மேலும் அறிய

Pets: கோவையில் செல்லப்பிராணிகள் உடல் தகனம் செய்ய மின் மயானம் துவக்கம்

தனியார் அமைப்பு மூலமாக கோவையில் 35 லட்சம் மதிப்பீட்டில் வீட்டில் வளர்க்கும் நாய், பூனைகளை இங்கு தகனம் செய்து கொள்ளும் வகையில் இந்த மின்மயானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளையம் பகுதியில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கான மின்மயானத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைத்தார்.

கோவை மாவட்டம் சீர்நாயக்கன்பாளையம் பகுதியில் செல்லப்பிராணிகளான நாய் மற்றும் பூனைகளுக்கான எரியூட்டும் மின்மயானத்தின் துவக்க விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் பிரதாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான கல்வெட்டை திறந்து வைத்த கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, செல்லப்பிராணிகளுக்காக அமைக்கப்பட்ட பின்னர் தகன மேடைகளை பார்வையிட்டனர்.


Pets: கோவையில் செல்லப்பிராணிகள் உடல் தகனம் செய்ய மின் மயானம் துவக்கம்

இதனை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி  குமார் பாடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “உயிரிழக்கும் நாய்கள் மற்றும் பூனைகளுக்களை தகனம் செய்ய மின் மயானம் தனியார் அமைப்பு மூலமாக, கோவையில் 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. தங்களது வீட்டில் வளர்க்கும் நாய், பூனைகளை இங்கு தகனம் செய்து கொள்ளும் வகையில் இந்த மின்மயானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு சாலையில் உயிரிழக்கும், தெரு நாய்களை, இலவசமாக தகனம் செய்து கொள்ளவும், ஒரு நாளைக்கு ஆறு நாய்கள் எரியூடப்படும் வகையில், உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மின் மயானம் தற்போது முழுக்க முழுக்க எல்பிஜி கேஸ் மூலமாக, இறந்த விலங்குகளின், முழு கழிவுகளும், முற்றிலும் எரிக்கப்பட்டு, அதன் மாசு, வெளியே போகாமலும் பொதுமக்களுக்கு எந்தவித சுகாதார முறைகேடுகளும் இல்லாமல், மேலே புகை செல்ல வடிவமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.


Pets: கோவையில் செல்லப்பிராணிகள் உடல் தகனம் செய்ய மின் மயானம் துவக்கம்

வீட்டு நாய்கள் பூனைகளை எரியூட்ட எவ்வளவு செலவாகும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “அதனை நாங்கள் பரிசீலனை செய்து வருகிறோம். எல்பிஜி கேஸ் செலவு பிற செலவுகளை கணக்கிட்டு அதற்கான கட்டண தொகை அறிவிக்கப்படும். மாநகரில் சாலை ஓரங்களில் உயிரிழக்கும் நாய், பூனைகளை, யார் வேண்டுமானாலும் இங்கு கொண்டு வரலாம். தெரு நாய்களை  மாநகராட்சி பணியாளர்கள் மூலமாக நாய்கள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றதில், தோராயமாக ஒரு லட்சத்திற்கும் மேல் உள்ளது என்பது தெரியவந்துள்ளது. தெரு நாய்கள் இயற்கைக்கு பாதிப்பு இல்லாமல், இந்த மின் மயானத்தில் தகனம் செய்வதால், பொதுமக்கள் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் இயற்கை பிரியர்கள் மத்தியிலும்  நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இதே நிலை தொடர்ந்தால், கோவை புறநகர் பகுதியிலும் மின்மயானம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்” எனப் பதிலளித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
ஒரே நாளில் 8 பேர் படுகொலை; அதலபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு- முதல்வரை விளாசித் தள்ளிய அன்புமணி!
ஒரே நாளில் 8 பேர் படுகொலை; அதலபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு- முதல்வரை விளாசித் தள்ளிய அன்புமணி!
லியோ படத்தில் 35 லட்சம் மோசடி செய்த தினேஷ் மாஸ்டர்...பேட்டா கேட்டவரை உதைத்து மிரட்டிய வீடியோ வைரல்
லியோ படத்தில் 35 லட்சம் மோசடி செய்த தினேஷ் மாஸ்டர்...பேட்டா கேட்டவரை உதைத்து மிரட்டிய வீடியோ வைரல்
Embed widget