மேலும் அறிய

ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க செயற்கை நுண்ணறிவு கேமரா மூலம் கண்காணிப்பு பணிகள் துவக்கம்

தமிழக அரசு 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ரயில்பாதைகளின் அருகில் 12 இடங்களில் உயர் கோபுரங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தெர்மல் கேமராக்களை பொருத்தும் பணியை மேற்கொண்டு வந்தது.

கோவை மாவட்டம் மதுக்கரை முதல் கேரள மாநிலம் வாளையார் வரை சுமார் 21 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதிகளின் வழியாக இரண்டு ரயில்பாதைகள் உள்ளன. கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லக்கூடிய வழித்தடம் "ஏ" லைன் என்றும், கேரளாவில் இருந்து கோவைக்கு வரக்கூடிய வழித்தடம் "பி" லைன்  என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்பாதைகளில் தினமும் ஏராளமான ரயில்கள் சென்று வரும் நிலையில், இரவு நேரங்களில் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது தொடர்கதையாக இருந்து வருகின்றது. இந்நிலையில் யானைகள் ரயில் மோதி உயிரிழப்பதை தடுக்க, யானை நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் சுரங்கப்பாதை அமைக்கபட்டது.  இதனுடைய மற்றுமொரு முயற்சியாக யானைகள் நடமாட்டத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் விதமாக செயற்கை நுண்ணறிவு மற்றும் தெர்மல்  கேமராக்களை  பொறுத்த வனத்துறை முடிவு செய்தது.

இதற்காக தமிழக அரசு 7  கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ரயில்பாதைகளின் அருகில் 12 இடங்களில் உயர் கோபுரங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தெர்மல் கேமராக்களை பொருத்தும் பணியை மேற்கொண்டு வந்தது. இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இன்று வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு ஆகியோர் வனத்துகை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.இதனை தொடர்ந்து கட்டுப்பாட்டு மையத்தையும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் திறத்து வைத்தார். பின்னர் பேசிய அவர், ”வாளையார், ஆனைகட்டி சோளக்கரை இருட்டுப்பள்ளம் பகுதிகள்  யானைகள் நடமாட்டம் எப்போதும்  இருக்கும். யானைகளின் வழித் தடங்கல் ஏற்படுவதன் காரணமாக மனித விலங்கு மோதல் நடைபெறுகிறது. யானைகள் வழித்தடத்தில் ஏற்படும் மாற்றம், அதன்  உணவு முறையிலும் மாற்றம் ஏற்படுகிறது.

Here is a short film on Madukkarai Project in Tamil Nadu. The AI enabled Project aims to prevent death of elephants on railways tracks in the area. Kudos to the TN Forest team of the Coimbatore Division for working 24*7 and executing the task flawlessly #MadukkaraiElephantProject pic.twitter.com/ojsmyQQsOg

— Supriya Sahu IAS (@supriyasahuias) February 9, 2024

">

கோவை வனக்கோட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 928 முறை வனத்தை விட்டு யானைகள் வெளியேறியுள்ளது. ரயில் விபத்தில் யானைகள் உயிரிழப்பது கவலைக்குரியது. சோளக்கரை பகுதியில்  இரண்டு ரயில் பாதைகளின் நடுவில் உள்ள பகுதிக்கு யானைகள் தண்ணீர் குடிக்க வருகிறது. அவ்வாறு வரும்போது விபத்து ஏற்பட்டதில் 11 யானைகள் இரயில் மோதி உயிரிழந்துள்ளது. சுரங்க பாதை ஏற்படுத்தினாலும் அது நிரந்தரதீர்வு இல்லை. யானைகளின்  நடமாட்டத்தை  24 மணி நேரம் கண்காணிக்க நவீன செயற்கை நுண்ணறிவு கேமரா நிறுவ 7 கோடியே 24 லட்சம் செலவு செய்யப்பட்டு கேமிராக்கள் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் யானைகளை கண்காணிக்க முடியும். 2023ல் துவங்கி தற்போது பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

ஆண்டுக்கு 1000 யானைகள் ரயில்வே தண்டவாளத்தைக் கடந்து செல்கிறது. 3 ஆண்டுகளில் 3 ஆயிரம் யானைகள் ரயில்வே தண்டவாளத்தைக் கடந்து சென்றுள்ளது. யானைகள் கடக்கும் இடங்களில் 12 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் பாதை அருகே யானைகள் வரும்போது, இந்த கேமிரா கண்காணிப்பு மையத்திற்கு உடனடியாக தகவல் கொடுக்கிறது. விலங்குகள் நடமாட்டம் குறித்து கண்காணித்து ரயில் ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.  செயற்கை நுண்ணறிவு மூலம் விபத்தை தடுப்பது,  தனிப்பட்ட யானைகளின் நடவடிக்கைகளை கண்டறிவது போன்ற பயன்பாடுகள் இந்த கேமரா மூலம் மேற்கொள்ள இயலும். யானைகளை காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இத்திட்டம் இதுவரை  யாரும் அறிமுகப்படுத்தாத திட்டம், மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளையும் காக்கும் அரசு தற்போதைய அரசு” எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget