மேலும் அறிய

'இந்தாண்டு மேற்கு மண்டலத்தில் 155 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' - ஐஜி சுதாகர் பேட்டி

"கோவை காவல் சரகத்தில் 30 சதவீதம் கொலை வழக்குகள் குறைந்துள்ளது. மேற்கு மண்டலத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது."

மேற்கு மண்டலத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது எனவும், சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாகவும் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர், சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர், "இந்தாண்டு மேற்கு மண்டலத்தில் நடந்த பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. சிறப்பாக பணி செய்தவர்களுக்கு பாராட்டு வழங்கப்பட்டது. கடந்த வாரம் கோவை வந்த டிஜிபி சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என கூறினார்.

கடந்த 2021 ம் ஆண்டில் கோவை காவல் சரகத்தில் 142 கொலை வழக்குகள் பதிவாகின. ஆனால் இந்தாண்டு 91 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. ஈரோட்டில் பாதிக்கு பாதியாக கொலை வழக்குகள் குறைந்துள்ளது. கோவை காவல் சரகத்தில் 30 சதவீதம் கொலை வழக்குகள் குறைந்துள்ளது. மேற்கு மண்டலத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. போக்சோ வழக்குகளை பொருத்தவரை கடந்தாண்டு 17 வழக்குகளில் தீர்ப்பு பெறப்பட்டது. இந்தாண்டு 87 வழக்குகளில் தீர்ப்பு வந்துள்ளது. கஞ்சா தொடர்பாக 4 மாவட்டங்களில் 1400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 28 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இந்தாண்டு மேற்கு மண்டலத்தில் 155 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' - ஐஜி சுதாகர் பேட்டி

கஞ்சா இல்லாத கிராமங்கள் உருவாக்கும் முயற்சியாக 1211 கிராமங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டு, 721 கிராமங்கள் கஞ்சா இல்லாத கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளது. கஞ்சா இல்லாத நகரம் என்ற இலக்கை விரைவில் அடைவோம். கடந்தாண்டு 9 ஆதாய கொலைகள் பதிவான நிலையில், இந்தாண்டு 4 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. குற்றங்கள் குறைந்துள்ளது. காவல் துறையினர் சிறப்பாக பணியாற்றி உள்ளனர். ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் மூலம் பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதனால் பல இடங்களில் பெண் குழந்தைகள் பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவித்தனர்.10 வழக்குகள் ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் மூலம் வந்துள்ளது. 

குட்கா மற்ற இடங்களில் இருந்து வருகிறது. இது தொடர்பாக 2730 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 44 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்கா கடத்தி வர புதிது புதிதாக முயற்சி செய்து வருகின்றனர். எல்லா லாரிகளையும் சோதனை செய்ய முடியாது. தகவல் அடிப்படையில் சோதனை செய்து குட்கா பறிமுதல் செய்யப்படுகிறது. இந்தாண்டு மேற்கு மண்டலத்தில் 155 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இல்லை" எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
Kuldeep Yadav Record: அனில் கும்ப்ளேவின் சாதனையை போட்டு நொறுக்கிய குல்தீப் யாதவ்; 3-வது ஒருநாள் போட்டியில் அசத்தல்
அனில் கும்ப்ளேவின் சாதனையை போட்டு நொறுக்கிய குல்தீப் யாதவ்; 3-வது ஒருநாள் போட்டியில் அசத்தல்
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
Kuldeep Yadav Record: அனில் கும்ப்ளேவின் சாதனையை போட்டு நொறுக்கிய குல்தீப் யாதவ்; 3-வது ஒருநாள் போட்டியில் அசத்தல்
அனில் கும்ப்ளேவின் சாதனையை போட்டு நொறுக்கிய குல்தீப் யாதவ்; 3-வது ஒருநாள் போட்டியில் அசத்தல்
Putin's Indian Dinner: முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
IND vs SA  3rd ODI: புயலாய் தொடங்கி புஸ்வானமாய் போன தெ.ஆப்பிரிக்கா.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மேஜிக் நடக்குமா?
IND vs SA 3rd ODI: புயலாய் தொடங்கி புஸ்வானமாய் போன தெ.ஆப்பிரிக்கா.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மேஜிக் நடக்குமா?
Embed widget