மேலும் அறிய

Marudamalai Temple: மருதமலை, அனுவாவி கோயில்களுக்கு பக்தர்கள் செல்ல நிபந்தனை விதிப்பு - காரணம் என்ன..?

வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இந்த கோவில்களுக்கு செல்லும் வழிப்பாதைகளிலும், படிக்கட்டிகளிலும் காட்டு யானைகள் அடிக்கடி தென்படும் நிலையில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மருதமலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மற்றும் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆகியவை அமைந்துள்ளன. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இந்த கோவில்களுக்கு செல்லும் வழிப்பாதைகளிலும், படிக்கட்டிகளிலும் காட்டு யானைகள் அடிக்கடி தென்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளில் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் மருதமலை அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மருதமலை சுப்பிரமணியர் சுவாமி திருக்கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வனத்துறையினர் நிபந்தனை விதித்துள்ளனர். இதுதொடர்பாக கோவை வனச்சரகர் அருண்குமார், பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் நேரத்தை மாற்ற கோவில் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், அக்கோவிலுக்கு சென்று வர வனத்துறையினர் படிக்கட்டுகள் மற்றும் சாலைகள் அமைக்க வனத்துறை நிலத்தை குத்தகைக்கு வழங்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதால் கோவில் படிகட்டுகளை கடந்து யானைகள் தண்ணீர் குடிக்க செல்கின்றன எனவும், மருதமலை அடிவாரத்தில் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கோவில் படிக்கட்டுகள் மற்றும் சாலைகள் வனப்பகுதிக்குள் செல்வதால் பக்தர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளதால், மனித உயிர் சேதங்களை தவிர்க்க நடைபாதை மற்றும் சாலைகளில் செல்லும் நேரத்தினை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும், நடந்து செல்லவும், இருசக்கர வாகனங்களில் செல்லவும் அனுமதிக்காமல் கோவில் வாகனத்தில் அழைத்து செல்ல வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு பலகை வைக்கவும், கண்காணிப்பு ஆட்கள் நியமிக்கவும் அரிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறி மனித யானை மோதல் ஏற்பட்டால் கோவில் நிர்வாகமே பொறுப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல பெரியதடாகம் பகுதியில் உள்ள அனுவாவி சுப்பிரமணியர் சுவாமி திருக்கோவில் நிர்வாகத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், கோவிலுக்கு செல்லும் படிக்கட்டுகள் உள்ள பகுதி யானைகளின் முக்கியமான வழித்தடமாக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.. பக்தர்கள் கோவிலுக்கு செல்ல காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டும் அனுமதிக்க வேண்டுமெனவும், இதுகுறித்து விழிப்புணர்வு பலகை வைக்கவும், கண்காணிப்பு ஆட்கள் நியமிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறி மனித யானை மோதல் ஏற்பட்டால் கோவில் நிர்வாகமே பொறுப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்தவர் குமார். 32 வயதான இவர் தனது மனைவி கல்பனா (27) மற்றும் 3 வயது மகனுடன் மருதமலை நேற்று மாலை 5 மணியளவில் மருதமலை அருகேயுள்ள வனப்பகுதிக்கு விறகு சேகரிக்க மனைவி மற்றும் மகனுடன் சென்றார். விறகு சேகரித்து விட்டு மூன்று பேரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கல்பனா விறகுடன் முன்னால் சென்று கொண்டிருந்தார். குமார் மகனை தூக்கிக் கொண்டு பின்னால் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வனப்பகுதியில் இருந்த ஒற்றை ஆண் காட்டு யானை குமாரை பின்புறமாக வந்து தாக்கியது. யானை தாக்கியதில் சிறுவன் தூக்கி எறியப்பட்ட நிலையில், குமாரை யானை மிதித்துக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

Join Us on Telegram: https://t.me/abpnaduofficial

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
TN WEATHER: அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Embed widget