மேலும் அறிய

ஈரோடு : மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட கருப்பன் - சிக்கியது எப்படி?

ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்று வட்டார பகுதிகளில் விவசாய பயிர்களை சேதம் செய்து வந்த கருப்பன் என்ற காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தமிழ்நாட்டில் நான்காவது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. சுமார் 1455 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த புலிகள் காப்பகம் உள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை ஆசனூர் மற்றும் சத்தியமங்கலம் என 2 வனக்கோட்டங்களாக பிரித்து மொத்தம் 10 வனச்சரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் ஆசனூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட தாளவாடி, ஜீரஹள்ளி, கேர்மாளம் வனச்சரகத்தில் காட்டு யானை, புலி, சிறுத்தை உள்ளீட்ட வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன.

வனம் மற்றும் மலை சார்ந்த தாளவாடி வட்டாரத்தில் விவசாயிகள் தென்னை, வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் தண்ணீர் மற்றும் உணவு தேடி காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமப்பகுதிக்குள் அடிக்கடி நுழைந்து வருகின்றன. இதனிடையே கடந்த ஒராண்டு காலமாக ‘கருப்பன்’ என பெயரிடப்பட்ட ஒரு காட்டு யானை அடிக்கடி கிராமப்பகுதிக்குள் நுழைந்து விளை பொருட்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். 


ஈரோடு : மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட கருப்பன் - சிக்கியது எப்படி?

இதனைத்தொடர்ந்து விவசாய பயிர்களை சேதம் செய்து வந்த "கருப்பன்" என்ற யானை பிடிக்கும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் வனத்துறையினரால் துவங்கப்பட்டது. கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி கருப்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். வனத்துறையினருக்கு சவால் விடும் வகையில் 6 முறை மயக்க ஊசி செலுத்தியும் கருப்பன் யானையை வனத்துறையினரால் பிடிக்க முடியவில்லை. கருப்பன் என்ற காவல் தெய்வத்தின் பெயரை அந்த யானைக்கு வைத்ததால் தான், பிடிக்க முடியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

வனத்துறைக்கு போக்கு காட்டி வந்த காட்டு யானையை ஆறு முறை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணிகள் தோல்வி அடைந்த நிலையில், அந்த யானைக்கு ’STR JTM 1’ ( சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஜீரஹள்ளி, தாளவாடி ஆண் யானை 1)  என்று  பெயர் மாற்றப்பட்டது. பின்னர் ஆப்ரேசன் ’STR JTM 1’ என்ற பெயரில் கடந்த சனிக்கிழமை  ஏழாவது முறையாக காட்டு யானையை பிடிக்கும் பணிகள் பணிகள் துவங்கப்பட்டது. இந்த பணிகளுக்காக சின்னத்தம்பி, மாரியப்பன் என்ற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. வனத்துறையினர் அந்த யானையை தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.


ஈரோடு : மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட கருப்பன் - சிக்கியது எப்படி?

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் யானை மகராஜன்புரம் பகுதியில் உள்ள  விவசாய தோட்டத்திற்கு வந்தது. இது குறித்து தகவலறிந்து சென்ற வனத்துறையினர் யானையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இன்று அதிகாலை ஐந்து மணி அளவில் ஓசூர் வனத்துறை மருத்துவர் பிரகாஷ் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக மருத்துவர் விஜயராகவன் ஆகியோர் அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிபட்ட காட்டு யானையை கும்கி யானைகள் சின்னத்தம்பி, மாரியப்பன் உதவியுடன் லாரியில் ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது. கருப்பன் யானைக்கு மருத்துவ பரிசோதனை செய்த பின்னர், அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று வனத்துறையினர் விடுவிக்க திட்டமிட்டுள்ளனர். ஒராண்டாக வனத்துறையினருக்கு போக்குகாட்டி வந்த கருப்பன் யானை பிடிபட்டதால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Coimbatore power cut: கோவையில் நாளை (09-06-2026) எந்தெந்த பகுதிகளில் மின் தடை? - லிஸ்டை வெளியிட்ட மின்வாரியம்
கோவையில் நாளை (09-06-2026) எந்தெந்த பகுதிகளில் மின் தடை? - லிஸ்டை வெளியிட்ட மின்வாரியம்
கோவை நீதிமன்ற வளாகத்தில் பிணமாக கிடந்த வட மாநில வாலிபர்!.. கொலை செய்யப்பட்டது அம்பலம்.
கோவை நீதிமன்ற வளாகத்தில் பிணமாக கிடந்த வட மாநில வாலிபர்!.. கொலை செய்யப்பட்டது அம்பலம்.
கோவையில் போலீசார் அதிரடி நடவடிக்கை ; பீகாரில் இருந்து கடத்திய 45 கிலோ கஞ்சா பறிமுதல் . மூன்று பேர் கைது!
கோவையில் போலீசார் அதிரடி நடவடிக்கை ; பீகாரில் இருந்து கடத்திய 45 கிலோ கஞ்சா பறிமுதல் . மூன்று பேர் கைது!
வயநாடு பேரிடர் பாடம்: தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன- செங்கோட்டையன்.
வயநாடு பேரிடர் பாடம்: தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன- செங்கோட்டையன்.

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
INDIA Alliance Meeting : ’திமுக இல்லாத இண்டியா கூட்டம்’ கேள்வி எழுப்ப கட்சிகள் திட்டம் – கலக்கத்தில் காங்கிரஸ்..?
'இண்டியா கூட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ்’ நடக்கப்போவது என்ன?
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
Bose Venkat: விஜய் ஜெயிச்சாரு.. மொத்த மானத்தையும் வாங்கிய குடும்பம்.. போஸ் வெங்கட் வேதனை!
Bose Venkat: விஜய் ஜெயிச்சாரு.. மொத்த மானத்தையும் வாங்கிய குடும்பம்.. போஸ் வெங்கட் வேதனை!
Tamilnadu Round Up: மீண்டும் குறைந்த தங்கம் விலை, பதவிக்காக ஓடும் அதிமுகவினர்? திமுக சாடல் - தமிழ்நாட்டில் இதுவரை
மீண்டும் குறைந்த தங்கம் விலை, பதவிக்காக ஓடும் அதிமுகவினர்? திமுக சாடல் - தமிழ்நாட்டில் இதுவரை
Hyundai Creta: SUV-க்களின் கிங்கிற்கு சலுகைகளை வாரி வழங்கிய ஹுண்டாய் - இன்ஜின் & EV ரெண்டிற்கும் ஆஃபர்
SUV-க்களின் கிங்கிற்கு சலுகைகளை வாரி வழங்கிய ஹுண்டாய் - இன்ஜின் & EV ரெண்டிற்கும் ஆஃபர்
Kia UpComing SUV: ஹைப்ரிட், 7 சீட்டர், EV - முன்னணி ப்ராண்ட்களுக்கு போட்டியாக 4 புது எஸ்யுவிக்கள் - கியா கார்கள்
ஹைப்ரிட், 7 சீட்டர், EV - முன்னணி ப்ராண்ட்களுக்கு போட்டியாக 4 புது எஸ்யுவிக்கள் - கியா கார்கள்
Mayor Priya: மேயர் பிரியா டிஸ்மிஸ்? ரூல்ஸ மறந்துட்டிங்களா..! கலைக்கப்படும் சென்னை மாமன்றம்? கணக்கு எங்கே?
மேயர் பிரியா டிஸ்மிஸ்? ரூல்ஸ மறந்துட்டிங்களா..! கலைக்கப்படும் சென்னை மாமன்றம்? கணக்கு எங்கே?
TN Weather Update: 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
Embed widget