மேலும் அறிய

Sasikala In Kodanadu : கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா சிலை, மணிமண்டபம் ; பூமி பூஜை செய்த சசிகலா

கோடநாடு பங்களாவில் அமைக்கப்படும் ஜெயலலிதாவின் முழு உருவ சிலை பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அவரது பிறந்தநாளை ஒட்டி சசிகலா திறந்து வைக்க உள்ளார்.

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, ஜெயலலிதா உடன் கோடநாடு பங்களாவில் தங்குவது வழக்கம். கடைசியாக 2016-ம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா, சசிகலா இருவரும் கோடநாடு பங்களாவில் தங்கியிருந்தனர். அதன்பின் 2016 ம் ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம், 2017ல் இந்த பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம், பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை என அடுத்தடுத்து நடந்த சம்பங்களால்  சசிகலா கோடநாடு எஸ்டேட்டிற்கு செல்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு சசிகலா நேற்று கோடநாடு எஸ்டேட்டிற்கு சென்றார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், காரில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

மூன்று நாட்கள் கோடநாடு எஸ்டேட்டில் தங்கும் சசிகலா, இன்று காலை கோடநாடு பங்களாவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முழு உருவ சிலை அமைக்க பூமி பூஜை செய்கிறார். அதனை தொடர்ந்து தனது முக்கிய ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசனை நடத்துகிறார். கோடநாடு பங்களாவில் அமைக்கப்படும் ஜெயலலிதாவின் முழு உருவ சிலை பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அவரது பிறந்தநாளை ஒட்டி சசிகலா திறந்து வைக்க உள்ளார். இன்று காலை கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா சிலை மற்றும் மணி மண்டபம் அமைப்பதற்கான பூமி பூஜையில் சசிகலா கலந்து கொண்டார்.


Sasikala In Kodanadu : கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா சிலை, மணிமண்டபம் ; பூமி பூஜை செய்த சசிகலா

பின்னர் சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கோடநாடு அம்மா (ஜெயலலிதா) விற்கு பிடித்த இடம். எங்கள் இரண்டு பேர் மீதும் தொழிலாளர்கள் அன்பு வைத்திருக்கிறார்கள். இங்குள்ள தொழிலாளர்களை நாங்கள் தொழிலாளர்களாக பார்க்கவில்லை குடும்பமாக பார்த்தோம். அம்மா வரும் போது தொழிலாளர்கள் பணி செய்யும் இடத்திற்கே சென்று பேசுவோம். அது போன்று சகஜமாக அம்மா இங்கு வாழ்ந்துள்ளார். பொதுவாக குடும்பத்தில் ஒரு பெண் எப்படி இருப்பாரோ அதேபோல் கோடநாட்டில் இருப்பார். அடிக்கடி சொல்வார்கள் அந்த காலம் எனக்கொரு குழந்தை பருவத்தோடு முடிந்து விட்டது. ஆனால் அந்த நாட்களை எனக்கு திரும்ப ஞாபகப்படுத்துவது இந்த கோடநாடு தான் என கூறுவார். வெளிநாடுகளுக்கு எல்லாம் ஏன் செல்வதில்லை என கேட்பார்கள். இங்கு கோடநாடு உள்ளது. இதை விட பெரியது எதுவும் இல்லை. அம்மாவின் விருப்பப்பட்ட இடம். அதனால் அவருக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்பது நான் பெங்களூரில் இருந்து வந்த பிறகு நினைத்துக் கொண்டிருந்தேன்.

இங்குள்ள தொழிலாளர்கள் அம்மாவும் மறைந்துவிட்டார். நானும் வரவில்லையே என ஏக்கத்தில் இருந்தனர். அவர்களை பார்க்க வேண்டுமென்றும் அம்மாவிற்காக இன்று நல்ல நாள் நல்ல விஷயத்தை துவங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் காலம் காலத்திற்கும் மனிதர்கள் வாழும் வரை இந்த இடம் அம்மாவிற்கான இடம் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும். அதனால் இந்த இடத்தை தேர்வு செய்து அம்மாவின் சிலை, மணி மண்டபத்திற்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த வீட்டிற்குள் இருக்கும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு பக்கம் திரும்பும் போது, அம்மா என் உடன் இருப்பது போல் உணர்கிறேன். அம்மாவோடு இருப்பதை போல் நினைத்து நான் இருக்கிறேன். அதையும் தாண்டி அம்மாவிற்காக நிறைய செய்ய வேண்டும் அதை எல்லாம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கு வந்திருக்கிறேன். அனைவரும் இங்கு வந்து அம்மாவை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அம்மாவின் சிலை மணி மண்டபம் கட்டப்படுகிறது” என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget