மேலும் அறிய

செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்களை எரித்தாரா கோவை மேயரின் தம்பி..? - நடந்தது என்ன?

கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு பின்னர் கோவை மேயர் கல்பனாவின் தம்பி குமார் சில ஆவணங்களை எரித்ததாக ஒரு வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றது.

கோவை மாநகராட்சி மேயராக கல்பனா ஆனந்த குமார் இருந்து வருகிறார். இவரது தம்பி குமார் மணியகாரன்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் அமலாக்கத்துறையினரால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட பின்னர், கோவை மணியகாரன்பாளையம் பகுதியில் உள்ள வீட்டில் மேயர் கல்பனாவின் தம்பி குமார் சில ஆவணங்களை எரித்ததாக வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், அது  தொடர்பான ஆவணங்கள் எரிக்கப்பட்டதாகவும் தகவல் பரவியுள்ளது. வீடியோ காட்சிகள் வெளியானதுடன் ஒரு புகைப்படமும் வெளியாகியுள்ளது. அதில் எரிந்த நிலையில் உள்ள காகித்தத்தில் 60 இலட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு, மூன்று மாதம் கழித்து கிரயம் செய்த பின்னர் காசோலையை திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என உறுதி கூறுகிறேன் என்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. இதனால் பணபரிவர்த்தைக்கான ஆவணங்கள் எரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகைபடம் மற்றும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றது.

இதுகுறித்து மேயர் கல்பனாவின் தம்பி குமாரிடம் கேட்ட போது, ”இது தவறான தகவல். குப்பைகள் மட்டுமே எரிக்கபட்டது. ஆவணங்கள் எரிக்கப்பட்டதாக கூறப்படுவது தவறு. இது குறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளோம்” எனத் தெரிவித்தார்.


செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்களை எரித்தாரா கோவை மேயரின் தம்பி..? - நடந்தது என்ன?

ஏற்கனவே குமாரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சரண்யா என்பவர் மேயர் கல்பனா குடும்பத்தினர் மீது துடியலூர் காவல் நிலையத்திலும், கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திலும் புகார் அளித்திருந்தார். அதில் கடந்த இரு மாதங்களாக கோவை மாநகர மேயர் கல்பனாவும், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அவரது குடியிருப்பில் தங்காமல், தனது தம்பி குமாரின் இல்லத்தில் கணவருடன் வசித்து வருகிறார். மேயர் கல்பனா தங்கியிருக்கும் அந்தக் காம்பவுண்டில் நான்கு வீடுகள் இருக்கும் நிலையில், இரண்டு வீடுகளில் அவர்களது உறவினர்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக மேயர் கல்பனா இந்த இல்லத்தில் வசித்து வரும் நிலையில், அந்த காம்பவுண்டில் இருந்து சரண்யாவை காலி செய்ய வைக்க தொடர்ச்சியாக பல்வேறு தொல்லைகள் கொடுத்து வருவதாக மேயர் கல்பனா குடும்பத்தினர் மீது சரண்யா குற்றம் சாட்டியிருந்தார்.

சரண்யா வீட்டை காலி செய்ய வைப்பதற்காக அழுகிய பொருட்களை வீசுவதாகவும், சமையலறை அருகில் சிறுநீரை பிடித்து ஊற்றுவதாகவும் புகார் எழுந்த நிலையில், அது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் புகார் தெரிவித்த கோபிநாத் சரண்யாவின் கார் மர்மமான முறையில் எரிந்தது. மேயர் கல்பனாவின் குடும்பத்தினர் மீது அடுத்தடுத்து புகார்கள் குவிந்து வரும் நிலையில், தற்போது குமார் ஆவணங்களை எரித்ததாக வீடியோ காட்சிகள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தீயில் சிக்கிய கார், உயிர் தப்பிய டிரைவர்... கோவை அவிநாசி சாலையில் பரபரப்பு...
தீயில் சிக்கிய கார், உயிர் தப்பிய டிரைவர்... கோவை அவிநாசி சாலையில் பரபரப்பு...
Ramzan: ரம்ஜான் சிறப்பு தொழுகை... கோவையில் திரண்ட மக்கள்...
Ramzan: ரம்ஜான் சிறப்பு தொழுகை... கோவையில் திரண்ட மக்கள்...
100 கிலோ கஞ்சா பறிமுதல்... கஞ்சா கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
100 கிலோ கஞ்சா பறிமுதல்... கஞ்சா கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
கோவையில் சைபர் குற்றம்: டிஜிட்டல் கைது மிரட்டல் மூலம் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் ரூ.40 லட்சம் மோசடி!
கோவையில் சைபர் குற்றம்: டிஜிட்டல் கைது மிரட்டல் மூலம் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் ரூ.40 லட்சம் மோசடி!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |
Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: போட்டி விருப்பமனுவே இல்லை.. திமுக-வில் சீட் கன்ஃபார்மான 7 பேர் யார்? யார்?
TN Election 2026: போட்டி விருப்பமனுவே இல்லை.. திமுக-வில் சீட் கன்ஃபார்மான 7 பேர் யார்? யார்?
Annual Exam Time Table: தமிழ்நாட்டில் 1 - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது ஆண்டுத் தேர்வு? வெளியான அட்டவணை!
Annual Exam Time Table: தமிழ்நாட்டில் 1 - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது ஆண்டுத் தேர்வு? வெளியான அட்டவணை!
Lakshmir Bhandar: பெண்களே! ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையில் ரூ.500 அதிகரிப்பு - மம்தா பானர்ஜி வாக்குறுதி
Lakshmir Bhandar: பெண்களே! ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையில் ரூ.500 அதிகரிப்பு - மம்தா பானர்ஜி வாக்குறுதி
மாமனார் - மருமகள் கள்ளத் தொடர்பு !! 5 மாத குழந்தைக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்
மாமனார் - மருமகள் கள்ளத் தொடர்பு !! 5 மாத குழந்தைக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்
Petrol Price Hike: ஐயோ, பயந்த மாதிரியே ஆயிடுச்சே.! இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வு; எவ்வளவு தெரியுமா.?
ஐயோ, பயந்த மாதிரியே ஆயிடுச்சே.! இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வு; எவ்வளவு தெரியுமா.?
ரஜினிகாந்துடன் சண்டை போட்டாரா மனோரமா? 96ல் நடந்த பரபரப்பு சம்பவம்!
ரஜினிகாந்துடன் சண்டை போட்டாரா மனோரமா? 96ல் நடந்த பரபரப்பு சம்பவம்!
Diesel Price Hike India: தொழில்துறை டீசல் விலையை உயர்த்திய ஐஓசி; அதுக்காக இவ்வளவா.? மக்களுக்கு மறைமுக பாதிப்பு.?
தொழில்துறை டீசல் விலையை உயர்த்திய ஐஓசி; அதுக்காக இவ்வளவா.? மக்களுக்கு மறைமுக பாதிப்பு.?
Happy Ramadan Wishes 2026: ரம்ஜான் வாழ்த்துகள் அனுப்பனுமா? - இதோ உங்களுக்காக கொட்டி கிடக்குது எது வேணுமோ எடுத்துக்கோங்க
ரம்ஜான் வாழ்த்துகள் அனுப்பனுமா? - இதோ உங்களுக்காக கொட்டி கிடக்குது எது வேணுமோ எடுத்துக்கோங்க
Embed widget