மேலும் அறிய

திருப்பூரில் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி - 3 நாட்களுக்கு பள்ளியை மூட உத்தரவு!

நெசவாளர் காலணி பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான ஆசிரியர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. இந்நிலையில் தொற்று பரவல் குறைந்த வரும் நிலையில், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த ஒன்றாம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கப்பட்டன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்காத வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆசிரியர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது. சுகாதாரத் துறை சார்பில் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி திருப்பூர் நெசவாளர் காலனி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அப்பள்ளியில் பணி புரியும் 26 ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மேலும் இரண்டு ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. மேலும் பத்தாம் வகுப்பு பயிலும் 59 மாணவ, மாணவிகளுக்கு இன்று சுகாதாரத் துறையினர் கொரோனா பரிசோதனை செய்தனர். ஒரே பள்ளியில் மூன்று ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மூன்று நாட்களுக்கு அப்பள்ளியை மூட திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பள்ளி வளாகம் கட்டுப்படுத்தப்பட்ட பள்ளி வளாகமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


திருப்பூரில் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி - 3 நாட்களுக்கு பள்ளியை மூட உத்தரவு!

நெசவாளர் காலணி பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான ஆசிரியர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் ஊத்துக்குளி அரசு பள்ளி அசிரியர் ஒருவருக்கும், தாராபுரம் கொளத்துப்பாளையம் அரசு பள்ளியில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியருக்கு நேற்றும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைப்பிடிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், மதிய உணவு இடைவெளியின் போது மாணவர்கள் ஒன்றாக அமர்ந்திருப்பதை தடுக்க ஆசிரியர்கள் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. காய்ச்சல் அறிகுறி உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget