மேலும் அறிய

Jothimani : ’சமுத்திரம் என பொங்கிய ஜோதிமணி’ ‘அண்ணாத்த’ செந்தில்பாலாஜி பாசத்தில் விரிசல்..?

தாயும் தந்தையுமாக இருந்து தன்னை அரசியலில் வழிநடத்துபவர் செந்தில்பாலாஜி என்று ஜோதிமணி பேசியது பாசமலர், தங்கைக்கு ஓர் கீதம், கிழக்கு சீமையிலே, சமுத்திரம், திருப்பாச்சி படங்களையெல்லாம் மிஞ்சியது

மத்திய அரசின் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்யும் வகையில் முகாம்களை நடந்த வலியுறுத்தி கடந்த கடந்த 25ஆம் தேதி கரூர் ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்து, அங்கேயே இரவு, பகலாக தர்ணா செய்தார் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி.

கடந்த அதிமுக ஆட்சியில் கலெக்டருடன் பிரச்னை செய்தார் சரி, இப்போது காங்கிரசின் கூட்டணி கட்சியான திமுக-தான் தமிழகத்தில் ஆளுங்கட்சி. அப்படியிருக்கையில் ஏன் இப்படி ஒரு போராட்டத்தை ஜோதிமணி முன்னெடுக்க வேண்டும் ? ஆட்சியரிடமோ அல்லது மாவட்ட அமைச்சரான செந்தில்பாலாஜியிடமோ ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் அதுவே போதுமானதாக இருக்குமே என அவரது கட்சியினரே வாய்விட்டு கேட்கும் அளவுக்கு போய்விட்டது அந்த தர்ணா போராட்டம்.

Jothimani : ’சமுத்திரம் என பொங்கிய ஜோதிமணி’ ‘அண்ணாத்த’ செந்தில்பாலாஜி பாசத்தில் விரிசல்..?
ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்யும் ஜோதிமணி

இந்த போராட்டத்தின் மூலம் அண்ணன் – தங்கையாக பழகிய அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் ஜோதிமணிக்கும் இடையே பாசத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது ’கைப் புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை’ என்பது மாதிரி பளிச்சென பட்டவர்தமனாக தெரியவந்திருக்கிறது.  கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் தம்பிதுரையும், திமுக கூட்டணி சார்பில் ஜோதிமணியும் கரூரில் நேரடியாக களம் கண்டனர்.Jothimani : ’சமுத்திரம் என பொங்கிய ஜோதிமணி’ ‘அண்ணாத்த’ செந்தில்பாலாஜி பாசத்தில் விரிசல்..?

ஆட்சி, அதிகாரம், பண பலம், தனிப்பட்ட செல்வாக்கு என்ற சர்வ வல்லமை படைத்த தம்பிதுரையை ஜோதிமணி வெல்ல அவருக்கு பக்க பலமாக நின்றவர் தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி. அதன்பிறகு நடைபெற்ற அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில்  செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக நின்று பிரச்சாரம் செய்தார் ஜோதிமணி. எங்கே சென்றாலும் இருவரும் ஒன்றாகவே சென்றனர். ஒரே ஸ்கூட்டரில் இருவரும் பயணம் செய்து கட்சி பணிகளையும் பிரச்சார பணிகளையும் பார்த்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.Jothimani : ’சமுத்திரம் என பொங்கிய ஜோதிமணி’ ‘அண்ணாத்த’ செந்தில்பாலாஜி பாசத்தில் விரிசல்..?

தாயும் தந்தையுமாக இருந்து தன்னை அரசியலில் வழிநடத்துபவர் செந்தில்பாலாஜி என்று குறிப்பிட்டு ஜோதிமணி பேசியது பாசமலர், தங்கைக்கு ஓர் கீதம், கிழக்கு சீமையிலே, சமுத்திரம், திருப்பாச்சி என தங்கை சென்டிமெண்ட் படங்களையெல்லாம் மிஞ்சியது.

இப்படி ’உடன்பிறப்பு’ என  இருந்த ‘அண்ணாத்த’ செந்தில்பாலாஜி அமைச்சரான பிறகு இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. திமுக ஆட்சி அமைத்த பிறகு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஜோதிமணி திமுகவிற்காக சரிவர பிரச்சாரம் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை திமுகவினர் அடிக்கடி முன் வைக்க, அதுவே பிரச்னைகளுக்கு தூபம் போட்டது.Jothimani : ’சமுத்திரம் என பொங்கிய ஜோதிமணி’ ‘அண்ணாத்த’ செந்தில்பாலாஜி பாசத்தில் விரிசல்..?

அதன்பிறகு கரூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளிலும், கட்சி கூட்டங்களிலும் செந்தில்பாலாஜியையும் – ஜோதிமணியையும் ஒன்று சேர்ந்து பார்க்க முடியவில்லை. அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து பயணித்த அந்த ’பாச’ வாகனமான ஸ்கூட்டரையும் எங்கேயும் காணமுடியவில்லை. அதனால், அவர்கள் இருவருக்குள்ளும் ஏதோ பிரச்னை ஏற்பட்டுள்ளது என்பது மட்டும் அரசல்புரசலாக தெரிந்தது. ஆனால், அந்த அரசல்புரசல், ஜோதிமணி ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டபோது அதிரடியாக வெளியே தெரிந்தது.Jothimani : ’சமுத்திரம் என பொங்கிய ஜோதிமணி’ ‘அண்ணாத்த’ செந்தில்பாலாஜி பாசத்தில் விரிசல்..?

போராட்டத்தை முடித்த நிலையில், ஜோதிமணி போட்ட டிவிட்டர் பதிவில் ‘மக்கள் நலனில் அக்கறை உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி, கே.என்.நேரு, செல்வப்பெருந்தகை, திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோருக்கு நன்றி என குறிப்பிட்டிருந்தார். ஆனால், மாவட்ட அமைச்சரும் வார்த்தைக்கு வார்த்தை அண்ணன் அண்ணன் என கூப்பிட்ட செந்தில்பாலாஜியின் பெயரையும் அவர் நிதானமாக சொல்ல தவிர்த்துவிட்டார்.

ஜோதிமணி போராட்டம் நடத்திய அதே நாளில் அமைச்சர் செந்தில்பாலாஜி கரூரில் நடைபெற்ற அரசு விழாவில் ஆட்சியர் பிரபு சங்கரோடு பங்கேற்றார். ஆனால், அவர் ஜோதிமணியை சந்திக்கவோ அவரை சமாதானப்படுத்தவோ எந்த முயற்சியையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

T20 World Cup IND vs AFG Match Highlights: சூப்பர் 8 சுற்று.. ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி!
T20 World Cup IND vs AFG Match Highlights: சூப்பர் 8 சுற்று.. ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி!
Chennai Rains: சென்னையில் திடீரென வரம் கொடுக்கும் வருணபகவான்.. ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம் பகுதிகளில் கனமழை..!
சென்னையில் திடீரென வரம் கொடுக்கும் வருணபகவான்.. ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம் பகுதிகளில் கனமழை..!
Arvind Kejriwal: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.. ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு..!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.. ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு..!
ADMK: இரண்டாவது மிகப்பெரிய கள்ளச் சாராய மரணம் இது.. திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
இரண்டாவது மிகப்பெரிய கள்ளச் சாராய மரணம் இது.. திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

GV Prakash on Kallakurichi kalla sarayam : ”இழப்பீடுகள் எதையும் ஈடுசெய்யாது” ஜி.வி.பிரகாஷ் ஆதங்கம்Vijay at Kallakurichi : கள்ளக்குறிச்சியில் விஜய்! நேரில் வந்து ஆறுதல்Arvind Kejriwal bail : கெஜ்ரிவாலுக்கு ஜாமின்! எப்போது வெளியே வருகிறார்? கொண்டாட்டத்தில் ஆம் ஆத்மிMK Stalin on Kallasarayam  : ”விஷச்சாராயம் எப்படி வந்துச்சி..களத்துக்கு போ உதய்” ஆணையிட்ட ஸ்டாலின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
T20 World Cup IND vs AFG Match Highlights: சூப்பர் 8 சுற்று.. ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி!
T20 World Cup IND vs AFG Match Highlights: சூப்பர் 8 சுற்று.. ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி!
Chennai Rains: சென்னையில் திடீரென வரம் கொடுக்கும் வருணபகவான்.. ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம் பகுதிகளில் கனமழை..!
சென்னையில் திடீரென வரம் கொடுக்கும் வருணபகவான்.. ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம் பகுதிகளில் கனமழை..!
Arvind Kejriwal: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.. ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு..!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.. ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு..!
ADMK: இரண்டாவது மிகப்பெரிய கள்ளச் சாராய மரணம் இது.. திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
இரண்டாவது மிகப்பெரிய கள்ளச் சாராய மரணம் இது.. திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
Pro Tem Speaker: மக்களவையின் இடைக்கால சபாநாயகராக மஹ்தப் நியமனம்- குடியரசுத் தலைவர் உத்தரவு
Pro Tem Speaker: மக்களவையின் இடைக்கால சபாநாயகராக மஹ்தப் நியமனம்- குடியரசுத் தலைவர் உத்தரவு
Kallakurichi Hooch Tragedy: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு..FIR- இல் இருக்கும் பரபரப்பு தகவல் என்ன?
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு..FIR- இல் இருக்கும் பரபரப்பு தகவல் என்ன?
NEET Row : ”நீட் தேர்வு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் தப்ப முடியாது” - கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தது என்ன?
NEET Row : ”நீட் தேர்வு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் தப்ப முடியாது” - கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தது என்ன?
Kallakurichi Liquor Death: கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் நடிகர் விஜய்.. கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல்..!
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் நடிகர் விஜய்.. கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல்..!
Embed widget