அதை  எங்கே வைத்தோம் என தெரியாமல் தேடி வந்தார். இது தொடர்பாக கார்த்திகேயனுக்கும் ஜெகனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கார்த்திகேயனும், ஜெகனும் நேற்று மது அருந்திய நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டிற்கு வந்து ஜெகன் படுத்து இருந்த போது, வீட்டுக்குள் நுழைந்த கார்த்திகேயன் அங்கு இருந்த இரும்பு கம்பியை எடுத்து ஜெகனைத் தாக்கினார். இதில் தலை முகம் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ஜெகன் உயிரிழந்தார். 

இது தொடர்பாக அருகில் இருந்த வீட்டுக்காரர்கள் கோவில்பாளையம் காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர். காவல் துறையினர் வருவதற்குள் தனது குடும்பத்தினருடன் கார்த்திகேயன் அங்கிருந்து தலைமறைவானார். ஜெகனின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர், உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைச் சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் தலைமறைவாக இருந்த கார்த்திகேயனை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் தனது மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியூருக்கு தப்பிச் செல்வதற்காக கார்த்திகேயன் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் சென்றுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் கார்த்திகேயனை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் வைத்து காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். பின்னர் கார்த்திகேயனை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் நீதிமன்ற காவலில் கார்த்திகேயன் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
Government employees Old Pension: அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
Embed widget