மேலும் அறிய

பாசி நிறுவன உரிமையாளர் கடத்தல் வழக்கு; ஐஜி பிரமோத்குமாரை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு

ஐஜி பிரமோத் குமாரை வழக்கில் இருந்து விடுவிக்க கோரும் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு ‘பாசி போரக்ஸ் டிரேடிங்’ என்ற நிதி நிறுவனம் கடந்த 2009 ம் ஆண்டில் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனம் முதலீட்டுக்கு அதிக வட்டி அளிப்பதாகக் கூறி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டது. ஆனால், முதலீடு செய்தவர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி பணம் திரும்ப வழங்கப்படவில்லை. இதையடுத்து, முதலீட்டாளர்கள் அளித்த புகார் அடிப்படையில், திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில், இந்த வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால் சிபிஐ விசாரிக்க வேண்டும் என முதலீட்டாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ நடத்திய விசாரணையில் பாசி நிறுவனம் 58,571 பேரிடம் 930.71 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இந்த வழக்கை விசாரித்த கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2022 ம் ஆண்டில் குற்றம்சாட்டப்பட்ட மோகன்ராஜ் மற்றும் கமலவள்ளிக்கு மொத்தம் 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.171.74 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

இந்த மோசடி வழக்கில் இருந்து பாசி நிதி நிறுவன இயக்குநர்களை கடத்தி ரூ.2.50 கோடியை லஞ்சமாக பெற்றதாக, அப்போதைய மேற்கு மண்டல காவல் துறை தலைவர் .ஜி. பிரமோத்குமார், அப்போதைய சிபிசிஐடி டிஎஸ்பி ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் மோகன்ராஜ், திருநெல்வேலியைச் சேர்ந்த ஜான் பிரபாகரன், திருப்பூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்கிற தரணி செந்தில்குமார் ஆகியோர் மீது சிபிஐ தனியே வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த 2013-ம் ஆண்டே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக குற்றச்சாட்டு பதிவு செய்யபடாமல் இருந்து வந்தது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வரும் நவம்பர் 4-ம் தேதி இந்த வழக்கு விசாரணையை தொடங்க வேண்டும் எனவும், அதற்கு முன்பாக குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் குற்றசாட்டு பதிவு செய்ய வேண்டும் எனவும் கோவை சிபிஐ நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக 2 முறை குற்றச்சாட்டு பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டும், .ஜி. பிரமோத்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, இந்த வழக்கு கோவை சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கோவிந்தராஜன் முன்பு கடந்த அக்டோபர் 25 ம் தேதியன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டவர்களில் பிரோத்குமார் தவிர, மற்ற 4 பேரும் ஆஜராகினர். பிரமோத்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு வார காலம் அவகாசம் வேண்டும் என மனு தாக்கல் செய்தார். அதற்கு, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேந்திர மோகன் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் ஏற்கெனவே வாய்ப்புகள் வழங்கப்பட்டும் பிரமோத்குமார் ஆஜராகாததால், இந்த மனுவை தள்ளுபடி செய்வதோடு, பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.

இதைத்தொடர்ந்து, கால அவகாசம் கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, தற்போது கரூரில் உள்ள செய்தித்தாள் காகித நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக உள்ள ஐஜி பிரோத்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னையில் உள்ள சிபிஐ பொருளாதார குற்றப்பிரிவு டிஐஜிக்கு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து ஐஜி பிரமோத்குமார் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரானர்.

இதற்கிடையே ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத்குமார், நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் பெண் இயக்குனரை மிரட்டி பணம் பறித்ததாக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வழக்குக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும், சம்பந்தமும் கிடையாது. எனவே இந்த வழக்கில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த மனு மீது வருகிற கடந்த 31-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி அறிவித்தார். அதன் பின்னர் 3 முறை மனு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜன், ஐஜி பிரமோத் குமாரை வழக்கில் இருந்து விடுவிக்க கோரும் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் வருகிற28 ந் தேதி குறறச்சாட்டு பதிவு செய்யப்படும் என அறிவித்த நீதிபதி, அன்றைய தினம் பிரமோத் உட்பட 5 பேரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Ponmudi Vs Lakshmanan : ’அமைச்சர் MRK-க்கு தடை – லஷ்மணனுக்கு எதிராக சதி’ பொன்முடி செய்யும் உள்ளடி வேலை..! திமுகவில் பரபரப்பு
’அமைச்சர் MRK-க்கு தடை – லட்சுமணனுக்கு எதிராக சதி’ பொன்முடி செய்யும் உள்ளடி வேலை..!
தமிழ் சினிமாவில் இருந்து முதல் குரல்; அஜித் லாக்கப் கொலை- மவுனம் கலைக்குமா திரையுலகம்?
தமிழ் சினிமாவில் இருந்து முதல் குரல்; அஜித் லாக்கப் கொலை- மவுனம் கலைக்குமா திரையுலகம்?
ரகசியமாக வைக்கப்பட்ட தவெக தலைவர் விஜய்யின் வருகைக்கு பின்னணி என்ன?
ரகசியமாக வைக்கப்பட்ட தவெக தலைவர் விஜய்யின் வருகைக்கு பின்னணி என்ன?
தோண்டத் தோண்ட கிளம்பும் பூதம்; பணியிடத்திலும் வம்பு செய்த நிகிதா- எதிர்ப்பு தெரிவித்த மாணவிகள்!
தோண்டத் தோண்ட கிளம்பும் பூதம்; பணியிடத்திலும் வம்பு செய்த நிகிதா- எதிர்ப்பு தெரிவித்த மாணவிகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ponmudi Vs Lakshmanan : ’அமைச்சர் MRK-க்கு தடை – லஷ்மணனுக்கு எதிராக சதி’ பொன்முடி செய்யும் உள்ளடி வேலை..! திமுகவில் பரபரப்பு
’அமைச்சர் MRK-க்கு தடை – லட்சுமணனுக்கு எதிராக சதி’ பொன்முடி செய்யும் உள்ளடி வேலை..!
தமிழ் சினிமாவில் இருந்து முதல் குரல்; அஜித் லாக்கப் கொலை- மவுனம் கலைக்குமா திரையுலகம்?
தமிழ் சினிமாவில் இருந்து முதல் குரல்; அஜித் லாக்கப் கொலை- மவுனம் கலைக்குமா திரையுலகம்?
ரகசியமாக வைக்கப்பட்ட தவெக தலைவர் விஜய்யின் வருகைக்கு பின்னணி என்ன?
ரகசியமாக வைக்கப்பட்ட தவெக தலைவர் விஜய்யின் வருகைக்கு பின்னணி என்ன?
தோண்டத் தோண்ட கிளம்பும் பூதம்; பணியிடத்திலும் வம்பு செய்த நிகிதா- எதிர்ப்பு தெரிவித்த மாணவிகள்!
தோண்டத் தோண்ட கிளம்பும் பூதம்; பணியிடத்திலும் வம்பு செய்த நிகிதா- எதிர்ப்பு தெரிவித்த மாணவிகள்!
சினிமாவில் நடிப்பதால் மட்டும் சூப்பர் ஹீரோ கிடையாது - நடிகை குஷ்பூ
சினிமாவில் நடிப்பதால் மட்டும் சூப்பர் ஹீரோ கிடையாது - நடிகை குஷ்பூ
Parandhu Po Twitter Review: பறந்து போ குழந்தைகளுக்கான  படமா?.. கலகல காமெடி படமா?.. ராம் சார் கலக்கிட்டாரு
Parandhu Po Twitter Review: பறந்து போ குழந்தைகளுக்கான  படமா?.. கலகல காமெடி படமா?.. ராம் சார் கலக்கிட்டாரு
3 BHK Twitter Review: கஷ்டப்பட்டு வீடு வாங்கி இருக்கீங்களா?.. சித்தாவுக்கு 3 BHK எப்படி இருக்கு?.. எமோஷனல் ஆன ரசிகர்கள்
3 BHK Twitter Review: கஷ்டப்பட்டு வீடு வாங்கி இருக்கீங்களா?.. சித்தாவுக்கு 3 BHK எப்படி இருக்கு?.. எமோஷனல் ஆன ரசிகர்கள்
Manual Vs Automatic Car: மேனுவலா? ஆட்டோமேடிக்கா? அதிக செலவு வெக்காத கார் எது? பராமரிப்பு எதில் ஈசி? ஏன்?
Manual Vs Automatic Car: மேனுவலா? ஆட்டோமேடிக்கா? அதிக செலவு வெக்காத கார் எது? பராமரிப்பு எதில் ஈசி? ஏன்?
Embed widget