மேலும் அறிய

பாசி நிறுவன உரிமையாளர் கடத்தல் வழக்கு; ஐஜி பிரமோத்குமாரை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு

ஐஜி பிரமோத் குமாரை வழக்கில் இருந்து விடுவிக்க கோரும் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு ‘பாசி போரக்ஸ் டிரேடிங்’ என்ற நிதி நிறுவனம் கடந்த 2009 ம் ஆண்டில் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனம் முதலீட்டுக்கு அதிக வட்டி அளிப்பதாகக் கூறி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டது. ஆனால், முதலீடு செய்தவர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி பணம் திரும்ப வழங்கப்படவில்லை. இதையடுத்து, முதலீட்டாளர்கள் அளித்த புகார் அடிப்படையில், திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில், இந்த வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால் சிபிஐ விசாரிக்க வேண்டும் என முதலீட்டாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ நடத்திய விசாரணையில் பாசி நிறுவனம் 58,571 பேரிடம் 930.71 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இந்த வழக்கை விசாரித்த கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2022 ம் ஆண்டில் குற்றம்சாட்டப்பட்ட மோகன்ராஜ் மற்றும் கமலவள்ளிக்கு மொத்தம் 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.171.74 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

இந்த மோசடி வழக்கில் இருந்து பாசி நிதி நிறுவன இயக்குநர்களை கடத்தி ரூ.2.50 கோடியை லஞ்சமாக பெற்றதாக, அப்போதைய மேற்கு மண்டல காவல் துறை தலைவர் .ஜி. பிரமோத்குமார், அப்போதைய சிபிசிஐடி டிஎஸ்பி ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் மோகன்ராஜ், திருநெல்வேலியைச் சேர்ந்த ஜான் பிரபாகரன், திருப்பூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்கிற தரணி செந்தில்குமார் ஆகியோர் மீது சிபிஐ தனியே வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த 2013-ம் ஆண்டே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக குற்றச்சாட்டு பதிவு செய்யபடாமல் இருந்து வந்தது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வரும் நவம்பர் 4-ம் தேதி இந்த வழக்கு விசாரணையை தொடங்க வேண்டும் எனவும், அதற்கு முன்பாக குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் குற்றசாட்டு பதிவு செய்ய வேண்டும் எனவும் கோவை சிபிஐ நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக 2 முறை குற்றச்சாட்டு பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டும், .ஜி. பிரமோத்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, இந்த வழக்கு கோவை சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கோவிந்தராஜன் முன்பு கடந்த அக்டோபர் 25 ம் தேதியன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டவர்களில் பிரோத்குமார் தவிர, மற்ற 4 பேரும் ஆஜராகினர். பிரமோத்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு வார காலம் அவகாசம் வேண்டும் என மனு தாக்கல் செய்தார். அதற்கு, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேந்திர மோகன் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் ஏற்கெனவே வாய்ப்புகள் வழங்கப்பட்டும் பிரமோத்குமார் ஆஜராகாததால், இந்த மனுவை தள்ளுபடி செய்வதோடு, பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.

இதைத்தொடர்ந்து, கால அவகாசம் கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, தற்போது கரூரில் உள்ள செய்தித்தாள் காகித நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக உள்ள ஐஜி பிரோத்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னையில் உள்ள சிபிஐ பொருளாதார குற்றப்பிரிவு டிஐஜிக்கு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து ஐஜி பிரமோத்குமார் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரானர்.

இதற்கிடையே ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத்குமார், நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் பெண் இயக்குனரை மிரட்டி பணம் பறித்ததாக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வழக்குக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும், சம்பந்தமும் கிடையாது. எனவே இந்த வழக்கில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த மனு மீது வருகிற கடந்த 31-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி அறிவித்தார். அதன் பின்னர் 3 முறை மனு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜன், ஐஜி பிரமோத் குமாரை வழக்கில் இருந்து விடுவிக்க கோரும் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் வருகிற28 ந் தேதி குறறச்சாட்டு பதிவு செய்யப்படும் என அறிவித்த நீதிபதி, அன்றைய தினம் பிரமோத் உட்பட 5 பேரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை கரண்ட் கட் - எந்தெந்த பகுதிகளில் மின்தடை? முழுப் பட்டியல் இதோ
கோவையில் நாளை கரண்ட் கட் - எந்தெந்த பகுதிகளில் மின்தடை? முழுப் பட்டியல் இதோ
Coimbatore Power Shutdown: கோவை மக்களே சீக்கிரம்... இன்று (15-05-2026)திடீர் மின் தடை.. எங்கெல்லாம் முழு விவரம்
Coimbatore Power Shutdown: கோவை மக்களே சீக்கிரம்... இன்று (15-05-2026)திடீர் மின் தடை.. எங்கெல்லாம் முழு விவரம்
மது, போதை இல்லாத தொகுதி உருவாகும்... த.வெ.க. MLA விக்னேஷின் மாஸ் அறிவிப்பு...
மது, போதை இல்லாத தொகுதி உருவாகும்... த.வெ.க. MLA விக்னேஷின் மாஸ் அறிவிப்பு...
இனி மின்கம்பி தொட்டு யானைகள் பலி இல்லை.? - கோவையில் புதிய டெக்னாலஜி...
இனி மின்கம்பி தொட்டு யானைகள் பலி இல்லை.? - கோவையில் புதிய டெக்னாலஜி...
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கோட் சூட் அரசியல் TRENDSET செய்த விஜய் ஈர்க்கப்படும் இளைஞர்கள்!
திருச்சி கிழக்கில் ஸ்டாலின் போட்டி?திமுக கூட்டத்தில் முடிவு!
’’பாட்டிலுக்கு 10 ரூபாய் ’’TASMAC-ல் தொடரும் அவலம்பரபரப்பு வீடியோ
ரஜினி பட ஷூட்டிங்கில் விபத்து 28 வயது இளைஞர் உயிரிழப்பு போலீஸ் தீவிர விசாரணை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Petrol Diesel Price Hike: விலைவாசி எல்லாம் எகிறப்போது... பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் வேதனை
Petrol Diesel Price Hike: விலைவாசி எல்லாம் எகிறப்போது... பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் வேதனை
IAS Transfer: கரூர் மாவட்டத்திற்கு புதிய கலெக்டர்! ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி அதிரடி காட்டும் முதலமைச்சர் விஜய்!
IAS Transfer: கரூர் மாவட்டத்திற்கு புதிய கலெக்டர்! ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி அதிரடி காட்டும் முதலமைச்சர் விஜய்!
மதுரை மக்களே வெளியானது கடைசி லிஸ்ட்... நாளை (16.05.26) மின்தடை ஏற்படும் பகுதிகள் இது தான் !
மதுரை மக்களே வெளியானது கடைசி லிஸ்ட்... நாளை (16.05.26) மின்தடை ஏற்படும் பகுதிகள் இது தான் !
CM Vijay Condemn: “விலை கூடும்போது கூட்டுறீங்க, குறையும்போது குறைக்குறீங்களா.?“; Petrol, Diesel - முதல்வர் விஜய் சரமாரி கேள்வி.!
“விலை கூடும்போது கூட்டுறீங்க, குறையும்போது குறைக்குறீங்களா.?“; Petrol, Diesel - முதல்வர் விஜய் சரமாரி கேள்வி.!
''முதல்வர் விஜய் தீவிர முருக பக்தர்; எங்கள் இருவருக்கும் என்ன உறவு?'' ராதன் பண்டிட் வெற்றிவேல் ருசிகரம்!
''முதல்வர் விஜய் தீவிர முருக பக்தர்; எங்கள் இருவருக்கும் என்ன உறவு?'' ராதன் பண்டிட் வெற்றிவேல் ருசிகரம்!
PM Modi: புதிய கண்டுபிடிப்புகளில் வேகமாக முன்னேறும் இந்தியா.. பிரதமர் மோடி பெருமிதம்
PM Modi: புதிய கண்டுபிடிப்புகளில் வேகமாக முன்னேறும் இந்தியா.. பிரதமர் மோடி பெருமிதம்
" ஆம்பளன்னா அப்படித் தான் இருப்பாங்க " - மாமியார் பேச்சால் மனமுடைந்த இளம் பெண் எடுத்த முடிவு
Tata Punch EMI: டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் கார லோன்ல வாங்குற ஐடியா இருக்கா.? மாத EMI எவ்வளவு வரும்.? பிளான் இதோ
டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் கார லோன்ல வாங்குற ஐடியா இருக்கா.? மாத EMI எவ்வளவு வரும்.? பிளான் இதோ
Embed widget